வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை செயலாளர் பெ.அமுதா இ ஆ ப வெளியிட்ட அரசாணையில் உள்ள தகவல்கள்: வருவாய் துறை தலையாரி எனும் கிராம உதவியாளர் பணிக்கான நியமனம் குறித்த சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, வருவாய்த் துறை செயலாளரின் கருத்துருவை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர் ஆன தலையாரி பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்எஸ்எல்சியில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இரண்டு சக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்தத் தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண...