முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தே ஜ கூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு முடிவில் நடவடிக்கை வருமா? இல்லை கண்துடைப்பா

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வு நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,  ஹேமாமாலினி MP  தலைமையில் கரூர் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நலன் குறித்துக்கேட்டு அறிந்தனர். அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை , மாநிலப் பொதுச் செயலாளர் A P முருகானந்தம், கரூர் மாவட்டத் தலைவர் V V செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு குழுவில் அனுராக் தாக்கூர் எம்.பி, தேஜஸ்வி சூர்யா எம்.பி,  பிராஜ்லால் எம்பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே  எம்.பி, அப்ரஜ்த சரங்கி எம்.பி,  ரேகா ஷர்மா எம்.பி,,  புட்டா மகேஷ்குமார் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். இன்று கோயமுத்தூர் வந்தடைந்தது. விமான நிலையத்தில் பாஜகவின் நிர்வாகிகள் வரவேற்று, கரூரில் ஆய்வு செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர்  கே. அண்ணாமலை, மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் , கோயமுத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர்  ர...

கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தவெக தொண்டர் தற்கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் தூக்கிட்டு தற்கொலை! கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜி காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார் விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு தவெக கிளை நிர்வாகி  ஐயப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் துயர சம்பவம் குறித்து ஆதங்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அய்யப்பன் உடல் மற்றும் கடிதத்தை கைப்பற்றி  காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா். தவெக தலைவர் விஜய் கரூரில் 27 ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனா். இந்த துயர சம்பவம் குறித்து ஆதங்கமாக அக் கட்சியின் தொண்டர் ஐயப்பன் கடிதத்தில் எழுதி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக வெற்றிக் கழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட விற்பட்டு தவெக கிளை நிர்வாகி அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் துயரம் இவரை ஆழமாக பாதித்திருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன       ...

கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியபோது கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பாஸ்கர் மனைவி விஜயா. இவர் தனது மாமனார் அய்யங்கண்ணுவின் நிலத்தை, கணவர் பாஸ்கர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதற்காக காலம் கடத்தி வந்த கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் ரூபாய்.30 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டார். பின்னர் ரூபாய்.25 ஆயிரமாக குறைத்தும் டிமாண்ட் செய்து கேட்டுள்ளார்.   இதனைத் தர விரும்பாத விஜயா, திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு  மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்  துறையினர் ஆலோசனைப் படி நேற்று  முன்தினம் கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மறைமுகமாக கண்காணித்த நிலையில் அப்போது விஜயா அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த ரூபாய்.25 ஆயிரத்தை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனை (வயது 44) பணம் பெற்ற, கையுடன் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக கூடங்குளத்தில்  கிராம நிர்வாக அலுவலராக பண...

கென்யா கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் ஒட்டியனோவின் இந்தியப் பயணம்

கென்யா கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் ஒட்டியனோவின் இந்தியப் பயணம் கென்யா கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் பால் ஓவர் ஒட்டியனோ இந்தியாவில் 2025 செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவருடைய பயணம் அமைந்துள்ளது. புதுதில்லியில் 2025 செப்டம்பர் 29 அன்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி அவரை வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. செயல்படுத்துதல், பயிற்சி, இருநாடுகளுக்கிடையேயான கடற்படை பயிற்சி உட்பட கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். தேசிய போர் நினைவிடத்தில் மறைந்த வீர்ர்களுக்கு மேஜர் ஜெனரல் ஒட்டியனோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குருகிராமில் உள்ள இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் இணைவு மையத்திற்கு மேஜர் ஜெனரல் ஒட்டியனோ செல்ல உள்ளார். பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்மண்டல கடற்படை கட்டளையகத்தின் பயிற்சி அமைப்பையும் அவர் பார்வை...