முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தே ஜ கூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு முடிவில் நடவடிக்கை வருமா? இல்லை கண்துடைப்பா

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வு நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 




ஹேமாமாலினி MP  தலைமையில் கரூர் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நலன் குறித்துக்கேட்டு அறிந்தனர்.

அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை , மாநிலப் பொதுச் செயலாளர் A P முருகானந்தம், கரூர் மாவட்டத் தலைவர் V V செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வு குழுவில் அனுராக் தாக்கூர் எம்.பி, தேஜஸ்வி சூர்யா எம்.பி,  பிராஜ்லால் எம்பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே  எம்.பி, அப்ரஜ்த சரங்கி எம்.பி,  ரேகா ஷர்மா எம்.பி,,  புட்டா மகேஷ்குமார் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். இன்று கோயமுத்தூர் வந்தடைந்தது.







விமான நிலையத்தில் பாஜகவின் நிர்வாகிகள் வரவேற்று, கரூரில் ஆய்வு செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர்  கே. அண்ணாமலை, மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் , கோயமுத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர்  ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துரை  உள்ளிட்ட பலரும் சென்றனர். டில்லியிலிருந்து, என்.டி.ஏ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கரூருக்கு வந்தது முதலில் மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்த்து விட்டு, சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கும் போய்  பொதுமக்களிடம் பேசியது, 







அது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூகவலை தளங்களில் காணக் கிடைக்கிறது. ஊடகங்களிடம் பேசும்போது, "41 பேர் இறப்பு குறித்து தமிழ்நாட்டு  அரசு உயர் அலுவலர்களிடமும் விசாரணை  நடத்துவோம்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தால், காவல்துறை, மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகத் துறை என; பல துறைகள், இந்தக் குழுவால் விசாரிக்கப்படும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிச் சொல்லியிருப்பது, மத்திய அரசால், அரசு நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட, குழு அல்ல. அவை, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்களின் குழு மட்டுமே.



பேரிடர் காலங்களில் மத்தியஅரசின் சார்பில், உயர் அலுவலர்களோடு இணைந்து நாடளுமன்ற உறப்பினர்கள் குழு, அந்தந்த 'பேரிடர்' மாநிலங்களில் ஆய்வு நடத்தி; விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பது தான் வழக்கம்.  சில மாநிலங்களில் உயர் அலுவலர்கள் மட்டுமே ஆய்வு நடத்தி அதன் மீதான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக்குழு வந்திருப்பது, அப்படிப்பட்ட பேரிடர் குறித்த விசாரணையை நடத்தி; அறிக்கை கொடுப்பதற்காக அல்ல. 

தமிழ்நாட்டு அலுவவர்களில், இந்தியக் குடிமைப்பணி உயர் அலுவலர்களும் உள்ளனர்; நீதித்துறையினரும் உள்ளனர்; தமிழ் நாட்டு காவல்பணி உயர் அலுவலர்களும் உள்ளனர்; யாரை விசாரிக்கப்போகிறது என்டிஏ குழு? அதுவும் மத்திய அரசால் தெரிவு செய்யப்படாத தே ஐ கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு?

தமிழ்நாடு ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும், கரூர் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு  தருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில்; எங்கிருந்து வந்தது என்.டி.ஏ. குழு?  என ஆளும் ஆதரவு கட்சி வினா எழுப்பிய நிலையில்


தமிழ்நாடு அரசை மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அச்சுறுத்தும் போக்காகவே இதை அவர்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது என கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து கூறும் நிலையில் தமிழ்நாட்டை ஆளும் திமுகவின் சட்ட வல்லுநர் குழு இப்போது சுதாரித்துள்ளது.




இந்தியாவில் பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில், இதுபோன்ற அசாதாரண சம்பவக் காலங்களில், என்டிஏ குழு போய், இப்படி ஆய்வு ஏதாவது நடத்தி முன் உதாரணம் இருக்கிறதா? உயர் அலுவலர்களை விசாரித்திருக்கிறதா என்பதே இப்போது மாநில ஆளும் கட்சிக் கூட்டணி எழுப்பும் வினா?  அதற்கு மாநில அரசு தரப்பில் விளக்கம் இரவோடு இரவாக ஏன்? காரணம் தெரியவில்லை இருக்கிற இடமே தெரியாமல் பணியாற்றுபவர். ஒரு உயர் அலுவலரான இவரைப் பேச வைத்திருக்கிறார்கள். அவர் கூறிய போது

114 மருத்துவர்கள், செவிலியர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது எனவும்

மக்கள் கொந்தளித்து பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதற்காகவே விரைவாக உடற்கூராய்வு நடந்ததாகவும்

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல்கள் ஒப்படைப்பு - எனவும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்  பதில் கேள்வி: சம்பவம் நடந்த இரவே பிரேதப் பரிசோதனை செய்யப்படக் காரணம் என்ன?

சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறந்தவர்களின் உடல்களை உடனடியாக தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தாமதப்படுத்தாமல் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து அன்று இரவே பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டோம். பதற்றத்தைத் தடுக்கவே இவ்வாறு செய்தோம்.


(கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் தரப்பட்ட விளக்கம்)  வந்த நிலையில்.                          கரூரில் ஆய்வு நடத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,  ஹேமாமாலினி MP  தலைமையில் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தைக் குறித்து கேட்டறிந்தனர்

அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர்,A P முருகானந்தம், கரூர் மாவட்ட தலைவர். V V செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.






இந்த ஆய்வுக் குழுவில்  அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே அவர்களும், அப்ரஜ்த சாரங்கி, ரேகா ஷர்மா, புட்டா மகேஷ்குமார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் சென்று ஆய்வு நடத்தினர்.   அதில் சிலர் கூறிய போது 

நடிகரும் தவெக தலைவருமான விஜய் செந்தில் பாலாஜி பற்றி பேசும்போதெல்லாம் கற்கள் செருப்புகள் கொண்டு வீசினார்கள் அது வீடியோவில் பதிவாகி உள்ளது.

அதிலும் விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபா பாடல் பாடிய போது கெட்ட வார்த்தைகளில் விஜயை திட்டினார்கள்.

அவர்கள் யார் என்று கண்டுபிடித்தால் உண்மை விளங்கிவிடும் என சிலர் கூறினார். இந்த நிலையில் “நாங்கள் எழுப்பும் கேள்விகளையே தவெக தலைவர் விஜயும் கேட்டுள்ளார்"

காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லை; நாங்கள் எழுப்பும் கேள்விகளையே தவெக தலைவர் விஜயும் காணொளி வழியாக கேட்டுள்ளார்; இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை பரிந்துரைப்போம்

கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க தே.ஜ. கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர் எம்.பி. பேட்டியில் தகவல்."சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை”

கரூர் கூட்டநெரிசல் வழக்கு குறித்த விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடக்க வேண்டும். காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து மாநில ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மாவட்ட நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த வார இறுதிக்குள் விசாரணை அறிக்கையை பாஜக தலைமையிடம் அளிப்போம்  என அனுராக் தாக்கூர், பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்.   

"கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை"

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை, அதில் சந்தேகம் உள்ளதாக குழு தலைவர் ஹேமமாலினி கருத்து

பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் அனுமதி கொடுத்தது நியாயமில்லை.

கரூரில் என்.டி.ஏ. எம்பிக்கள் குழு ஆய்வு செய்த நிலையில் பேட்டி இது குறித்து பேசியவய்கள் பேச்சுடன் விடாமல் சரியான தரவுகளும் தந்து அறிக்கையைத் தாருங்கள் என்பதே பலரது கருத்து.கரூர் சம்பவம் தொடர்பாக யூடியூபில் வதந்தி பரப்பியதாய் யூடியூப் நடத்தும் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது. செய்யப்பட்டுள்ளார் 

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக 25 பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது என காவல்துறையின் வேகமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு பக்கம் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு நபர் விசாரணை கமிஷன்.

இன்னொரு பக்கம் பலவிதமான FIRகள்..

இதற்கு மத்தியில் நீதிமன்றங்களில் தாக்கலாகும் மனுக்கள். தசரா விடுமுறை என்பதால் விசாரணை தாமதம் ஆகிறது.

"பல மரம் கண்ட தச்சன் ,ஒரு மரமும் வெட்டான்.."என்பது போல சில வேளலையத்த ஊடகங்கள்பரபரப்புகளை துரத்திக் கொண்டு நாள்தோரும் அலைய, நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்





கொள்கிறார்கள் மக்கள் வெறுபபில் உள்ளனர் விரைந்து நடவடிக்கை வராத வரை உண்மை வெளிவருவது சந்தேகம் தான்  இந்த நிலையில் இன்று தவெக தலைவர் பேசிய  https://x.com/TVKVijayHQ/status/1972965812618297612 காணொளி வந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...