முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் அனைவருக்கும் தண்டனை !

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் அனைவருக்கும் தண்டனை.  


குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், விழா மற்றும் விருந்துண்ண வருவோர், திருமணத்திற்கு வந்த புகைப்படம் எடுப்பவர், சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய வந்த புரோகிதர்,  திருமணத்தில் 'செல்பி' எடுத்துக் கொள்பவர், சீரியல் செட் போடும் நபர் நாயனக்கார மேளம் வாசிக்கும் நபர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனையும், அபராதமும் உண்டு:


என  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பணி செய்த வகையில் அப்போது எச்சரிக்கை விடுத்தார் காரணம் அங்கே நடந்த ஒரு திருமண நிகழ்வு அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 வது ஆட்சியராகப் பணியாற்றிய பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ் குழந்தைத் திருமணங்கள் தடுப்பில் அதிக ஈடுபாடு காட்டினார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 31.01.2025 அன்று க.தர்பகராஜ் ஐ.ஏ.எஸ் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.குழந்தைத் திருமணத் தடைச் ட்டம் -2006

இந்திய சட்டப்படி, குழந்தைத் திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்வதாகும். பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன. அவர்களில் பலர் மோசமான சமூக-பொருளதார நிலை மற்றும் விழிப்புணர்வில்லாதவர்கள்.

குழந்தைத் திருமணத்தை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இது ஒரு பொதுவான நிகழ்வு. சமூகத்தில் குழந்தைத் திருமணங்களை ஒழிப்பதற்காக, இந்திய அரசு முந்தைய சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், 1929 ஐ இரத்து செய்து, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 ஐ இயற்றியது. இந்தச் சட்டம் குழந்தை திருமணங்களைத் தடுப்பது, பாதுகாப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும். அவற்றை வழங்குபவர்கள் அல்லது நடத்துபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு 30.12.2009 ஆம் நாளன்று மாநில விதிகளை வகுத்து அறிவித்தது. இந்தச்சட்டத்தை திறம்படச் செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்தின் சமூக நல அலுவலர் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் அந்த  அலுவலர்கள், தகவல் தொடர்பு முறைகள் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தைத் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிக்கவும் முழுமையாக அதிகாரமுள்ளது. கிராமப்புறங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில், ஊராட்சி மன்றங்கள் அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.


குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளாக அரசு செயல்பாடுகளில் :

1 பொம்மலாட்டம், வீதி நாடகம், பேரணிகள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைத் திருமணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

2.குழந்தை திருமணத்தின் தீமைகளிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்துத் துறைகளுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

3.பெண் குழந்தைகளின் கல்வியை மையமாக வைத்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் திருமண உதவித் திட்டங்கள் பெண் குழந்தைகளின் 18 வயதை எட்டியதும் பயன்பெறும் வகையில் குழந்தை திருமணங்களை ஒழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

4.யுனிசெஃப் நிதியுதவியுடன், குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் 15 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு துறைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

5 சட்டம் மற்றும் விதிகள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டதன் மூலம் சட்டம் மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது.

குழந்தைத் திருமணத்தை ரத்து செய்தல் மற்றும் செல்லாத தன்மையாக்குதல்

குழந்தைத் திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் முடிந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குழந்தைத் திருமணத்தை ரத்து செய்யலாம். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை மட்டுமே திருமணத்தை  ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியும். சில சூழ்நிலைகளில், குழந்தை திருமணம் செல்லாது மற்றும் ரத்து செய்யப்படலாம் இந்த நிலையில் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் 1947 சுதந்திர காலத்திற்கு பிறகு தான் செயலாக்கம் பெறுகிறது அதற்கு முந்தைய சமஸ்தானத்தின் நிர்வாக காலத்தில் இந்த நிலை இல்லை இது குறித்து ஒரு நீள் பார்வை:- 'தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்' என  எட்கர் தர்ஸ்டன்  எழுதிய'தென்னிந்திய இன வரைவியல் குறிப்புகள்' என்ற நூலில் அதாவது (பெருந்திரட்டிலிருந்து) திருமணங்கள் தொடர்பான ஒரு சிறு பகுதியே இந்த நூலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

துவக்கத்தில் ஒரு பிராமணர் அல்லது அந்தணர் வீட்டு ஐந்து நாள் திருமணம் பற்றி விளக்கி (இந்த விவரிப்பிலேயே அறியாப் பருவத் திருமணங்கள் தான்) தொடர்ந்து ராஜுக்களிலிருந்து கோண்டு பழங்குடிகள் வரை பல்வேறு ஜாதியினருடைய திருமணங்களின் முக்கியமான சடங்குகளை விளக்குகிறார் தர்ஸ்டன்.

அரசு அறிக்கைகளிலும் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வேறு பதிப்புகளிலும் புதைந்து கிடந்த, பல்வேறு பகுதிகளில் அலைந்து மாவட்ட அலுவலர்கள், தனிநபர்களிடம் பேட்டி கண்டு எழுதிக் கேட்டு சேகரித்த ஏராளமான விஷயங்களை நூலில் திரட்டித் தந்திருக்கிறார். 

விசாகப்பட்டினத்திலுள்ள 'கடப' என்ற ஜாதியில் திருமணத்துக்கு முன் மணமகன் அவருடைய மாமனாரிடம் ஓராண்டுக்கு வேலை செய்ய வேண்டியிருந்ததையும், பின்னர் அதற்கு ஈடாகப் பணம் தரப்பட்டதையும் தெலுங்கு ராஜுக்கள், வெலமா ஜாதிகளில் மணமகனுக்குப் பதிலாக சத்திரிய முறைப்படி வாளை அனுப்புவதையும், திருநெல்வேலி மறவர்கள் ஒரு கம்பை அனுப்பிவைத்துத் தாலி கட்டுவதையும் பதிவு செய்துள்ளார் தர்ஸ்டன்.

கிழக்குக் கடற்கரையில் இருக்கும் அதாவது கீழக்கரை மரைக்காயர்கள் பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகின்றனர் என்பது போன்ற எண்ணற்ற தகவல்கள் அதில் பரவி விரவிக் கிடக்கின்றன. அத்தை மகள், மாமன் மகளை மணப்பது தொடர்பான வினோதமான வழக்கங்களுடன் தர்ஸ்டன் தெரிவித்துள்ள எத்தனையோ சடங்குகள் இப்போதில்லை. அல்லது உருமாறி வெவ்வேறு வடிவெடுத்து விட்டிருக்கின்றன. 

வியக்க வைக்கும் தகவல்கள் நிறைந்த கருவூலம் இந்த நூல் வரலாறு அறியாமல் இருக்கும் இந்த தலைமுறை அடுத்த தலைமுறைக்கு சொல்லிச் செல்ல வேண்டிய தகவல் அதிகம் அதை அறிந்து கொள்ளாத இளைய சமுதாயம் அடுத்த இரண்டு தலைமுறைகள் தாண்டிய பிறகு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பண்பாடுகள் மறைந்து போகலாம், ஆகவே இது போன்ற நூல்கள் காலப் பெட்டகம் அது இக் காலத்தில் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.குஜராத்திக் கவிஞரும் சீர்திருத்தவாதியுமான பி.எம். மலபாரி எனும் பார்சி அப்போது கல்கத்தா ஆட்சியில் இருந்த வைஸ்ராய் ரிப்பன் பிரபுவிடம் பால்ய விவாஹம், விதவைக் கொடுமைகள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை 1884 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி பிரிட்டிஷ் ஆட்சி பல்வேறு பிரமுகர்களுக்கு அனுப்பிக் கருத்து கேட்ட போது மராட்டிய சமூகநீதிப் போராளி ஜோதிபாபுலே பால்ய விவாஹத்துக்கு தடைபோட வேண்டும் என உறுதியாகக் கூறினார். கவிஞர் மலபாரி, இங்கிலாந்துக்கே சென்று அந்தச் சட்டத்துக்கு ஆதரவு திரட்ட முயன்ற போது, பால் கங்காதர திலகருக்கு கோபம் வந்தது. “இவர் ஒரு பார்சிக்காரர். இவர் எப்படி ஹிந்து மதப் பிரச்சினைகளில்  தலையிடலாம்?” என தனது ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார். கடும் எதிர்ப்புகளுக்கிடையே பெண்களின் திருமண வயதை பத்திலிருந்து பனிரெண்டாக உயர்த்தி ஒரு மசோதா வந்தது.  இதுவே ஆரம்பம் தற்போது தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடநத 6 ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீத குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக தகவல் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...