முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவா சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடுகள்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு


இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் ஏதுவாக கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கோவா மாநிலத்திற்கே உரிய மகிழ்வையும், கொண்டாட்ட உணர்வையும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடுபரவலாக ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.


நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் தங்கள் வருகை உவகை அளிப்பதாக அமையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் எவ்விதமான குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இந்த திரைப்பட விழாவிற்கான இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக பங்கேற்பாளர்கள் திரைப்பட விழாவின் மிகச் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.


தேசிய திரைப்பட அபிவிருத்திக் கழக நிர்வாக இயக்குனர் ரவீந்திர பாக்கர், இம்முறை இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான திரைக்கலை வல்லுனர்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.

முன்னதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடக்க நிகழ்விற்கு முன்னதாகவே திரைப்பட விழாவின் அனைத்து நிகழ்வுகளும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்



53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தங்கமயில் விருது பெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் உள்ளன.

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுபெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் போட்டியில் இறங்குகின்றன. திரைப்படத் துறையில் அழகுணர்ச்சி மற்றும் அரசியலில் வளர்ந்து வரும் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், 12 சர்வதேச திரைப்படங்களும், 3 இந்திய திரைப்படங்களும் இந்த போட்டியில் இடம்பெறும்.


முதன் முறையாக தங்கமயில்  விருது வழங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து இந்த விருது ஆசியாவின் திரைப்பட விருதுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் விருதாக உள்ளது. இந்த ஆண்டு போட்டியின் போது, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடுமையான  பணியை இஸ்ரேல் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான நாடவ் லேப்பிட், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஜின்கோ கோட்டோ, பிரான்ஸ் திரைப்பட தொகுப்பாளர் பாஸ்கல் சவான்ஸ், பிரான்ஸ் ஆவணப்பட தாயரிப்பாளர், திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளரான சேவியர் ஆங்குலோ பார்ட்டன், இந்தியாவின் திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.



இந்த போட்டியில், 1990 வாக்கில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களை மையப்படுத்திய இந்திய திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ், இந்தியாவின் 3 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது. அகால மரணமடைந்த தனது பெற்றொர்களின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக வீட்டை விட்டு வெளியேறும்  கிருஷ்ணா என்ற இளம் கல்லூரி மாணவரை மையப்படுத்திய கதையாக இந்த திரைப்படம் உள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் சத்ய ஜித்ரேயின் கதாபாத்திரமான தாரிணி குரோவை அடிப்படையாக கொண்டது ஸ்டோரி டெல்லர் என்ற ஆனந்த் மகாதேவனின் திரைப்படம். இது தங்கமயில் போட்டிப்பிரிவில் இடம்பெற உள்ளது. தாரிணி குரோ தனது பணி ஓய்வுக்கு பின், ஒரு கதை சொல்லியாக மாறிய வித்தியாசமான சூழ்நிலையை அவர்   தாமே உணர்ந்தது பற்றிய கதையம்சத்தை கொண்டது இந்த திரைப்படம். இது பூசன் சர்வதேச திரைப்பட விழா 2022ல் கிம் ஜி- சியோக் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட  படமாகும்.

ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்ட, இயக்குனர் கமலக்கண்ணனின் குரங்கு பெடல் இந்த போட்டிப்பிரிவில் இடம்பெறுகிறது. தனது தந்தை தனக்கு கற்றுதர முடியாமல் போன மிதிவண்டி சவாரியை கற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒரு பள்ளி மாணவனின் கதையாகும் இது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் 2012ல் வெளியான மதுபானக் கடை திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.



இவை தவிர, 12 சர்வதேச திரைப்படங்களும் தங்கமயில் விருதுபெற போட்டியிடுகின்றன.53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திகில் திரைப்படங்கள்





அமானுஷ்யம், திகில் திரைப்படங்களுக்கு  உலகளவில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும்  நிச்சயம் பஞ்சமிருக்காது. இது போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறவிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் “பயங்கரமான கனவுகள்” என்ற சிறப்பு பிரிவில் அண்மையில் வெளிவந்த அமானுஷ்ய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.


ஸ்லோவாக்யா நாட்டின் ‘நைட் சைரன்’ (Night Siren), பெரு நாட்டின் ‘ஹ்யுசேரா’ (Huesera), ஸ்பெயினின் ‘வீனஸ்’ (Venus), ஃபின்லாந்து நாட்டின் ‘ஹேட்சிங்’ (Hatching) ஆகிய திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்