தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம்.
அமுதா.. உள்துறை .சுகாதாரம் சுகன் தீப் சிங் பேடி இராதாகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் உதயசந்திரன் நிதி துறைக்கு மாற்றம் விபரம் வருமாறு. நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராகவும், முதலமைச்சரின் செயலாளராக இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராகவும், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ்
உள் துறைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறை செயலாளராகவும்
போக்குவரத்துத் துறைச் செயலாளரான கோபால் தமிழக விஜிலென்ஸ் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையரான ககன்தீப் சிங் பேடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளராகவும், செந்தில்குமார் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித் துறைச் செயலாளர் க.மணிவாசன் சுற்றுலாத் துறை செயலாளராகவும், சுற்றுலாத் துறைச் செயலாளரான சந்திரமோகன் பொதுப் பணித் துறைச் செயலாளராகவும் .பொதுத் துறை செயலாளராக இருந்த ஜெகனாதன் உணவுத் துறை செயலாளராகவும், பள்ளி கல்வித் துறை ஆணையரான நந்தகுமார், மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளரான ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கருத்துகள்