முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்.


10 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் உள்துறைச் செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்  செய்யப்பட்டனர்,  

தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் இ ஆ ப  நியமனம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 19 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாற்றத்தில்                                      சிட்கோ மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி  இஆப - பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் ஆகவும்,                       


                 பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜே. ராதாகிருஷ்ணன் இஆப - கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,      கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கோபால்  - கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,        உணவு வழங்கல்துறையின்  முதன்மைச் செயலாளராக இருந்த ஹர் சகாய் மீனா  - சிறப்பு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஆகவும்,                 

                தொழில்நுட்ப கல்வி ஆணையர் -     வீர ராகவ ராவ் தொழிலாளர் நலத்துறை செயலாளர்  ஆகவும்,        தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த் - தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைச் செயலாளர் ஆகவும்,       

                                      தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான  தீரஜ் குமார்  - உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,    உள்துறை முதன்மைச் செயலாளரான அமுதா  - வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆகவும்,    வருவாய்த்துறை செயலாளரான ராஜாராமன் - தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறை செயலாளர் ஆகவும்,                                 

      தமிழ்நாடு காதி மற்றும் ஊரக தொழில்வாரிய CEO வான  சுரேஷ்குமார்  - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும்,       திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியரான ரிஷப்  - நிதித்துறையில் துணைச் செயலாளராகவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த-விஷ்ணு சந்திரன் - பொதுத்துறை துணை செயலாளராகவும்,          இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த வளர்மதி - சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல்துறை இணைச் செயலாளராகவும்,                    அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்னி மேரி ஸ்வர்னா - உள்துறை இணைச் செயலாளராகவும்,            கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியரான ஸ்வரன் குமார் ஜடாவத்  - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளராகவும்,     

                  பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த-குமரகுருபரன் - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகவும்,                           ஈரோடு மாவட்டக் கூடுதல் ஆட்சியராக இருந்த நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் - ஈரோடு மாநகராட்சியின் ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த விஜயாராணி  - பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர்  (கல்வி) ஆகவும், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர்  - தாம்பரம் மாநகராட்சியின் ஆணையராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் இயக்குநராக இருந்த சந்திரகலா- இராணிப்பேட்டை மாவட்டஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும்,        வணிகவரித்துறை இணை ஆணையர் ஈரோட்டில் இருந்து வந்த லட்சுமி பாவ்னா தந்நீரு  - நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும்,        தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி ஆணைய செயல் இயக்குநரான பிரியங்கா- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும், சிப்காட் செயல் இயக்குநரான ஆகாஷ்  - நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும்,         வணிகவரித்துறை இணை ஆணையராக சென்னையில் பணியாற்றிய இரத்தினசாமி - அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், நிதித்துறை துணைச் செயலாளரான சிபி ஆதித்ய செந்தில்குமார் - கடலூர் மாவட்ட ஆட்சியராகவும்,           தாம்பரம் மாநகராட்சி ஆணையரான அழகுமீனா - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும்,                தொழிற்துறை கூடுதல் ஆணையரான கிரேஸ் லால்ரின்திகி பச்சாவு - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும்,                          நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையரான சிம்ரன்ஜித் சிங் கலோன் - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்                நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மு. அருணா இ.ஆ.ப., 2016 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவராவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...