முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடன் சுமையை அதிகரிக்கும் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை கூறுவது என்ன

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக அமைச்சர்  தங்கம் தென்னரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின்னர் பேரவைக்குள் சென்றார்.   




அவர் அறிவித்த நிதிநிலை அறிக்கையில் ரூபாய்.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை அறிவியல் மையம்,

UPSC முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூபாய்.50,000 ஊக்கத்தொகை,




அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண் செய்யலாம்!

இனி மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூபாய்.1000 ஊக்கத் தொகை!

மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை



பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை சீரமைக்க மானியம். (பழமை என்பது குறித்து ஆண்டு கூறவில்லை) தமிழ்நாடு நிதிநிலை அறிக்கயில் குறிப்பாக மதுரைக்கு 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 




வைகை ஆற்றங்கரை மேம்பாடு , மாநகராட்சி சாலைகள் மேம்பாடு , தொழில் வளர்ச்சி மூலமான வேலை வாய்ப்புகள் , அகர மொழிகளின் அருங்காட்சியகம் , பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் , காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள் வந்தது. 

275 கோடி மதிப்பீட்டில் 1000 மாணவிகள் பயன்பெறும் தங்கிப் பயிலும் நவீன வசதிகளுடன் கூடிய 3 விடுதிகள் ,





மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூபாய் 130 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்துதல்

வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சிப் பகுதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள் , தெருவிளக்குகள் , பூங்காங்கள் உருவாக்கம். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விடுதி வசதிகளுடன் கூடிய புதிய தொழிற் பயிற்சி மையம். 

250 கோடி முதலீட்டில் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூரில் காலணி தொழிற்பூங்கா.

2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மதுரை மாவட்டம் கருத்தப் புளியம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை,




போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படிப்பகம், 

உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உறுதிபடுத்தும் துணை திறன்மிகு மையம் 

மதுரை அரிட்டாபட்டி போன்ற பல்லுயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாக்க 1 கோடி ரூபாய்.

மதுரை மாநகரத்திற்கு புதிய 100 மின் பேருந்துகள். 

மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ 11,368 கோடி திட்டத்திற்கான மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடித் துவக்கம் 




மதுரை - சிவகங்கை மரபு சார்ந்த சுற்றுலா வழித்தடம். 

48 கிலோமீட்டர் மதுரை வெளிவட்டச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை. 

75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் புதிய திட்டம். 

மதுரை உள்ளிட்ட 11 நகரங்களுக்கென தனியான வெப்ப அலை செயல்திட்டங்கள். 

10 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை மையம் .

மதுரையில் அகர மொழிகளின் அருங்காட்சியகம்.டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம்(CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூபாய்.70 கோடி ஒதுக்கீடு.       மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு.  தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும். 

இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


மேலும் நடந்து முடிந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டு பதிப்பாளர்கள் இன்னும் 28 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்னும் 45 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையினைத் திருக்குறள் பெற்றிடும். இதற்காக தமிழ்நாடு அரசு ரூபாய்.133 லட்சம் ஒதுக்கியுள்ளது." என அமைச்சர் தங்கம் தென்னரசு   அறிவித்தார் 

மூன்றாம் பாலினத்தோர் ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவர்.             ரூபாய்.2000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழிக் கொள்கையை விட்டுதர மாட்டோம் என்றும், 

சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள்

ரூபாய்.600 கோடியில் 25,000 வீடுகள்!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் காங்கிரிட் வீடுகள் கட்ட ரூபாய்.3500 கோடி  ஒதுக்கப்படும்

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூபாய்.2,200 ஒதுக்கீடு

திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூபாய்.400 கோடியில் திட்டம் தொடங்கப்படும்

வேளச்சேரியில் ரூபாய்.310 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். .   உதயகுமார் த/பெ. தர்மலிங்கம் என்ற   திமுக சட்ட மன்ற உறுப்பினர் மகனால் வடிவமைத்து காங்கிரஸ்-திமுக மத்தியில் கூட்டணியில் இருக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ₹ சின்னம் அல்லது முத்திரை இப்போது அதே திமுகவால் நீக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிதி அமைச்சர்




ப.சிதம்பரம் உதயகுமாரை பாராட்டிய நிலையில் இப்போது அது நீக்கப்பட்டு புதிய ரூ சேர்ந்துள்ளது. நாம் என்னதான் வட மாகாணத்தவரைத் திட்டினாலும் அவர்கள் மொழியை பலர் வெறுத்தாலும் அவர்களுடைய கலாச்சாரம் இங்கு வேகமாகவே பரவி வருவதை சமீபத்திய காலமாகக் காண முடிகிறது. பஞ்சாபி சுடிதார் இங்கு வெகு இயல்பான உடையாக மாறி நிண்ட நாட்கள் ஆகின்றன. பானி  பூரி, போண்டா வடையை மிஞ்சி இப்போது புகழ் பெற்ற தின்பண்டம்.  வீரத்  தமிழ் திருமணங்கள் முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம் கலந்து மாறிவிட்டது. மார்வாடி உடையலங்காரங்கள், ஹல்தி, மெஹந்தி , சங்கீத் எல்லாம் கட்டாயம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஒத்திகைகள், உடையலங்காரத் திட்டங்கள், வீடியோ செலெக்ஷன் அனைத்தும் மாதக்கணக்கில் நடக்கின்றன  ரிசப்ஷன்  மெனுவில்  ரூமாலி ரோட்டி, ஸ்வீட்ஸ்  தொடங்கி இட்லி தோசையை தவிர அனைத்தும் வட இந்திய உணவுகள் தான்.

பாராத் இன்னொரு கட்டாயம். கோஷ்டியாக ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், ஒரு பந்தலை தலைக்கு மேல்  பிடித்துக் கொண்டு நடப்பதும், மேடையில் மணமக்கள் மற்றும் அவர்கள் தாத்தா பாட்டி  உட்பட அனைவரும் குரூப் டான்ஸ் ஆடுவதும் , கிட்டத்தட்ட 'ஹம்  ஆப்கே ஹை கவுன்' படத்தை மீண்டும் பார்ப்பது போலவே இருக்கிறது !

சரி, வாங்க ஹோலி  கொண்டாடுவோம்! என்ற நிலையில் தற்போது இந்திய படிப்பது குறித்து விவாதிக்க வேண்டிய நிலை இல்லை, என்பது பலருக்கும் புரியாத நிலையில் பணத்தின் குறியீட்டை மாற்ற, தமிழ்நாடு அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கு? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

இனி எப்படி?தமிழில் ரூ தனித்து வருமா? உரூ என உகரத்துடன் வருமா? ‘ முதல்வர்’  பதில் சொல்வாரா? என அவரது வினா பலரும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அரசியல் வாதிகள் பலம் மக்களின் பலஹீனம். மொத்தத்தில் நிதி நிலை அறிக்கை. நாட்டின் கடன் சுமை வலியுறுத்தி உள்ளது


மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது.
உயர்ந்துகொண்டிருக்கும்தமிழ்நாட்டின் கடன் சுமை! தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன் மதிப்பும்.  உயர்ந்து கொண்டே இருக்கிறது.  நடப்பு நிதியாண்டில் ரூ.1,62,096.76/- கோடி (1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடியே 76 லட்சம்) கடன் வாங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 31.03.2026 அன்று ரூ.9,29,959.30/- லட்சம் கோடியாக (9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சம் ரூபாய்) இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் மேல் கடன் தமிழகத்தின் கடன் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும்  ரூபாய். 4/-  லட்சம் வரை கடன் சுமையை ஏற்றிய நிலையில்  நான்கு ஆண்டுகளில் ஊழல் தடுக்க வேறு எதையும் செய்யவில்லை!
ஆட்சி 2026 வரை உள்ள நிலையில் தமிழகத்தின் கடன்தொகை 10 லட்சம் கோடியை கடந்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...