முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதைப் பொருள்கள் கடத்தல் ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 நபர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

போதைப் பொருள்கள் கடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்ட மங்கை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகியுமான




ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறையும் தனியாகப் பதிவு செய்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.   






302 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும்





சேர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரமுகர் ஜாபர் சாதிக் ஒரு பிரபலமான குற்றவாளி என்பதும், சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மை.





2019 ஆம் ஆண்டில், 38.687 கிலோ கெட்டமைன் எனும் போதை வஸ்தை மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாஃபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் பிடிபட்டனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் மாதம் 11-ஆம் தேதியில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! ஞானேஸ்வர் சிங் IPS மூலமாக நடத்திய விசாரணையில் 15/02/24 அன்று http:// F.NO .VIII/3/DZU/2024 வழக்கு பதிவு செய்து டில்லியில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்




இந்த வழக்கில் Zuko Overseas என்ற பெயர் தோன்றுகிறது மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஜாஃபர் சாதிக் மற்றும் ஒரு ஒரு பிரபலத்தால் தொடங்கப்பட்ட அதே நிறுவனமாகும்.

மே மாதம் 2021 ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜாஃபர் சாதிக் தமிழ்நாட்டைத் தனது வசிப்பிடமாக மாற்றினார் மற்றும் அவனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த முக்கியமான சிலருடன் கூட்டுச் சேர்ந்தார். 




2013- ஆம் ஆண்டில்  போதைப்பொருள் கடத்தலுக்காக ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதையும், 2019-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டதிலிருந்து தப்பியதையும் பற்றி எந்தத் தகவலையும் மறுக்கும் நிலை தற்போது  போல் இல்லை என்பதை  இந்த குற்றப்பத்திரிகை மெதுவாகவே நினைவுபடுத்துகிறது.





போதை கடத்தல் வழக்கில்,  மங்கை திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.  அதை தொடர்ந்து, ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது





இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர், ஜாபர் சாத்திக்கின் நண்பர்.  மட்டுமின்றி, இவர்கள் இருவரும் சேர்ந்து பல தொழில்களும் கூட்டாகச் செய்து வந்தனர்.  அதனால் தொடர்ந்து இயக்குனர் அமீரிடமும் விசாரணையை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என, ஜாபர் சாதிக் மற்றும் அமீர் ஒன்றாக இணைந்து நடத்தி வந்த நிறுவனங்கள், வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர். நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் அம்பலமாக்கிருக்கும் நிலையில்,




ஜாபர் சாதிக்கின் மனைவி, சகோதரர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்ட12 பேர் மீது அமலாக்க துறை 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  இந்தக் குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை கூடுதல் சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இதில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அமீருக்கு சம்மன் அனுப்பி நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.






அதில் திரைப்பட இயக்குனர் அமீர் 12 வது குற்றவாளியாக உள்ளார். வழக்கு விசாரணையில் மற்ற விபரங்கள் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...