முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவா சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடுகள்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு


இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் ஏதுவாக கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கோவா மாநிலத்திற்கே உரிய மகிழ்வையும், கொண்டாட்ட உணர்வையும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடுபரவலாக ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.


நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் தங்கள் வருகை உவகை அளிப்பதாக அமையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் எவ்விதமான குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இந்த திரைப்பட விழாவிற்கான இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக பங்கேற்பாளர்கள் திரைப்பட விழாவின் மிகச் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.


தேசிய திரைப்பட அபிவிருத்திக் கழக நிர்வாக இயக்குனர் ரவீந்திர பாக்கர், இம்முறை இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான திரைக்கலை வல்லுனர்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.

முன்னதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடக்க நிகழ்விற்கு முன்னதாகவே திரைப்பட விழாவின் அனைத்து நிகழ்வுகளும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்



53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தங்கமயில் விருது பெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் உள்ளன.

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுபெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் போட்டியில் இறங்குகின்றன. திரைப்படத் துறையில் அழகுணர்ச்சி மற்றும் அரசியலில் வளர்ந்து வரும் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், 12 சர்வதேச திரைப்படங்களும், 3 இந்திய திரைப்படங்களும் இந்த போட்டியில் இடம்பெறும்.


முதன் முறையாக தங்கமயில்  விருது வழங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து இந்த விருது ஆசியாவின் திரைப்பட விருதுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் விருதாக உள்ளது. இந்த ஆண்டு போட்டியின் போது, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடுமையான  பணியை இஸ்ரேல் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான நாடவ் லேப்பிட், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஜின்கோ கோட்டோ, பிரான்ஸ் திரைப்பட தொகுப்பாளர் பாஸ்கல் சவான்ஸ், பிரான்ஸ் ஆவணப்பட தாயரிப்பாளர், திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளரான சேவியர் ஆங்குலோ பார்ட்டன், இந்தியாவின் திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.



இந்த போட்டியில், 1990 வாக்கில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களை மையப்படுத்திய இந்திய திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ், இந்தியாவின் 3 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது. அகால மரணமடைந்த தனது பெற்றொர்களின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக வீட்டை விட்டு வெளியேறும்  கிருஷ்ணா என்ற இளம் கல்லூரி மாணவரை மையப்படுத்திய கதையாக இந்த திரைப்படம் உள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் சத்ய ஜித்ரேயின் கதாபாத்திரமான தாரிணி குரோவை அடிப்படையாக கொண்டது ஸ்டோரி டெல்லர் என்ற ஆனந்த் மகாதேவனின் திரைப்படம். இது தங்கமயில் போட்டிப்பிரிவில் இடம்பெற உள்ளது. தாரிணி குரோ தனது பணி ஓய்வுக்கு பின், ஒரு கதை சொல்லியாக மாறிய வித்தியாசமான சூழ்நிலையை அவர்   தாமே உணர்ந்தது பற்றிய கதையம்சத்தை கொண்டது இந்த திரைப்படம். இது பூசன் சர்வதேச திரைப்பட விழா 2022ல் கிம் ஜி- சியோக் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட  படமாகும்.

ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்ட, இயக்குனர் கமலக்கண்ணனின் குரங்கு பெடல் இந்த போட்டிப்பிரிவில் இடம்பெறுகிறது. தனது தந்தை தனக்கு கற்றுதர முடியாமல் போன மிதிவண்டி சவாரியை கற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒரு பள்ளி மாணவனின் கதையாகும் இது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் 2012ல் வெளியான மதுபானக் கடை திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.



இவை தவிர, 12 சர்வதேச திரைப்படங்களும் தங்கமயில் விருதுபெற போட்டியிடுகின்றன.53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திகில் திரைப்படங்கள்





அமானுஷ்யம், திகில் திரைப்படங்களுக்கு  உலகளவில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும்  நிச்சயம் பஞ்சமிருக்காது. இது போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறவிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் “பயங்கரமான கனவுகள்” என்ற சிறப்பு பிரிவில் அண்மையில் வெளிவந்த அமானுஷ்ய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.


ஸ்லோவாக்யா நாட்டின் ‘நைட் சைரன்’ (Night Siren), பெரு நாட்டின் ‘ஹ்யுசேரா’ (Huesera), ஸ்பெயினின் ‘வீனஸ்’ (Venus), ஃபின்லாந்து நாட்டின் ‘ஹேட்சிங்’ (Hatching) ஆகிய திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...