முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலங்களவை திமுக கூட்டணி வேட்பாளர்களாக கமலஹாசன் உள்ளிட்ட நால்வர் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவைத்த் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படி மக்கள் நீதி மைய்யத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.





தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாட்டாளி மக்கள் கட்சியின்   அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் சந்திரசேகரன், மதிமுக சார்பில் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த சூழலில் தமிழ்நாட்டிலிருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.



ஆளும் திமுக நான்கு இடங்களுக்கும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிட உரிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் திமுக சார்பில் ஓரிடம் கூட்டணிக் கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கும் திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.பி.வில்சன்

மூத்த வழக்கறிஞர் திமுகவுக்கும், தமிழ்நாட்டுக்காகவும் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வெற்றியை தேடித்தந்தவர். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்றவரை, அவர் ‘வின்சன்’ என அழைக்கும் அளவுக்கு நன்மதிப்பை பெற்றவர். புஷ்பநாதன் என்ற வில்சன் என்பது  முழுப்பெயர். 1966, ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆசான் மெமோரியல் கல்லூரியில் பள்ளிப்படிப்பும், லயோலா கல்லூரி பட்டப்படிப்பும், பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த வில்சன், 2009-ஆம் ஆண்டு 43 ஆவது வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரானார்.


 2008-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். சமச்சீர் கல்வி, விஷ்ணுபிரியா வழக்கு, மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடம் தொடர்பான வழக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், ஓமந்தூரார் எஸ்டேட் வழக்குகள், துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வாதாடி வெற்றியைப் பெற்றவர். அதற்காக 2019 ஆம் ஆண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினரான வில்சன், மீண்டும் இம்முறையும் போட்டியிடுகிறார். அதேபோல் 



எஸ்ஆர் சிவலிங்கம் 




சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1991, மற்றும் 2001 சட்டமன்ற தேர்தல்களில் பனமரத்துப்பட்டியில் தோல்வி, 2011 ஆம் ஆண்டில்  சேலம் தெற்கில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். நீண்ட காலமாக திமுகவில் இருப்பதால் இவருக்கு இப்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்துள்ளது. அதேபோல் ரொக்கியா பேகம் என்ற ராஜாத்தி சல்மா  என்பவர் 1968 ஆம் ஆண்டு  திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த தமிழ் இஸ்லாமியக் குடும்பப் பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். ராஜாத்தி சல்மா 1968 ஆம்  ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியில் சம்சுதீன், சர்புன்னிசா வின் மகளாகப் பிறந்தார். 13 ஆம் வயதில் தனது தோழிகளுடன் திரையரங்கு சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை தொடர்ந்து பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. திராவிடப் பாரம்பரியம் கொண்ட அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் கவிதைகள் ,கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதத் தொடங்கினார்.


சல்மாவின் 17ஆம் வயதில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக அவரது முதல் கவிதைத் தொகுப்பான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வெளியானது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், பொன்னம்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராஜாத்தி பேகம் என்கிற ரொக்கையா, திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...