முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவரைச் சந்தித்த அயல்நாட்டுத் தலைவர்கள்

குடியரசுத் தலைவரை நேபாள பிரதமர் சந்தித்தார்


நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா' இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் கீழ், நேபாளம் முன்னுரிமை பங்குதாரர் என்று கூறிய குடியரசுத் தலைவர், நமது தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நேபாளத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.குடியரசுத் தலைவரை மாலத்தீவு அதிபர் சந்தித்தார்

மாலத்தீவு குடியரசின் அதிபர் டாக்டர் முகமது முய்ஸு இன்று (ஜூன் 10,2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் டாக்டர் முய்ஸுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், மாலத்தீவின் புதிய அரசுக்கும், மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அதிபர் டாக்டர் முய்ஸு தலைமையின் கீழ் மாலத்தீவு வளம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை குறிப்பிட்ட இரு தலைவர்களும், மக்களுக்கு இடையேயான தொடர்புகள், திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளிட்ட நமது பரந்துபட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்.

வரும் ஆண்டுகளிலும் இந்தியா-மாலத்தீவு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.குடியரசுத் தலைவரை மொரீஷியஸ் பிரதமர் சந்தித்தார்

மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்நாத் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு விருந்தினராக மொரீஷியஸுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறைப் பயணத்தையும், மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் மக்களுடன் தான் நடத்திய கலந்துரையாடல்களையும் அதிபர் திரௌபதி முர்மு அன்புடன் நினைவு கூர்ந்தார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மொரீஷியஸ் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டாளி என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.குடியரசுத் தலைவரை செஷல்ஸ் துணை அதிபர் சந்தித்தார்

செஷல்ஸ் குடியரசின் துணை அதிபர் திரு அகமது அஃபிஃப் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற புதிய அரசின் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் அஃபிஃப் செஷல்ஸ் நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்

செஷல்ஸின் வளர்ச்சி விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை குடியரசுத் தலைவர் முர்மு மீண்டும் உறுதிப்படுத்தினார்.

செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவான் மற்றும் செஷல்ஸ் மக்களின் வாழ்த்துக்களை அதிபர் திரௌபதி திரமுவிடம் தெரிவித்த துணை அதிபர் அஃபிப், தமது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். செஷல்ஸில் இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு உதவி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்