முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் ஆண்டுக் கண்ணோட்டம் – 2022

 பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் ஆண்டுக் கண்ணோட்டம் – 2022:


நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல் துறை (ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லாட்சி முக்கியமானது. "அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு" என்பதை அடைவதற்கு, நிர்வாகக் கட்டமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 நல்லாட்சி வாரம் -2022


2022 டிசம்பர் 19 முதல் 25 வரையிலான நல்லாட்சி வாரத்தில் பொதுமக்களின் குறைகளைத்  தீர்த்து மக்களுக்கு சேவைகள்  வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “முழுமையான அரசு நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு வார காலம்  நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப்  பிரச்சாரத்தின் போது, சுமார் 54 லட்சம் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன; சேவை வழங்கலுக்கான 315 லட்சம் விண்ணப்பங்கள் பைசல் செய்யப்பட்டன;   நிர்வாகத்தில் 982 புதுமை முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டன.

நிலுவை விஷயங்களைப் பைசல் செய்ய சிறப்பு முகாம்கள்

தூய்மை  மற்றும் அரசு அலுவலகங்களில் நிலுவை விஷயங்களைக் குறைத்தல் குறித்த சிறப்பு இயக்கம் 2.0, 2022 அக்டோபர் 2 முதல் 31 வரை நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு  அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பிற அலுவலகங்களில்  வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் விளைவாக 89.85 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது; அலுவலகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ. 370.73 கோடி  வருவாய் ஈட்டப்பட்டது. இந்த இயக்கத்தின் போது சுமார் 4.39 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டன. தக்கவைப்பு கால அட்டவணையை நிறைவு செய்த சுமார் 29.40 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. பல அமைச்சகங்கள் 100% அகற்றல் இலக்கை அடைய முடிந்தது.

சிறப்பு இயக்கம்  2.0-ன் அளவு  2021-ன் சிறப்பு இயக்கத்தை விட 16 மடங்கு பெரியது. இந்த இயக்கம் சமூக ஊடகங்களில் 4 பில்லியன் பதிவுகளையும் 9 லட்சம் ஈடுபாடுகளையும் கொண்டிருந்தது.

பொதுமக்கள் குறைதீர்த்தலில் குடிமக்களின் குரலுக்கு அதிகாரமளித்தல்

2022 ஆம் ஆண்டில், சிபிகிராம்ஸ் எனப்படும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல்  மற்றும் கண்காணிப்பு அமைப்பில் 17.50 லட்சம் புகார்கள் பெறப்பட்டன, இவற்றில் 96.94% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 2022ல் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் சராசரி பைசல் காலம்  27 நாட்களாக இருந்தது.

குடிமக்களிடமிருந்து நேரடியாகப் பின்னூட்டங்களை சேகரிக்க சிபிகிராம்ஸ்  பற்றிய பின்னூட்ட அழைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள்

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள் 2021, குடிமைப்பணிகள் தினமான ஏப்ரல் 21, 2022 அன்று  மாண்புமிகு பிரதமரால் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து திட்டம், கேலோ இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம், சேவைகளை கடைக்கோடிவரை வழங்குதல் எனும் ஐந்து முன்னுரிமை திட்டங்களில் உயர்ந்த சாதனை களுக்காகவும் மத்திய/மாநில/மாவட்ட அளவிலான நிர்வாகத்தில்  புதிய முயற்சிகளுக்காகவும் இந்த விருதுகள்  வழங்கப்பட்டன.

15வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி 2022 ஏப்ரல் 20 - 21 தேதிகளில்  "வி

ஷன் இந்தியா@2047 - குடிமக்களையும் அரசையும் நெருக்கமாகக் கொண்டுவருதல்" என்ற கருப்பொருளில் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "விஷன் இந்தியா@2047– ஆளுகை”,  “தற்சார்பு இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி' ,'டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு',  'முன்னேற விரும்பும்  மாவட்டங்கள் திட்டம் - ஆகிய மையப்பொருள்களில் நடைபெற்ற  கருத்தரங்க அமர்வுகளுக்கு மத்திய அமைச்சர்கள் தலைமை தாங்கினர்.

இ -நிர்வாகம் குறித்த 24வது தேசிய மாநாடு ஹைதராபாதில் 2022 ஜனவரி 7-8 தேதிகளில் "இந்தியாவின் தொழில்நுட்பம்: தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்" என்ற தலைப்பில் நடைபெற்றது. சிறந்த இ -நிர்வாகப்  பயன்பாடுகளுக்காக மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநிலம்/ யூனியன் பிரதேச அரசுகள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் தேசிய இ -நிர்வாக விருதுகள் 2021 வழங்கப்பட்டன.

சர்வதேசப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு        

கூட்டுப்  பணிக்குழு கூட்டங்கள், இணையவழி மாநாடுகள் மற்றும் உயர்நிலை  பரிமாற்ற வருகைகள் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் காம்பியாவுடன் சர்வதேச ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.

மண்டல மாநாடுகள்

சென்னை, ஸ்ரீநகர், பெங்களூரு, இட்டாநகர் ஆகிய இடங்களில் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கான நான்கு மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த