முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் மீது ஊழல் வழக்குப்பதிவானது

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம்


மீது ஊழல் வழக்குப்பதிவானது  கடந்த கால அதிமுக ஆட்சியில் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதற்கு ரூபாய்.27 கோடியை லஞ்சமாக வாங்கியதாக முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம், மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட 11 நபர்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஒரத்தநாடு வைத்திலிங்கம். அதிமுகவில் அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா காலத்தில்

அதிமுகவில் முக்கிய நபர்களில் ஒருவராக செல்வாக்குடன் இருந்த போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் தற்போது நான்கு பிரிவாக உடைந்த அதிமுகவில் இருந்து விலகி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உள்ள அணியிலுள்ளார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுங்கன்குடிக்காடு கிராமம், பெற்றோர் ரெங்கசாமி மற்றும் முத்தம்மாள். இருவரும் இறந்து விட்டனர்.

வைத்திலிங்கம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயத்தின் மூலம் மட்டுமே குடும்ப வருமானம் பெற்றவர். அவரது மனைவி தங்கம், இவர்களுக்கு மூன்று மகன்களும்,ஒரு மகளும் உண்டு. மூத்த மகன் பிரபு. இவர் பிருந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளைய மகன்கள் ஆனந்தபிரபு மற்றும் சண்முகபிரபு. இருவரும் டாக்டர்கள் ஆவர் மகள் பிரதீபா. ஒரத்தநாடு அருகில் புதூரைச் சேர்ந்த டாக்டர் கார்த்திகேயனைத் திருமணம் செய்துள்ளார்.

வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்று முறையும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு முதல் முதல் 2006 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் தொழில் துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.



2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், கூடுதலாக விவசாயத் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.             ‌.                                -விளம்பரம்-
                       -விளம்பரம்-
2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாட்டில் தோல்வியடைந்தார். அதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டமன்றத் உறுப்பினராகத் தேர்வானார்.


வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, அவரது பாட்டி முத்தம்மாள் பெயரில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கினார். அதன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். பிரபு, முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர், மற்றும் சென்னை பூந்தமல்லி பகுதிகளில் நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கி குவித்திருந்தார்.


முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சென்னை ஈக்காட்டுதாங்கல் இந்தியன் வங்கியின் கிளை மூலம் ரூபாய்.27.90 கோடிக்கு மேல் தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் 22-9-2014 அன்று முத்தம்மாள் ரியல் எஸ்டேட்டில் 90 சதவீத பங்கு பிரபுவுக்கும், மீதம் 10 சதவீத பங்கு அவரது உறவினர் பன்னீர்செல்வம் பெயரிலும் இருப்பது தெரியவந்தது. மேலும் 24.03.2015 அன்று சென்னை ஈக்காட்டுதாங்கல் கிளை இந்தியன் வங்கியில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரொக்கம் இருப்புத் தொகை ரூபாய். 10,82,85,494.00 மாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம்


ரூபாய்.36,00,000 பங்கு மூலதனத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் வணிகத்தைக் கையாள RERA பதிவு செய்யப்பட்டது. அதன் வருமான வரித்துறை அறிக்கையின் படி, இந்த நிறுவனத்திற்கு எந்த வியாபாரமும் இல்லை. இந்த நிலையில் ஸ்ரீ ராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் 57.94 ஏக்கர் நிலப்பரப்பில் 1453 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக 2.12.2013 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆணையத்திடம் திட்ட அனுமதிக்கு மனு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாண்டுகள் பரிசீலனை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் 24.02.2016 ஆம் நாள் அன்று CMDA ஒப்புதல் அளித்தது. அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூபாய்.27.90 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பராமரிக்கப்படும் இந்தியன் வங்கியின் கணக்கு 28.01.2016 ஆம் தேதி முதல் 04.02.2016 ஆம் தேதி வரை 8 நாட்களுக்குள் ஆர்டிஜிஎஸ் மூலம் மொத்தம் ரூபாய்.27.90 கோடி வரவு வைக்கப்பட்ட இந்தத் தொகையை பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றதாகக் கூறப்படுகிற நிலையில் வைத்திலிங்கம் அவரது மனைவி, மகன்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் வருமானத்துக்கு அதிகமாக 1057 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தததையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம், அவரது மகன்கள் உள்ளிட்ட 11 நபர்கள் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு இதேபோன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் சட்டம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஒளிந்து கிடந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி முதல் வைத்தியலிங்கம் தொடங்கி விஜயபாஸ்கர் வரை வழக்கை துரிதப்படுத்தும் திமுக அரசு எடப்பாடி கே. பழனிச்சாமி மீதுள்ள கொடநாடு கொலை வழக்கு முதல் டெண்டர் முறைகேடு வழக்கு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன்? என்பதே மிஸ்டர் பொதுஜனம் கேட்கும் எழு வினாவாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...