முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடி வளரும் ஆயில் உற்பத்தி நிறுவனங்களின் வழுக்கைத் தலை உரிமையாளர்கள்

'மூளைக்கு வல்லாரை,முடி வளர நீலி நெல்லி'.. என்பது சித்தர்கள் வாக்கு ..வழுக்கைத் தலையில் முடி முளைப்பதென்பது பாலைவனத்தில் நெல் சாகுபடி செய்வதென்பது எப்படிச் சாத்தியமில்லையோ, அப்படியே,


பலரும் பல ஆயில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுவது இயல்பு தான், நாமறிந்தவரை  யில் முடி வளரும் ஆயில்களை  விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்திவரும்  அனைத்து உரிமையாளர்களும் வழுக்கைத்தலையர்கள் தான்,,!

என்பதை உணர வேண்டும்.  (குறிப்பாக: ரோமா மற்றும் அஸ்வினி நிறுவனங்கள் உள்பட ) அப்படியிருக்க அவர்களுக்கே முளைக்காத முடி தங்களுடைய தலையில் முளைக்குமென நம்பி வாங்கும் நபர்களுக்கு முடி மட்டுமே இல்லை என்பதை விட, மூளையும் சிந்திக்க வில்லை என்பதற்கான  காரணம் நம்மைச்  சிந்திக்க விடாமல் செய்யும் விளம்பர யுத்தி தான் ..  அதை ஆதரங்களுடன் இங்கு விரிவாகப் பார்க்கலாம். ரோமா விளம்பர அட்டைப் படத்தில் விளம்பர மாடல் அதன் உரிமையாளரே உள்ளார்.அது 1991 ஆம் ஆண்டு முதல் வந்த விளம்பரம். முடி இல்லாமல் முடியுடன் என இரண்டு படங்களில் சும்மா தகதகவென மின்னுவார் பாருங்கள் அது போலவே நாமறிந்த வரை சுமார்‌ 5 நிறுவனங்கள் அடங்கும் (பெயர் வேண்டாம்) நீங்களும் கண்டு பிடிக்க முடியும், இப்படி பல வியாபார யுத்தியில் வழுக்கைத் தலையர்கள் ஏமாற்றப்படும் நிலையில் அதற்குத் தீர்வு பூக்கள் மட்டும் தான் என்பது சித்தர்கள்  கூறிய வழிமுறைகள் உண்டு.


முடி உதிர்வென்பது எல்லா வயதினருக்குமுள்ள பொதுவான ஒரு பிரச்சனைகள் தான், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்  பிரச்சனைகளுண்டு. ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும்  போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கங்கள், முறையற்ற பழக்கவழக்கங்களுடன்  புவி வெப்பமயமாதலும் முடி உதிர்வுக்குக் காரணம். புவி வெப்பமயமாதல் காரணமாக  உடல் எளிதாக உஷ்ணமடைவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முடிதான். உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகளும் ஏற்படுகின்றன. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் முடி உதிர்வை உணவுப் பழக்கங்கள் மற்றும் பிற பழக்கவழக்கங்களால் மாற்றலாம்.



காலையில் நீண்டநேரம் படுக்கையிலிருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். சூரியோதயத்திற்குள் கண்விழிப்பது உடலில் குளிர்ச்சியைத் தக்கவைக்கும்.  போதுமான தூக்கமில்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். தற்போதய இளைஞர்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்த்து பெரும்பாலும் பிரில்கிரீம் போன்ற ஜெல்களையே பயன்படுத்துகின்றனர்.அதிலிருக்கும் இரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகும். செயற்கை மினரல் எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கும்.


தலையிலிருக்கும் மயிர்க்கால்களை வறண்டுபோகச் செய்யும். இரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவை தலையிலுள்ள செல்களை அழிப்பதுடன் முடி உதிர்வையும் ஏற்படுத்தும், வயது முதிர்ச்சியால் முடி உதிர்வதைத் தடுக்கயியலாது, ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமையிழத்தல்  இயல்பானது,  முப்பது  வயதிற்கு மேல் முடி வளர்ச்சியும், அடர்த்தியும் குறையத் தொடங்கும், முடி நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதற்கு நியூட்ரிஷன்கள் தேவை. திடீரென்று எடை குறைதல், இரும்பு ச்சத்து குறைதல், முறைப்படி உணவுக் கட்டுப்பாடும், பின்பற்றாததாலோ முடி உதிர்தல் பிரச்னை வரும். அதிகளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிரும். அடிக்கடி முடியை இறுக்கமாக கட்டி வைத்தால் முடி உதிர்தல் பிரச்னைக்கு  வழிவகுக்கும்.


அதேபோல் முடியை சரியாக பராமரிக்காமல் கண்டபடி வைத்திருப்பது, அதாவது (நடிகைகள் பின்பற்றும் லூஸ் கேர் அதாவது தமிழில் கூறினால்  தலைவிரிகோலம்) முடியின் வேர் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் அதிக அளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படும். முக்கியக் காரணமாகும்              இதில் வேடிக்கை என்னவென்றால் அஸ்வினி ஹேர் ஆயில் வாங்கித் தலையில் தேய்த்தால்.

முடி உதிர்வது நின்று விடுமாம். 

கரு கருவென தலைமுடி அடர்த்தியாக வளரும் என்ற நம்பிக்கை இன்று நம்மில் பலரிடம் உள்ளது. 



அஸ்வினி ஹேர் ஆயில் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தற்போதய  தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திரப் பிரதேசமாக  இருந்த போது 

அஸ்வினி சுப்பாராவ் என்பவரால் துவங்கப்பட்டு.

இன்று இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவே உள்ளது.

அஸ்வினி ஹேர் ஆயில் நிறுவனத்தின் உரிமையாளர்

அஸ்வினி சுப்பாராவ் தலை என்னவோ வழுக்கை தான் 

இவர் விற்பனை செய்யும் எண்ணெய் மற்றவர்கள் தலையில் மட்டுமே மயிர் வளரும் அதிசயம்  தான். இப்படி பல நகைச்சுவை உண்டு. உண்மையிலேயே பூக்கள் மட்டுமே முடிவளரும் காரணி அதாவது      மஞ்சள் அரளிப் பூ, சங்குப் பூ,ரோஜா பூ,செம்பருத்திப் பூ,சீமைச் சாமந்திபூ என பல வகையான  மருத்துவப் பயன்களை தனக்குள்ளே  வைத்திருக்கிறது இந்த அற்புத பூக்கள். இதிலுள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளிலிருந்து உங்களைக் காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. சீமைச் சாமந்தியில் தேனீர் போட்டுக் குடித்தால் பல தலை முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும், தலையிலுள்ள அதிகப் பொடுகை இந்த டீ நீக்குகிறது.முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியிலிருந்து வளரக்கூடியது. தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக நூறு முடிகள் உதிர்வது இயற்கை.


முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.  முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.ஒரு முடி தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை தான் நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.

இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் இரண்டு  வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். சிறு வயது பற்கள் போல தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன், இந்த மூன்றும் தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயதாக வயதாக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்று விடும். முதுமையில் வழுக்கை விழுவதும் இப்படித்தான்.


வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும்.  அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை  யரும் எந்த ஆயிலும் மாற்ற முடியாது.


மற்றொரு காரணம் . டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், தான் வழுக்கை விழுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த