மதுரையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடிப் பரப்பளவில், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திறந்து வைத்துப், பார்வையிட்டு, பார்வையாளர் கையேட்டில் குறிப்பெழுதிக்
கையொப்பமிட்டார். இந்த நவீன காலத்தில் , ஒரே இடத்தில் 200 கோடிக்கு மேல் செலவழித்து நல்ல நூலகம்
அனைத்து முக்கியமான நூல்களும் டிஜிட்டல் மயமாகி விட்டன. மாணவர்கட்கு, போட்டி தேர்வு எழுதும் இளைஞர் கட்கு வேண்டிய முக்கியமான நூல்கள்/ தகவல்கள் டிஜிட்டல் மயமாகத்தான் வருகின்றன.
இதே செலவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இணைய சேவை வசதியுடன் நூற்றுக்கணக்கான கம்யூட்டர்களை நிறுவி டிஜிட்டல் நூலகங்களை திறந்தால் அனைவருக்கும் பயன் தரும்
மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் அனைவரும் பயன் பெறுவார்.
அரசின் விருப்பப் படி இதற்கு கலைஞர் பெயரை வைத்தால் தமிழகம் முழுதும் கலைஞர் பெயர் சொல்லும். என்பதே தமிழறிஞர்கள் உணர்த்துவதாகும் , அய்யா பொள்ளாச்சி நசன் அவர்கள் கருத்தாக உலகத் தமிழ் மாநாடுகள் நடத்த வேண்டாம். தமிழன்.. தமிழனாக,நற் தமிழ் உணர்ந்த தமிழனாக, "தமிழைப் பிழியின்றி பேசும் தமிழனாக", "தமிழைப் படிக்கத் தெரிந்த தமிழனாக", திருக்குறளின் நல்ல கருத்துருக்களை தன் வாழ்வியலில் நடைமுறைப் படுத்துகிற தமிழனாக, உலகமே வணங்கும் தமிழனாக, வாழ்வதற்குத் திட்டமிட்டால் போதும். தனித் தனியாகத் தன்னை முன்னிருத்தி தமிழ் தமிழ் என நடித்து, தமிழையும், தமிழனையும் கீழே இறக்குவது தான், இங்கு தொடர்ந்து நடைபெறுகிறது, வருத்தம் தான் மேலெழுகிறது. இதை நாம் தான் மாற்ற வேண்டும். தமிழனாக ஒவ்வொரு மனிதனும் மேலெழ வழி அமைப்போம்.தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய உதவாத தமிழ் வளர்ச்சித்துறை எதற்காக மாதம் பல நூறு கோடிகளில் செயல்பட வேண்டும்? என்ற வினா எழுகிறது
சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டம் எதற்காக?
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எதற்காக? எண்பதும் எழு வினா.
கண்காணிப்புக் கருவிகள் என்று கூடவே செய்தி ஒளி/ஒலி பரப்புத் துறையில் வேலை செய்பவர்களுக்கு மொழி மாற்றம் செய்யத் தெரியாது?
முத்தமிழ் அறிஞராம் தமிழினத் தலைவராம் கலைஞர் நூலகம் மதுரையில் மட்டுமல்லாது டிஜிட்டல் நூலகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை அதுவே தமிழ் வளர்க்கும் வழி
கருத்துகள்