இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், சிறையிலிருந்த
தமிழ்நாடு மீனவர்கள் 11 நபர்களை நேற்று நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஊர்க்காவல் துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் 11 நபரையும் எந்தவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மீனவர்கள் 11 நபர்கள் தண்டனை மற்றும் அபராதமின்றி விடுதலை செய்திருப்பதாக தெரியவந்தது. இந்தியா இலங்கை இடையே கையெழுத்திடப்பட்ட 7 உடன்படிக்கைகள் விபரம்:-
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இராம நவமி நாளில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து, இராமேஸ்வரம் தீவு பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில்வே, சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
இராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் போக்குவரத்து சேவையை கொடியசைத்துத் துவங்கி வைக்கிறார்
பிரதமர் நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும் புதிய கப்பலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.
அதன் பின் மதியம் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு இராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
புதிய பாம்பன் இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, இராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலிருந்து தொடங்கப்பட்டது.
ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இது 550 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும் கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயரும். இது கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது. துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்ட இந்தப் பாலம் அதிகரித்த ஆயுளையும் குறைந்த பராமரிப்புத் தேவைகளையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு, ரயில் பாலத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது கடுமையான கடல் சூழலில் ரயில் பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும். பிரதமர் வருகையையொட்டி மத்திய சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஹெலிபேடு தளம், மண்டபம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முதல் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை முடித்து, மதியம் 3.50 மணிக்கு இராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல்துறை ஆணையர் லோகநாதன், காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.
இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரைச் சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையில் பிரதமர் நிகழ்வு குறித்து உள்ள பதிவுகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன்
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், நுவரேலியா புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும். இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் நேற்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற விருது பிரதமருக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும். இந்த உயரிய கௌரவம் பிரதமருக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்ட நிலையில். சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவை தெரிவு செய்திருந்தார். தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை இந்திய பிரதமரைச் சார்ந்துள்ளது. இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது. என பிரதமர் தரப்பில் தகவல்.
இராமேசுவரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நாளை திங்கட்கிழமை மதியம் 2.50 மணிக்கு விரைவு இரயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் புறப்படும் விரைவு இரயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.
அது போல், இராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு இரயில் புறப்படுகிறது. மேலும், கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் இரயில் 8-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு இராமேசுவரத்துக்கு வருகிறது. இராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூரு க்கு 9-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு இரயில் புறப்பட்டுச் செல்கிறது. இராமேசுவரம்-மதுரை பயணிகள் இரயில் நாளை ராமேசுவரத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் இரயில் காலை 10.45 மணிக்கு இராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. மொத்தம் 28 ரயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே இராமேசுவரத்துக்கு இயக்கப்படும்.
பாம்பன் புதிய ரயில் மற்றும் கப்பல் கடக்க உருவான பாலத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் "என் அன்பு தமிழ் சொந்தங்களே. இந்தப் புண்ணிய இராமேஸ்வரம் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கு இராமநவமி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சில மணி நேரத்திற்கு முன், அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில், பாலராமருக்கு சூரிய கதிர்கள் திலகம் வைத்த நிகழ்வு நடந்தது. கோஷமிட்டனர் பகவான் ஶ்ரீ ராமரின் வாழ்க்கை, அவரது சிறப்பான ஆட்சியில் நமக்குக் கிடைக்கும் உத்வேகம் தேசத்தைகா கட்டமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இன்று இராமநவமி என்பதால், என்னோடு சேர்ந்து சொல்லுங்கள். ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம். உடன், மக்களும் கோஷமிட்டனர்.கோவிலில் வழிபட்டதை, எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இன்று சிறப்பான நாள். 8,300 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது சாலை, ரயில் திட்டங்கள்; தமிழகத்தின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். இது, அப்துல் கலாம் பிறந்த மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்குக் கற்பித்துள்ளது. அது போல, இராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாக இணைத்திருக்கிறோம் இப்பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு பாலம். பெரிய கப்பல்களும் இதன் கீழ் செல்ல முடியும். ரயில் வேகத்தோடு செல்லும். பல ஆண்டுகளாக இப்பாலத்தை அமைக்க கோரிக்கை இருந்தது. மக்கள் ஆசியுடன் இப்பணியை முடிக்கும் பெருமையை நாங்கள் பெற்றோம். பாம்பன் பாலம் எளிமையான வணிகத்தையும், போக்குவரத்தையும் ஊக்குவிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை தாக்கத்தை இப்பாலம் ஏற்படுத்தும். புதிய இரயில் சேவை, இராமேஸ்வரம் -- சென்னை மற்றும் நாடு முழுவதும் இரயில் சேவையை மேம்படுத்தும். தமிழ்நாடு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு இது பெரும் பலனளிக்கும். இளைஞர்களுக்கு புதிய தொழில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன." என்றார்
கருத்துகள்