மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மளிகை கடையில் அப் பகுதிக்கு திருமாவளவன் வருகை முன்னிட்டு கூடிய கூட்டம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வணிகர்கள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் பரபரப்பானது. பென்னிகுயிக் பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை கடையில், சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துண்டறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்து பணம் கேட்டுள்ளனர்.
குறைந்த பணம் கொடுத்த காரணத்தினால், கடை மற்றும் அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் மாமூல் கேட்ட நபர்கள் மீது காவல்துறையினர் கைது செய்ய வில்லை என வணிகர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மேலும், ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் வணிகர் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்