முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் மற்றும் பாஜக வேலூர் இப்ராஹிம் செல்வதற்கு திடீர் தடை

திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் செல்வதற்கு திடீர் தடை விதிப்பு. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தார் செல்வதற்கு காவல்துறை தடை விதித்தனர். அது குறித்து ஆதீனம் கருத்துத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக சனிக்கிழமை மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் செல்லவிருந்தார். அவர் மலைமீது சென்று வழிபாடு செய்ய காவல்துறையினர் தடை விதித்தனர். அதனால் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பயணத்தை ரத்து செய்தது குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 


செய்தியாளர்களிடம் கூறுகையில்:- “திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சனிக்கிழமை வழிபாடு செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், காவல்துறை என்னை வரக்கூடாதெனத் தடுத்துவிட்டனர். மாற்று சமயத்தினர் தகராறு செய்து விடுவார்கள் என காவல்துறையினர் அச்சப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அதற்கு நான், ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக வழிபாடு செய்ய, குவலயத்தில் ஒரு வழி பிறக்கும் என்று சொன்னேன். புலவர் நக்கீரன் கூட முருகனைப் பற்றித்தான் பாடியிருக்கிறார். சிக்கந்தர் மலையைப் பற்றி பாடவில்லை. மகாகவி பாரதியார் கூட 'அண்டிப் பிழைக்கும் ஆடு; அதனை ஆதரிக்க வேண்டுமடி பாப்பா' என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் ஆட்டைக் கொண்டு சென்று அறுத்துச் சாப்பிடச் சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் மலைதான் என இலக்கியங்களும், நக்கீரரும் குறிப்பிடுகின்றனர்.

மலைக்கு மேலேயும், கீழேயும் சைவ வழிபாட்டு ஸ்தலம் இருக்கும் போது இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தத் தவறில்லை. ஆனால், அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? மலை என்ன கசாப்புக் கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு.

ஆதீன மடத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பு ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். அவன் என்னை திருச்சிராப்பள்ளி அருகே கொலை செய்ய முயற்சித்தார். அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டேன். அவன் தீவிரவாதியாக இருப்பாரோ எனச் சந்தேகமாக உள்ளது. மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் சேகர்பாபு எனது சிறந்த நண்பர். காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜையும், பள்ளிவாசலில் தொழுகையும் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும், அவரவர் மத வழிபாட்டைத் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் அவர் கூறினார்.   இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை தொகுதி திமுகவின் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி ஆகியோர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள



சர்ச்சைக்கு மத்தியில் பாஜகவின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா உள்ளிட்ட பலர் மலை மீது சென்று பார்வையிடார்கள். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிமை  கைது செய்தனர். அதற்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வேறு நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்ராஹிம் சென்றிருந்த போது

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காகவும் செல்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதையறிந்த காவல்துறை அலுவலர்கள், ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த இப்ராஹிமை மலைக்குச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.


உடனே பாஜகவினர் தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, வேலூர் இப்ராஹிம், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் புகைப்படத்தில் கால் செருப்பை எடுத்து அடித்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதையடுத்து,  வேலூர் இப்ராஹீமை கைது செய்தனர்.  இந்தகா கைது நடவடிக்கைக்கு அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தும், இப்ராஹிமை விடுவிக்கக்கோரியும், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய வாசலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர். இறுதியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...