முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை செயலாளர் பெ.அமுதா இ ஆ ப வெளியிட்ட அரசாணையில் உள்ள தகவல்கள்: வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, வருவாய்த் துறை செயலாளரின் கருத்துருவை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர் ஆன தலையாரி பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்எஸ்எல்சியில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இரண்டு சக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்தத் தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண...

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய ஐ.பி.எஸ் பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜரானார்

 விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய ஐ.பி.எஸ். அலுவலர் பல்வீர் சிங் வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில்  ஆஜரானார்.  திருநெல்வேலி 1-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு  விசாரணைக்கு வந்ததில் ஐ.பி.எஸ். அலுவலர் பல்வீர்சிங் மற்றும்  காவல்துறையினர் இன்று ஆஜராகினார். இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து  அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2023-ஆம் ஆண்டு...

ஊழல் நீதிபதி குறித்து குடியரசு துணைத் தலைவரின் கருத்து

டில்லியில், கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் நீதிபதியின் வீட்டில் கணக்கில் வராத, சட்டவிரோதமான மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல நாட்களாக அந்த விஷயம் பொது வெளியில் மக்களால் விவாதிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். அமைப்புகளில் இருந்து, கறைபடிந்த, கணக்கில் வராத மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் கைப்பற்றப்படும் போது, அது யாருடையது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பணம் வந்த பாதை என்ன? எங்கிருந்து வந்தது? பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரும் உள்ளனரா? நீதித்துறை அல்லது நீதித்துறைப் பணிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா? இந்தப் பிரச்னைகள் அனைத்தும் வழக்கறிஞர்களை மட்டுமல்ல சாமானிய மக்களையும் கோபமடைய வைத்துள்ளது. ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? என கேள்வி எழுகிறது. ஒரு ஜனநாயகத்தில் சிலர் மட்டும் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் கடுமையாக சமரசம் செய்யப்படுகின்றன.இரண்டு மாநிலங்களின் நீதித்துறையை உள்ளடக்கிய உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி...

தைலாபுரம் தோட்டத்தில் பட்டயக் கணக்கர் குருமூர்த்தி அரசியல்

வாக்குகள் எண்ணிக்கை தான் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் கூட்டணி சேர்வது அதிமுக வா? அல்லது திமுக வா? என்ற ஊசலாட்டதில் இருக்கையில்  பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரக் கரம் நீள்கிறது என கவனம் பெறுகிறது பட்டயக்கணக்கர் குருமூர்த்தி யின் வார்த்தையை நன்கு கவனியுங்கள்.  தந்தை மருத்துவர் ச. ராமதாஸ் -மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸுடன் சந்திப்பு என்பது தனிப்பட்ட நடவடிக்கை அது இன்று நடந்தது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்திக்க மருத்துவர் அன்புமணி தைலாபுரம் தோட்ட வீட்டுக்குச் சென்றிருந்தார். சுமார் 45 நிமிடங்களுக்கு பின், மருத்துவர் அன்புமணி வெளியே வந்தார். தைலாபுரம் தோட்டத்திற்கு பட்டயக் கணக்கர் குருமூர்த்தியும், அதிமுகவின் முன்னாள் சென்னை மேயர் சைதை சா.துரைசாமியும் மருத்துவர் ச.ராமதாஸை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீண்டது. பட்டயக் கணக்கர் மற்றும் ஆர் எஸ் எஸ் பிரமுகர் குருமூர்த்தியிடம் மருத்துவர் அன்புமணியின் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், 'எனக்கு அன்புமணி இங்கே வந்தத...

பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம்

ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார் கட்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர்  பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்ப...

பாஜகவில் மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மகள் காலமானார்

மொடக்குறிச்சி தொகுதி பாரதிய ஜனதா கட்சியின், சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதி டாக்டர் சின்னுசாமியின் மகள் கருணாம்பிகா, வயது 54. இவரது கணவர் 'ஆற்றல்' அசோக்குமார், பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், பல உறுப்புகள் செயல் இழந்ததோடு, 36 மணி நேரத்துக்குள் தொற்று வேகமாக ப் பரவியது, நேற்று உயிரிழந்தார். 04.06.2025 ஆம் தேதி நண்பகல் 2 மணி அளவில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் . அவரது இறுதிச் சடங்கு ஈரோடு, பாசூர், சோளங்காபாளையம் இல்லத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதிக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் ஒருவர் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றொருவர் அதிமுக கட்சி சார்ந்தவர் எப்படியோ அரசியல் பதவி அதன் செல்வாக்கு மற்றும் கல்வி நிறுவனங்கள் அதில்  ஏறாளமான கொள்ளைகள் ஆனால் இறப்பை  இந்த பூமியில் யார் வெல்லுவர். காலம் தான் முடிவு செய்யும்.

ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது

 தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா மாறுதல் செய்வதற்காக ரூபாய்.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை ஊழல் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா மாறுதல் செய்வதற்காக ரூபாய்.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா அம்மங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன். அவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் கூட்டுப் பட்டாவில் உள்ளதை சர்வே உட்பிரிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு, தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியில் வசிக்கும் முருகேசன், (வயது 32), என்பவரை அணுகியுள்ளார்.அப்போது, முருகேசன் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகிலுள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல்படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில...

வலுவில்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்பது சிறிய பொறியில் ஊழல் வாதிகள் எனும் பெரிய எலிகள் சிக்குமா என்பதே தற்போதய நிலை

தமிழ்நாட்டில் வலுவில்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்பது சிறிய பொறியில் ஊழல் வாதிகள் எனும் பெரிய எலிகள் சிக்காது ஆகவே சட்டத் திருத்தம் அல்லது மாற்றம் தேவை என்பது தான் பலரது கருத்து. இந்தியாவின் லோக்பால் சட்டத்திற்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்திற்கும் சில முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு  என்பது ஒரு ஊழல் தடுப்பு ஆணையம் என்ற நிலையில். ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது 2018 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் மட்டுமே ஊழல் குறித்து விசாரணை நடத்தும் படி 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்துள்ள ஊழல்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தும் படி  நிறைவேற்றப்பட்டது. முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்ந்தெடுக்கும் குழுவும்  அமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவு...

மன்னிப்புக் கேட்க முடியாது கமல்ஹாசன் கருத்து நிரந்தரமாகுமா

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தானது கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளைப் பற்றியது புண்படுத்தியுள்ளதென்றும், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவும் வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியது. "எந்தவொரு குடிமகனுக்கும் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை. ஜலா, நிலா, பாஷே - இந்த மூன்று விஷயங்களும் குடிமக்களுக்கு முக்கியம். மொழி என்பது குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. அதைக் குறைத்து மதிப்பிடும் வகையில் நீங்கள் ஏதோ சொல்லிவிட்டீர்கள்" என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அவர் ஒரு வரலாற்றாசிரியரா? அல்லது மொழியியலாளரா? எனவும் வினவியது.  "ஒரு பொது நபர் அதுவும் நடிகர் ஒரு அறிக்கையை வெளியிட்டால். எந்த மொழியும் இன்னொரு மொழியிலிருந்து பிறக்க முடியாது - அவர் பேசிய அர்த்தம் அந்த மொழிப் பொருள் எங்கே? என்ன நடந்தது - ஒற்றுமையின்மை. கர்நாடக மக்கள் என்ன கேட்டார்கள்? ஒரு மன்னிப்பு. சூழ்நிலைகள் கமல்ஹாசனால் தான் உருவாக்கப்பட்டன, ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். கமல்ஹாசன் நடித்த கோலிவுட் படமான "தக் லைஃப்" கர்நாடகாவில் எந்த இடை...

அமலாக்கத்துறை அலுவலர்கள் வருமான வரித்துறைக்கு பணி மாற்றம்

மத்திய அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநரான பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் வருமான வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளை வழக்கு; டாஸ்மாக் ஊழல் வழக்கு; அமைச்சர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு எதிரான வழக்கு; முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு; செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அதிரடி சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன அலுவலர்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்னர்

ஊழல் லஞ்ச வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு அலுவலர்கள் மறைமுகமாக உதவுவதாக உயர் நீதிமனற நீதிபதி கருத்து

ஊழல் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் வகையில் அரசு அலுவலர்கள் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர்' என, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.      கரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றியவர் சரவணன் உள்ளிட்ட மூன்று பேர், சக தொழிலாளர் ஒருவர் மீதான பணியிடை நீக்கம் செய்துள்ள நடவடிக்கையை இரத்து செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, 2011ஆம் ஆண்டில் கைதான. சரவணன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். அது தொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு 'மெமோ' அனுப்பப்பட்டது. அவர், '10 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டில்  மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனக்கு எதிரான நடவடிக்கையை இரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மின்சார வாரியம் தரப்பில், 'மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் உரிய ஆவணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்ற வழக்கில் சிக்கும் மின்சார வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்...

புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயத்தின் குடமுழுக்கு விழாக் காண வாரீர்

அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் ஆலயம் அருள்மிகு கல்லடியான் அருள்மிகு கருப்பர் துணை கொண்டு  புதுக்கோட்டை , அடப்பன்குளக்கரை, புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த  அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் கோவில் புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா  ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி 02.07.2025  புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திர நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய  சுபயோக நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஸ்ரீ விஜயரகுநாதத் தொண்டைமான் துவங்கி பிரகதாம்பாள் தாஸ் இராஜா ராஜகோபாலத் தொண்டைமான் 1948 ஆம் ஆண்டு வரை செங்கோல் ஆட்சி செலுத்தி வாழ்ந்த புதுக்கோட்டை  நகர், அடப்பன்குளக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் பொதுமக்களும், சான்றோர்களும் கலந்துகொண்டு ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் அருள்பெற வேண்டுக...

பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான சர்வதேச உயர்நிலை மாநாடு

துஷான்பே-யில் நடைபெற்ற உயர்நிலை சர்வதேச மாநாட்டில் பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான நிலைப்பாட்டிற்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல் தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பே-யில் 2025-ம் ஆண்டுமே 29 - ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான சர்வதேச உயர்நிலை மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து துறை சார்ந்த நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் முக்கிய நன்னீர் நீர்த்தேக்கங்களாகவும், பருவநிலை மாற்றத்தின் குறிகாட்டிகளாகவும் செயல்படும் பனிப்பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கபட்டது. பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு எச்சரிக்கை மட்டுமின்றி, நீர் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டிய...