முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

 டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

"இது தீர்மானங்களை புதுப்பிக்கும் நாள்"


"இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன"

"ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் எங்கள் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.

"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய எங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் சின்னமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

"ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்"

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயக நாடாகவும் உருவெடுத்து வருகிறது.

"சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்"

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள துவாரகாவில் ராம் லீலாவில் பங்கேற்றார்.விஜய தசமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

விஜய தசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தப் புனிதமான பண்டிகை எதிர்மறை சக்திகளின் முடிவைக் குறிக்கிறது. வாழ்க்கையில் நல்லவற்றைத் தழுவுவதற்கான செய்தியைக் கொண்டுவருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இந்தப் புனிதப் பண்டிகை எதிர்மறை சக்திகளை ஒழித்து வாழ்வில் நன்மையைக் கடைப்பிடிக்கும் செய்தியைக் கொண்டுவருகிறது.

அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!’’

விழாவில் பேசிய பிரதமர், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்திற்கு எதிராக பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றியின் திருவிழா விஜயதசிமி என்று கூறினார். உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள் இது என்றும் அவர் கூறினார்.

சந்திரயான் தரையிறங்கி சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முறை நாம் விஜய தசமியைக் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நாளில் சாஸ்திர பூஜை மரபைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன எனறார்.  சக்தி பூஜை என்பது முழு படைப்பின் மகிழ்ச்சி, நல்வாழ்வு, வெற்றி மற்றும் மகிமைக்காக வாழ்த்துவதாகும் என்று அவர் கூறினார். இந்தியத் தத்துவத்தின் நித்திய மற்றும் நவீன அம்சங்களை அவர் வலியுறுத்தினார். "ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் நமது எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய நம் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாகும்" என்று பிரதமர் கூறினார். அடுத்த ராம நவமி, ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும் என்று அவர் கூறினார். "பகவான் ஸ்ரீ ராமர் விரைவில் வரவிருக்கும் தருணம்", பகவான் ராமரின் வருகை விரைவில் உள்ளது என்று பிரதமர் கூறினார். ராமசரித மானஸில் விவரிக்கப்பட்டுள்ள வருகையின் அறிகுறிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது, நிலவில் இறங்குவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாரி சக்தி வந்தன் அதினியம் போன்ற இதே போன்ற இப்போது இருக்கும் அறிகுறிகளை குறிப்பிட்டார். "இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயகமாகவும் உருவெடுத்து வருகிறது", என்று அவர் கூறினார். ராமர் இதுபோன்ற நல்ல அறிகுறிகளின் கீழ் வருவதால், "ஒரு வகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அதிர்ஷ்டம் இப்போது உயரப் போகிறது" என்று பிரதமர் கூறினார்.

சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள், சாதியம் மற்றும் பிராந்தியவாதம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பதிலாக சுயநலம் பற்றிய சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புடன்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். தற்சார்பு கொண்ட வளர்ந்த இந்தியா, உலக அமைதியின் செய்தியை வழங்கும் வளர்ந்த இந்தியா, அனைவருக்கும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற சம உரிமை உள்ள இந்தியா, மக்கள் செழிப்பு மற்றும் மன நிறைவை உணரும் வளர்ந்த இந்தியா. இதுதான் ராம் ராஜியத்தின் தொலைநோக்குப் பார்வை" என்றார்.

இந்த நிலையில், தண்ணீரை சேமித்தல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், தூய்மை, உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல், தரமான பொருட்களை தயாரித்தல், வெளிநாடு பற்றி சிந்திக்கும் முன் நாட்டைப் சுற்றிப்பார்த்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், சிறுதானியங்களை ஊக்குவித்தல் மற்றும் பின்பற்றுதல்,  உடற்தகுதி, இறுதியாக "ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக அந்தஸ்தை அவர்களின் குடும்பத்தில் உறுப்பினராக்குவதன் மூலம் உயர்த்துவோம்" போன்ற 10 தீர்மானங்களை அனைவரும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். "நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத, வீடு, மின்சாரம், எரிவாயு, தண்ணீர், சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத ஒரு ஏழை கூட நாட்டில் இருக்கும் வரை, நாங்கள் ஓயமாட்டோம் பணியும் தொடரும்" என்று பிரதமர் மோடி கூறி முடித்தார். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

சாரதா நவராத்திரி - சரத் சந்திர காலம் அஷ்டமி, நவமி, தசமி மஹா என்ற சிறப்புக்களுடன் கொண்டாடப்பெறும் வழக்கம்.

"அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்."

என்பது திருவள்ளுவம். "அறிவு ஆயுதமாகிறது." அறிவு அற்ற ஆயுதம் பயனற்றது என்பது கர்ணனின் வில்லாண்மை. கவனம் சிதறாமை கருத்தாக்கம், சமயோகிதம், மறவாமை,  பதராமை  சிந்தித்தவுடன் செயல்படும் பிரசன்ன வித்தை. 

ஆயுதபூஜையும், சரஸ்வதி பூஜையும் ஒன்றாகவே பூஜித்த பொருள் உணர்ந்த நம்முன்னோர், அறிவு எப்பொருளையும் ஆயுதமாக்கும். தன்னை காக்கும். எதிராளியையும் அழிக்கும்.

"சர்வாயுதனே நமஹ" "சர்வ ப்ரஹரணாயுதாய நமஹ"  என்பது ஸஹஸ்த்திர நாமம். துரும்பும், துரத்தும் ஆயுதமாக, ஆயுதம் வேறு, ஆயுதம் தரிப்பவன் வேறு என்றல்லாமல் ஒன்றாகவே அடையாளம் கொண்டனர். நம் முன்னோர் பிரம்மனுக்கு கமண்டலத் தீர்த்தமே ஆயுதம். அதனைக் கொண்டு எதிரிகளின்  தைரியத்தை இழக்கச் செய்வது என்பர். மோசமான ஆயுதம்தானே!

பாரதம் பற்பல ஆயுதங்களால் என்றும் சிறந்து விளங்கி வருகிறது. இன்று ப்ரித்வி, ஆகாஷ், அக்னி என அணுவை சுமக்கும் ஆயுதங்கள். அணுவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுமக்கும் ஆயுதங்களுக்கே மகிமை. அவை வாகனங்களே; இன்று ஒளி வேகத்தில் சுமக்கும் ஆயுதங்களாக; இந்த வாகனங்கள் ஒலி, ஒளி ஆயுதங்கள். அன்றும் கதிர்வேல் ஒரு ஆயுதம். சப்தவேதி ஒரு ஆயுதம். சுமக்கும் ஆயுதங்கள் இந்த வாகனங்கள். ஒலி, ஒளி ஆயுதங்கள் நம் ஆசை. உலகை அழிக்க பயன்படும் அணு ஆயுதங்களை இருந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதே.

ஆகமங்களில் ஆயுதமும், வாகனமும் சம அந்தஸ்து உடையவை. அரசனை சுமக்கும் முரசுக்கட்டில், அரியணை, பட்டத்து யானை, பட்டத்து புரவி என தொடங்கி ஆண்டவனைச் சுமக்கும் வாகனங்கள் என சிறப்பு பெறுவது போல இக்காலத்தில் ஆயுதங்களின் பூஜையில் வாகனங்கள் நாம் பயன்படுத்தும் நிலை பூஜையில் இடம்பெறுகின்றன. மருத்துவமனையில் உயிர் காக்கும் வண்டிக்கும் மாலை மரியாதை. 

"விஷ்ணு ஸஹஸ்த்திர  நாமத்தில்" இரண்டு மந்திர ஸ்லோகம்

"விஷ்ணும் ஜிஷ்னும் மகாவிஷ்ணும் பரமவிஷ்ணும் மஹேஸ்வரம்

அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம்" 

    என எங்கும் நிறைந்தவனாய், ஜயசீலனாய், அனைத்துள்ளும் உறைபவனாய், மகேசுவரனாய், பலவடிவங்கொண்ட அசுரர்களை முடிப்பவனாய், புருஷோத்தமனாய் விளங்கும் மகாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்.

"நம: ஸமஸ்த பூதான- மாதி - பூதாய பூப்ருதே

அநேக- ரூப - ரூபாய விஷ்ணவே ப்ரப விஷ்ணவே"

    எல்லாப் பொருளுக்கும் ஆதியாய், பூமியை தாங்குபவராய் பலவகை வடிவங்களைக் கொண்டவராய் பிரபுவாய் விளங்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

எல்லாமாகவும் இருக்கும் இறைமையிலேயே அசுர தன்மையும் இருக்க அதனை வெல்பவராகவும், சுட்டிக்காட்டப்படுகிறது. உட்பகை, வெளிபகை வேறு இடத்தில் இருந்தா வருகிறது? நமக்குள்ளே தான்! அது திருத்தப்பட வேண்டும். திருந்த வேண்டும். ஏன் நம்மில் இருந்து தானே வருகிறது.

உட்பகை, வெளிபகைகளை வெல்வதற்கு பகை கடிதல் என்கிறார் நம் குமரகுருதாஸ முனிந்திரர் பகை கடிய குகனின் வாகனத்தையே மாமயிலையே வரவழைகிறார்; குருகுகன் முதன்மயிலே கொணர்த்தி உள் இறைவனையே என்பதாக ஆக வாகனம் நமது ஆயுதம்  அறிவு. அது ஏவுகணையாக இருக்கலாம். எழுது கோலாக இருக்கலாம். உழவு முதல் எந்த தொழில் கருவியாகவும் இருக்கலாம். அது புதுமை பெற வேண்டும், புதுபிக்க வேண்டும். பொழிவு பெற வேண்டும். அது பூஜையாகிறது. 

அமி எந்திரே; துமி எந்திரி இது குருதேவர் உபதேசம் யான் சிறந்த எந்திரமாக இருக்க வேண்டும். இறையே என்னை இயக்கும் எந்திரமாக நீ இருக்கிறாய் உள்ளார்ந்த செயல் புதிய பொழிவு என்றும் வெற்றி இனிய விஜயதசமியாகும்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பட்டமங்கலம்  அருள்மிகு ஸ்ரீமதியாதி கண்ட விநாயகர் ஸ்ரீஅழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில் ஆயுத பூஜை, கொலு தர்பாரில் அம்பிகையின் குதிரை வாகனம் மட்டும் விருதுகளுடன் திருவீதி பவனி வருவது வெகு காலம் தொட்ட மரபு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...