முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்த சஷ்டி விழாவின் போது விரைவு தரிசனக் கட்டணம் உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கந்தசஷ்டி விழா திருச்செந்தூர் ஆலயத்தில் சுவாமி தரிசனக் கட்டணம் குறித்து


உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் காட்டமான கேள்வி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்து மதுரையில் வசிக்கும் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, பி.ராம்குமார் ஆதித்தன்  தனது 


வழக்கறிஞர்கள். எஸ்.சங்கர், மற்றும் எஸ்.கிருஷ்ணன், டி.பாக்யராஜ் ஆகியோர் மூலம் எதிர் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் ஆலயத்தின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்,  திருச்செந்தூர் நகர் காவல் ஆய்வாளர். ஆகியோர் மீது WMP(MD)/21608/2024 மற்றும் WMP(MD)/21610/2024 மற்றும் WMP(MD)/21609/2024 WP(MD)      /2024 எனும் வழக்கை தாக்கல் செய்தார். "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்  ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்தர் சஷ்டி விழா நடக்கிறது. விழாவின்போது தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு குறைவில்லாமல் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வருகிறார்கள்.




அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விழா இல்லாமல் மற்ற நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூபாய்.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  விசேஷ நாட்களில் விரைவு தரிசனக் கட்டணம் இரட்டிப்பாக, ரூபாய்.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின் போது விரைவு தரிசனக் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய்.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்களைகா கைது செய்யப்பட்டனர்.



பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அறநிலையத் துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.         இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா  தொடங்கி உள்ளதில் கூட்டத்தைகா கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய்.1,000 வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஆலய அறநிலையத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தர் சஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளைத் தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே கந்தர் சஷ்டி விழாவின் போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.


 இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சுவாமி தரிசனம் செய்வார்கள்? அவர்களால் இந்தத் தொகையைச் செலுத்த இயலுமா? இவ்வளவு கட்டணம் ஏன்? அப்படியானால் ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் அலயமா? என அடுத்தடுத்து கேள்விகளை காட்டமாகவே எழுப்பினார்கள்.                                                                   -விளம்பரம்-

                           -விளம்பரம்-           மேலும், இந்த மனு குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...