முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகள்

அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனத்தின் வைர விழா : குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு கர்நாடகாவின் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் காது கேட்பு திறன் பயிற்சி நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று முன்தினம் (1.09.2025) கலந்துகொண்டார். கர்நாடகா ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடகா முதலமைச்சர் திரு சித்தராமையா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் திரு குனேஷ் குண்டுராவ், மைசூர் மக்களவை உறுப்பினர் திரு யாதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா வடியார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி முர்மு, பேச்சு மற்றும் காது கேட்பு பயிற்சி திறனில் கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் மகத்துவமான பங்களிப்பை வழங்கியுள்ள சிறப்புமிக்க இந்த நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு குறைபாட...

நாய்களால் ஆபத்து வருகிறதோ இல்லையோ நாய்க் காதலர்கள் ஆபத்தானவர்கள்

நிச்சயமாக நாய்க் காதலர்கள் வாழும் தெருக்கள் அடையார் போர்ட் கிளப், மேற்கு மாம்பலம், தி.நகர் போயஸ் கார்டன் அண்ணா நகர் பெசன்ட் நகர் மடிப்பாக்கம் நங்கநல்லூர், போன்ற இடங்களின் தெருக்கள் எல்லாம் நாய்களுக்கு சொந்தமில்லை, முக்கியமாக நாய்க் காதலர்கள் வாழும் அப்பார்ட்மெண்ட்டுக்குள் முற்றிலும் அனுமதி இல்லை கிராமங்களில் வாழும் நாய்கள் நகரத்தில் தெருக்களில் நடமாட உரிமையில்லை, பாதுகாப்பு மையங்களில் சேர்க்க நடவடிக்கைகள் தான் இதுவே டில்லி தீர்ப்பு சாராம்சம் அது மனிதனுக்காக மனிதன் உருவாக்கியது, ஒரு சிலருக்காக (விலங்குகள் ஆர்வலர்) எதையும் பொதுமைப் படுத்த முடியாது. வெளிநாட்டு வகை நாய்களின் விற்பனையை தடை செய்தால் தெரு நாய்களின் எண்ணிக்கையும் குறையும். அதையும் செய்யமாட்டார்கள். வீட்டில் வெளிநாட்டு வகை நாயை வளர்ப்பதை ஒரு சில மனிதர்கள் தாயை முதியோர் இல்லத்தில் அடமானம் வைத்துவிட்டு நாயை கெளரவமாக நடத்தி வளர்க்கும் அற்ப பதர்கள்  வாழும் நிலையை பலரும் அறியலாம். அதை கார்பொரேட் நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன. அதுவே அப்பத்தா திரைப்படம் கூறும் கதை நாய் விற்பனை அதுக்குரிய உணவு மருந்து என்று முழுவதும் கார்ப்பரேட...

காட்டுப்பள்ளி அருகில் , காவல்துறை மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி அருகில் , காவல்துறை மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது வடமாநிலத்து நபர்கள் தங்கி இருக்கிறார்கள்.  நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது  உத்திரப் பிரதேசம் அமரேஷ்பிரசாத் என்ற நபர் காலிடறி கீழே விழுந்திருக்கிறார்.உடனிருந்தோர் மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டுபோன நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அமரேஷ்பிரசாத் இறந்து போயுள்ளார். செய்தியாளர்கள் தரப்பில் கேள்விப்பட்ட வரையில் நடந்தது இதுதான். கூடுதல் தகவலாக, இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் ஐந்துலட்சம் உதவியும், இறந்தவர் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும்; ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவரை எல்லாம் சரி.இறந்த நபரின் சடலத்தை மீட்டு காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணை மேற்கொண்டனர் முன்னதாக  இறந்த நபரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, வடஇந்திய மாநிலத்தின் நபர்கள் போராட்டத்தில இறங்கி;  சாலை மறியலும் செய்த நிலையில்தான்; பாதுகாப்புப் பணிக்குப் போன பத்துக்கும் மேற்பட்ட காவல் பணிக்கு சென்...

பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, எம்.எல்.சி கட்சியிலிருந்து நீக்கம் .

பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, எம்.எல்.சி  கட்சியிலிருந்து நீக்கம் .  பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியிலிருந்து தெலங்கானா சட்டசபை மேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிரீய சமிதி  கட்சியின் மூத்த நிர்வாகி ஹரிஷ் ராவ் மீது அவதூறுக் கருத்துகளை கவிதா தெரிவித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு, கடந்த பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் திங்கள்கிழமை வழங்கிய நிலையில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் செய்து சொத்துகளைக் குவித்து, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து தனது தந்தை சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே. கவிதா திங்கள்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக...

மதம் மாறிய பின்னர் ஜாதிச்சலுகை பெற்ற பேருராட்சித் தலைவர் பதவி பறிப்பு செல்லும் உயர் நீதிமன்றம் அமர்வில் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் சுசீந்திரம் அருகிலுள்ள தேரூர் பேரூராட்சி மன்றம் சுமார்.9.64 ச.கி.மீ. பரப்பளவும், 15 வார்டுகளையும், 35 தெருக்களையும் கொண்டது கன்னியாகுமரி சட்டமன்றபேரவைத் தொகுதி க்கும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2,148 வீடுகளும், 7,615 மக்கள்தொகையும் கொண்டது. இந்த பேரூராட்சிக்கு கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கைப்பற்றிய நிலையில் அதன் தலைவரான இரண்டாம் வார்டு (தனி) போட்டியிட்டு அமுதாரானி பிறப்பால் பட்டியல் ஜாதி சார்ந்த நபர் வெற்றி பெற்றார் மதம் மாறிய நிலையில் பட்டியல் ஜாதி என மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மதம் மாறிய பின்னர் பட்டியல் சார்ந்த ஜாதிச் சான்றிதழை ஏற்று பதவி ஏற்ற நிலையில் அது சட்ட ரீதியாக செல்லாது என்பதால்  தேரூர் பேரூராட்சி மன்றத் தலைவியை  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.  2022-ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி வார்டு எண் 2 -ல் (பட்டியல் ஜாதி தனி) அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி ப...