சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்து ஆர்ஜித விலை நிர்ணயித்து அரசிதழ் வெளியீடு.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகிறது. பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் மொத்தமாக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிற நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் கையகப்படுத்தத்
திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூபாய்.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய்.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்