முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விரைவாக விரிவுபடுத்தப்படும் 5ஜி சேவை

விரைவாக விரிவுபடுத்தப்படும் 5ஜி சேவை


2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கிவைக்கப்பட்டது

அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

சர்தாமுக்கு கண்ணாடியிழை தகவல் தொடர்பு அர்ப்பணிப்பு

சர்தாம் எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு இடங்களும் தற்போது 5ஜி இணைப்பு மற்றும் கண்ணாடியிழை கேபிள் இணைப்பைப் பெற்றுள்ளன


அதிவேக இணையதள பேண்ட்வித் சர்தாம் தலங்களுக்கு வரும் யாத்திரீகர்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு இணைப்பை வழங்குகின்றன

யாத்திரை பகுதி மற்றும் ஆலய வளாகத்திற்குள் குரல் மற்றும் வீடியோ தகவல் தொடர்பு இணைப்பு நல்லத் தரத்தில் இருப்பதை மக்கள் உணரமுடியும்

கங்காரியாவில் இருந்து ஹேம்குந்த் சாஹிப் வரையிலான 6 கிலோ மீட்டர் நீள மலையேற்றப் பாதையிலும் தற்போது மொபைல் போன் இணைப்பு சேவை வழங்கப்படுகிறது


இந்தியாவின் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்ப சேவையில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது

உத்தராகண்ட் மாநிலம் மனாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி பேசுகையில், “21ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு  இரண்டு முக்கிய தூண்கள் உள்ளன. முதலாவதாக, நமது பாரம்பரியத்தின் பெருமை மற்றும் இரண்டாவதாக வளர்ச்சி. உத்தராகண்ட் மாநிலத்தின் அனைத்து முயற்சிகளும் இந்த இரண்டு தூண்களையும் வலுப்படுத்துகின்றன” என்று கூறியிருந்தார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே, அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கங்கோத்ரியில் 2,00,000-வது 5ஜி தொலைத் தொடர்பு கோபுர தளத்தை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார், தொடங்கப்பட்ட 8 மாதங்களுக்குள், 700 மாவட்டங்களை உள்ளடக்கிய 2,00,000 தொலைத்தொடர்பு கோபுர தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 5ஜி சேவை நெட்வொர்க் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் அதிவேக 5ஜி விரிவாக்க நடவடிக்கையாகும்.

5ஜி சேவை கைப்பேசி இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரை பாதையில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு கோபுரங்களும் இப்போது 5ஜி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

மிக உயர்ந்த அலைவரிசை கொண்ட  ஃபைபர் இணைப்பு காரணமாக, இந்த இடங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும். அரசின் மக்களை மையமாகக் கொண்ட முயற்சியின் ஒரு நடவடிக்கை இதுவாகும்.  இந்த தலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வரும் நிலையில், கோயில் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், யாத்திரைப் பாதையிலும் குரல் மற்றும் வீடியோ அழைப்புத் தரம் இனி நன்றாக இருக்கும். மேலும், கங்காரியாவிலிருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரையிலான 6 கிலோ மீட்டர் நீள மலையேற்றப் பாதையும் மொபைல் சேவைகள் மூலம் இணைக்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய, அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது என்றார். இந்தியாவின் 5ஜி விரிவாக்கம் உலகின் அதிவேக விரிவாக்கங்களில் ஒன்றாகும். 2,00,000-ஆவது 5ஜி கோபுர தளம் கங்கோத்ரி, சார்தாமில் தொடங்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய நடவடிக்கை  என்றும் அவர் கூறினார். 6ஜி தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா  முன்னிலை வகிக்க வேண்டும் என்ற  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தில் 100க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது நாட்டின் பொறியாளர்கள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களின் உயர்ந்த திறமையை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இந்தியாவின் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மிக விரைவாக அமைக்க உதவியதற்காகவும்,  விரைவாக அனுமதிகளை வழங்கியதற்காகவும்  உத்தராகண்ட் மாநில அரசுக்கு  திரு அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு  புஷ்கர் சிங் தாமி பேசுகையில், மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை இயக்குவதற்கு  ஆதரவு வழங்கிய  நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார். சார்தாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு இணைப்பு யாத்திரீகர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் பிறருடன் தடையற்ற முறையில் தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.

21ம் நூற்றாண்டின் 3வது பத்தாம் ஆண்டு உத்தராகண்டின் பத்தாண்டுகளாக இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே கூறியதை அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். மலைப்பகுதிகளில் அதிவேக இணையதள இணைப்புக் கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை நடைமுறைகள்  ஆகியவற்றையும் இந்த வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தி தரும் என்று அவர் குறிப்பிட்டார். உலகில் நடைபெறும்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான்  நடைபெறுகிறது  என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா 5ஜியில் உலகளாவிய தரத்தை நிர்ணயித்து வருவதாகவும், மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். கடைசி நிலையிலும் சிறந்த இணைப்பை  வழங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுவீச்சில்  செயல்படுகின்றன என்று திரு புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார் .

ஒவ்வொரு தொலைதூர கிராமத்திற்கும் நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் உலகத்தரம் வாய்ந்த தொலைதை் தொடர்பு இணைப்பை வழங்க மத்திய அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

அந்த வகையில், உத்தராகண்டில் தொலைத்தொடர்பு இணைப்புக்கான அரசின் பல்வேறு முயற்சிகளில் சில:

இந்த மாநிலத்தின் தொலைதூர பகுதிகள் கூட, மிக வலுவான மற்றும் குறைந்த செலவிலான தகவல் தொடர்பு சேவையைக் கொண்டுள்ளன. இந்த சேவைகளை சிறந்த வேகத்தில் வழங்க, தொலைத் தொடர்பு அமைச்சகம் பல திட்டங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் செயல்படுத்துகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள முக்கிய தொலைத்தொடர்பு  சேவைகள் பின்வருமாறு:

· கிராமப்புற மக்களில் 92.5 சதவீதம் பேர் 4ஜி மொபைல் சிக்னலைப் பெற்றுள்ளனர் (30.04.2023 நிலவரப்படி, உத்தராகண்ட் மாநிலத்தில் 1.4 கோடி மொபைல் சந்தாதாரர்களும் 3.2 லட்சம் வயர்லைன் சந்தாதாரர்களும் உள்ளனர்).

· இதற்கான சேவைகள்  33,000 பிடிஎஸ் கொண்ட 9,000 கோபுரங்களால் வழங்கப்படுகிறது.

· உத்தராகண்டில் பல தொலைத்தொடர்பு கோபுரங்கள் 5ஜி திறனுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக, உத்தராகண்ட் மாநிலத்தில் பின்வரும் சிறப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

Ø 354 யுஎஸ்ஒஎஃப் திட்டத்தில் 56 கோபுரங்களை உத்தராகண்ட் மாநிலத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன, அவற்றில் 41 தளங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன, மீதமுள்ள தளங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Ø 4ஜி செறிவூட்டல் திட்டத்தில் மொத்தம் 1236 கிராமங்களை உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, 360 கிராம இடங்களில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் 382 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் 77 கோபுரங்கள் 4ஜி கோபுரங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 4ஜி மொபைல் சேவையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாரத்நெட் திட்டம்: இத்திட்டத்தின்  முதல் கட்டத்தின் கீழ், 1849 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. அதில் 1816 கிராமங்கள், ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 கிராமப் பஞ்சாயத்துக்களில் 2023 ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...