முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறமற்ற கல்விச் சாலைகளில் தயாரான தரமற்ற மாணவர்களால் பதைபதைக்கும் பாளையங்கோட்டை சம்பவம்

திருநெல்வேலி பாளையங்கோட்டை ரோஸ் மேரி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே பென்சில் வாங்குவதில் தான்  மோதல்


ஏற்பட்டிருக்கிறது.  இது மறந்து, போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை  வீட்டிலிருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும் அறமும் கிடைக்க வேண்டிய பள்ளிகளில் நடக்கும் இத்தகைய மோதல் நிகழ்வுகள் நடப்பது வேதனையான நிகழ்வு. இந்த சீரழிவை போக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்தி சரி செய்யப்பட வேண்டும்.

தென் மாவட்டங்களில் பல்வேறு காலங்கள் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டதும்,  தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டதும் என வன்முறை நிகழ்வுகள் தொடர்கிற செயல். இது நாகரிகத்தின் அழிவின் நிலையை எட்டி வருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் என்பது ஏற்கமுடியாத செயல்இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றுள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.


தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெட்டப்பட்ட ஆசிரியரும் மருத்துவமனையில் உள்ளார்.

அரிவாளால் வெட்டிய மாணவன் பின்னர், பாளையங்கேட்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்தான். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நடத்திய.

முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது 


நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி திறக்கப்பட்டதும், அரிவாளுடன் வகுப்பறைக்கு வந்த மாணவன் இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.               ஒழுக்கம் என்பது கல்வியை விட மேலானது. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை' என்கிறது முதுமொழிக் காஞ்சி.

 ஆனால், அண்மைக்காலமாக, கல்விச் சாலைகளில் ஏற்படும் முறையற்ற நிகழ்வுகள், கற்றல் காலத்தில் தன்னையே மாய்த்துக்கொள்ளும் கொடிய செயல்கள், பெற்ற கல்வியறிவை வெறும் உயர் பணிக்காக மட்டும் எண்ணல், பயிற்று மொழிதான் உலகறியச் செய்யும் என்றெண்ணி தாய்மொழியை ஒதுக்கல், பிறந்த மண்ணின் மாண்பை மறந்து பிறமொழி நாகரிகத்தில் ஒட்டி உறவாடல் - இவையெல்லாம் இன்றைய இளைஞர்களின் நனிமிகு நாகரிகமாக விளங்குவதைக் கண்டால் நெஞ்சம் பதைக்கிறது.


 நம் பண்டைய கல்வி முறையில் கல்வி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. "அ' விற்கு "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றது. "அறம் செய விரும்பு', "ஆறுவது சினம்', "ஊக்கமது கைவிடேல்', "எண் எழுத்து இகழேல்', "ஓதுவது ஒழியேல்' என்று அறத்தின் வழிப் பொருளீட்டி வாழ வகை செய்தது.

 ஆனால், இன்றைக்கு, தொலைக்காட்சி, திரைப்படம், கைப்பேசி, கணினி என வெகுமக்கள் செய்தித் தொடர்பால் தடம் மாறித் தொலைந்துவிட்ட இளையோரை மீட்டுருவாக்கம் செய்யபோவது யார்? பண்டைய கல்விமுறை, அறம், ஒழுக்கம், அன்பு, ஈகை, பெற்றோரைப் பேணிக்காத்தல் ஆகிய நற்பண்புகளை வெளிக்கொணர்ந்தது. ஆனால், இன்றைய கல்விமுறை அதிலிருந்து விலகி வெகு தொலைவு சென்றுவிட்டது.

 பிள்ளை நெறி தவறும்போது அன்பு காட்டி அரவணைத்து உன் துன்பங்கள் நீக்க நாங்கள் உடன் இருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வைப் பெற்றோர் தர வேண்டும். குழந்தைகள் மனம் விட்டுப் பெற்றோரிடம் பேசும் துணிவை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மொத்தத்தில் குடும்ப அன்பும் அரவணைப்புமே ஒரு குழந்தையை அதன் பாதையில் இருந்து தடம் பிறழாமல் காக்கும்.அல்லலுறும் மனங்களை ஆற்றுப்படுத்த, பள்ளி, கல்லூரி காலங்களில் தாய்மொழியில் கற்ற அற இலக்கியங்கள் அவர்களுக்குத் தாயாகத் துணைநின்று அன்புடன் பரிவையும் மனத்தெளிவையும் உண்டாக்குமென்பதை இன்றைய இளையோர் உய்த்துணர்தல் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...