முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஞ்சிபுரம் சங்கர மடம் சந்யாச ஸ்வீகார மஹோத்ஸவம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சன்யாச ஸ்வீகர மஹோத்ஸவம்- சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜியின் சந்யாச ஸ்வீகார மஹோத்ஸவம்.


சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார்.



பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.     அட்சய திருதியை என்பது ஹிந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாள். சித்திரைத் திங்கள் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளாகிறது.



முதல் யுகமான கிருத யுகத்தில் உலகம் தோற்றுவித்த நாள். அட்சய திருதியை துறவறத்துடன் நேரடியாகத் தொடர்புடையது அல்ல,இன்றைய தினத்தோடு கணேஷ சர்மா டிராவிட் என்ற நாமம் போய் விடும். இன்றோடு கணேஷ சர்மா மற்றவர்களுக்கு நமஸ்காரம் செய்வது போய் விடும், இன்றோடு இல்லத்திலிருக்கும் சொந்த, பந்தம் போய் விடும், இன்றோடு இவரை பெயர் சொல்லி அழைத்தவர்களால் இனி அழைக்க முடியாது,


இன்றோடு கணேஷ சர்மா மற்றவர்களிடம் வாய் மூடிப் பேசியது இனி தனது குருவிடம் மட்டுமே வாய் மூடிப் பேசுவார், இனி தனது குருநாதர்களுக்கு மட்டுமே நமஸ்காரம். இனி அப்பா, அம்மா, அக்கா உடனில்லை எந்த சொந்த பந்தமும் உடனில்லை. ஆனால் உலகமே காலடியில். மீண்டும் மஹா பெரியவா போல் அனைவருக்கும் ஆசீர்வதிக்க வேண்டும். மீண்டும்  சந்திரசேகர சரஸ்வதி பெரியவா போல ஊருக்கு, உலகத்திற்கும் நல்லது செய்திடல் வேண்டும். மஹா பெரியவா எப்படி அனுதினமும் காலையில் நமஸ்காரம் செய்தார்களோ அதே போல்



அனுதினமும் அதிகாலை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கும், பிருந்தாவனத்தில் இருக்கும் இரண்டு பெரியவாளுக்கும் நமஸ்காரம் செய்திடல் வேண்டும். இனி உலகமே உங்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். ஆனால் நீங்கள் உங்கள் குருநாதருக்கு மட்டுமே நமஸ்காரம் செய்ய முடியும்..



இனி பெத்த அம்மாவைப் பார்க்க முடியாது. ஆனால் அப்பா மட்டுமே பார்க்கலாம். இருந்தும் நாளை முதல் தந்தை பார்த்தாலும் தந்தை தான் ஜகத் குருவிற்கு நமஸ்காரம் செய்திட வேண்டும். இந்தப் பீடத்தை ஆளும் சக்தி உங்களின் கைகளில் நாடாளும் மன்னரே வந்தாலும் உங்களுக்கு வணங்கி உள்ளது. சிறப்பாக பீடத்தை ஆட்சி செய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். இன்றே செய்வாய், நன்றே செய்வாய், நல்லதையே செய்வாய்..... ஜெய் சங்கரா தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வாரிசுகளை இந்தியா முழுவதும் உருவாக்க இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும் அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என அதிகார மமதையை  போலியான மனிதர் பலரும் விரும்பும் நாட்டில் சன்னியாச வாழ்வுக்கு , இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை என உறவறுத்து அனுப்புவதெல்லாம் எல்லாராலும் முடியாத செயல்




தன் பிள்ளைதான் தனக்கான அடையாளம், குல அடையாளம், தன் வம்சத்தைப் பெருக்கி தன்னை கடைசி காலத்தில் விழுது போல் காக்கும் அடைக்கலம் என்பதையெல்லாம் தாண்டி வாழவேண்டிய வயதில் அவனை கடும் சன்னியாசம் அனுப்புவதெல்லாம் எல்லாப் பெற்றோராலும் செய்ய முடியாத செயல்.                                                                                      -விளம்பரம்- 

                          -விளம்பரம்-                  அது ஒரு வலி, ஒருவகை தானம், அழவேண்டிய இடமும் அதுதான் ஆனால் சொட்டு கண்ணீர் வரக்கூடாத இடமும் அதுதான்

அந்த வலி ஆதிசங்கர் பெற்றோர்க்கு உண்டு,  பட்டினத்தாரின் தாய்க்கு உண்டு, ஸ்ரீ ரமணர் மகாபெரியவரின் பெற்றோரின் வலியும் இன்னும் பல மகான்களை பெற்றவர்களின் வலியும் அதுதான்


விவேகானந்தர் குடும்பத்தார் நிலையும் அதுதான்

கோசலைக்காவது தன் மகனை ஸ்ரீ ராமனை மணகோலத்தில் கண்டுவிட்ட நிறைவிருந்தது 14 வருடத்தில் வனவாசம் முடிந்து அவன் மீண்டு இல்லம் திரும்புவான் எனும் நம்பிக்கை இருந்தது




ஆனால் இங்கே?

அந்தப் பெற்றோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து, காலமெல்லாம் இச்சமூகம் உங்களை காக்கும் எனும் நம்பிக்கையினைக் கொடுக்க வேண்டிய தருணமிது

இது அந்தணர்கள்  மற்றும் சைவப் பிள்ளைகள், ஆண்டிப்பண்டாரங்களில் மற்றும் சமணர்களிடம் வைணவ நெறிகளில் மட்டுமே காண முடியும்                                                         -விளம்பரம்-

                         -விளம்பரம்-

ஆதிசங்கரர் தன் தாயிடம் அழுத ஸ்லோகம் ஒன்றுண்டு

"குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா

யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை

குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்

ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம"

என் தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்தாய், வந்து உன் கனவில் நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படியான‌ உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்


சங்கரமடத்தில் அந்த புதிய சன்னியாசி தீட்சை பெறும் நேரம் காதில் ஒலிக்கும் ஸ்லோகம் அதுதான் அந்த தாயின் மனநிலையும் அதுதான்




அந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் எல்லா பலமும் அருளும் பகவான் அருளட்டும், தேசமும் தேச மக்களும் அவரை சூழ இன்று காக்கட்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...