முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

4 இஞ்ஜின்களில் 3 இஞ்ஜின்கள் திறம்படச் செயல்பட முடியாமல் தவிப்பதேன்? ப.சிதம்பரம் மாநிலங்களவையில் வினா

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சரும்  இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம், 


தனது கருத்துக்களை முன் வைத்ததில்: அரசு கூடுதலாக சுமார் 3.26 லட்சம் கோடி ரூபாயைக் கேட்கிறது. 500 கோடி ரூபாயை இந்தியாவின் பல எல்லைப் பகுதிகள் மற்றும் ராஜரீக ரீதியில் முக்கியமான பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளை அமைக்க பணம் தேவை எனக் கூறியுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்புக்கு என்பதால் அதை மகிழ்வோடு யோடு நாங்கள்‌ வழங்கத்  தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன் நாங்கள் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். அதற்கு நிதி அமைச்சர் அல்லது ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விடை கொடுக்கப்படும் என நான் நம்புகிறேன்.

அந்த 11.1 சதவீதத்துக்கு கணக்குச் சொல்லுங்களேன்:

மதிப்பீட்டு பட்ஜெட்டில் 2022- 23 நிதி ஆண்டில் கரண்ட் பிரைஸ் அடிப்படையில் ஜிடிபி 258 லட்சம் கோடி என்று கூறப்பட்டிருந்தது. அப்படியானால் கடந்தாண்டை விட ஜிடிபியின் நாமினல் குரோத் வளர்ச்சி 11.1 சதவீதம்.


கரண்ட் பிரைஸ் அடிப்படையில் ஜிடிபியின் வளர்ச்சி 11.1 சதவீதமென்றால் அதில் பணவீக்கத்தின் அளவென்ன?பட்ஜெட் குறித்த விவாதம் எழுந்த போதே இது குறித்து அவையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இப்போது 2022 - 2023 நிதியாண்டில் ஒன்பது மாதங்களைக் கடந்து விட்டோம்.


எனக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்த 11.1 சதவீத வளர்ச்சியில் எத்தனை சதவீதம் பணவீக்கம் மற்றும் உண்மையான வளர்ச்சி எத்தனை சதவீதம் என்று கூறுங்கள்.  மதிப்பிற்குரிய நிதி அமைச்சரும் இந்திய அரசும் சுமார் மூன்று புள்ளி இரண்டு ஆறு லட்சம் கோடி ரூபாயைச் செலவழிக்க விரும்புகிறார்கள் என்றால், இந்திய அரசு கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இந்தப் பணத்தை அரசு எப்படிக் கொண்டு வரும். எதன் மூலம் கொண்டு வருவார்கள் என்பதே அடுத்த கேள்வி. பட்ஜெட் மதிப்பீட்டில் இந்திய அரசின் தோராய வரி வருவாய் சுமார் 27 லட்சத்து 58 ஆயிரம் கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் வரி 7 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய். இதை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால், ஒட்டுமொத்த தோராய வரி வருவாயில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி வெறும் 26.1 சதவீதம் மட்டுமே.

2013 - 14 நிதி ஆண்டில் இந்திய அரசின் தோராய வரி வருவாய் சுமார் 11 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்பட்ட வரித்தொகை சுமார் மூன்று லட்சத்தை 93 ஆயிரம் கோடி ரூபாய். கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விகிதாச்சாரப்படி கணக்கிட்டு பார்த்தால் 34 சதவீதம் .

2013 - 14 நிதியாண்டோடு தற்போதைய கார்ப்பரேட் வரி வசூல் விகிதத்தைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவாகவே கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி வசூல் உள்ளது. இந்த மிகப்பெரிய நன்மை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதிலாக யார் அந்தத் தொகையை இட்டு நிரப்புகிறார்கள் என்று பார்த்தால். வருமான வரி செலுத்துபவர்கள், என்னையும் உங்களையும் போல சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் தான் இந்தச் சுமையை சுமக்கிறார்கள். சாமானிய மக்களும் நடுத்தர மக்களும் அதிக சுமையைச் சுமப்பது சரியா தவறா என்பதை இந்த அவையே தீர்மானிக்கட்டும்.

இப்படி இந்திய அரசு பல சலுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்த பிறகும், இந்தியப் பொருளாதாரத்தில் எல்லாமே சரியாக இருக்கிறது என்று அரசு கூறும் போதும், முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யாதது ஏன்?1990 - 91 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி சுமார் 25 லட்சம் கோடி. இது கான்ஸ்டன்ட் பிரைஸ் அடிப்படையிலான தரவு. அதன் பிறகு தான் இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. ஆட்சி நடத்த 12 ஆண்டுகளுக்குள் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி இருமடங்காக அதிகரித்தது. அதாவது இந்திய பொருளாதாரம் 50 லட்சம் கோடி மதிப்புடையதாக அதிகரித்தது. இது பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் சாத்தியமானது.

மீண்டும் அடுத்த பத்தாண்டு காலத்துக்குள் இந்தியாவின் ஜிடிபி மீண்டும் இருமடங்காக அதிகரித்தது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் இந்தியா கண்ட அசுர வளர்ச்சியது. அவர் ஆட்சிக் காலத்தில் இந்தியா சுமார் 98 - 99 லட்சம் கோடியை எட்டிப் பிடித்தது.

ஆக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பாஜக தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் இரு மடங்கு வளர்ந்திருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயற்கை தானே.? தன்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது இந்தியப் பொருளாதாரம் 200 லட்சம் கோடியை எட்டிப் பிடிக்குமா? அரசு செலவினங்கள், தனியார் முதலீடுகள், நுகர்வு, ஏற்றுமதி.ஆகிய நான்கு இஞ்ஜின்களில் அரசு செலவினங்கள் தவிர மற்ற மூன்று இஞ்ஜின்களும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள், இந்தியாவில் சிறப்பாக முதலீடுகளை மேற்கொள்ளவில்லையென ஊடகங்கள் ஆதாரங்களுடன் சப்தமாகப் பேசி வருகின்றனர்.

மிகப்பெரிய பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களின் நுகர்வு மட்டுமே இருக்கிறது, நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நுகர்வு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்றுமதிச் சரிவுகளைச் சந்தித்து வருகின்றன. வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா என்கிற ஒற்றை நாட்டோடு மட்டும் இந்தியாவுக்கு 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. இப்படி உங்களுடைய நான்கு இஞ்ஜின்களில் மூன்று இஞ்ஜின்கள் திறம்படச் செயல்பட முடியாமல் தவிப்பது ஏன்? இதற்கு ஏதாவது ஒரு விளக்கம் இருக்க வேண்டுமே.பல நாடுகளும் ரெசஷன்களால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதை எல்லாம் இந்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டதா? இந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள். இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை மேம்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள். சீனாவும் இந்தியாவும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அதாவது எல் ஏ சி என்று அழைக்கப்படும் பகுதிக்குள்ளேயே பெரிய அளவில் பல கட்டுமானங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையும், இந்திய அரசுத் தரப்பிலிருந்தும் கூறப்பட்டிருக்கிறது. சீனா என்ன மாதிரியான கட்டுமானங்களை மேம்படுத்தியிருக்கிறதென்று கூற வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு உட்பட்ட எல் ஏ சி பகுதியில் என்ன மாதிரியான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்பது குறித்து எதையும் குறிப்பிட வேண்டாம்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பாலி நகரத்தில் சந்தித்துப் பேசிக் கொண்ட போது, எல்லை பிரச்னைகளை குறித்து ஏதேனும் பேசினார்களா ?இல்லையா? என்பதை மட்டும் கூறினால் போதும். என 

சரியான தரவுகளோடு ப. சிதம்பரம் கேள்வி கேட்ட போது  பாரதிய ஜனதா கட்சி தரப்பில் கொந்தளித்ததைப் பார்க்க முடிந்தது.அதற்கு இரண்டு இஞ்சின் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காரசாரமாகப் பதிலளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த