முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' ஐ முன் நிறுத்தும் மத்திய நிதிநிலை அறிக்கை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 


இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை  மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான்  இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும்  நிதிநிலை அறிக்கை.




எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய் 53.5 லட்சம் கோடியாக, நிகர வரி வருவாய் ரூபாய் 28.7 லட்சம் கோடியாக இருப்பினும், நிதிப்பற்றாக்குறை 4.3 விழுக்காடாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு துறைக்கு ரூபாய் 7.85 லட்சம், போக்குவரத்து துறைக்கு ரூபாய். 5.98 லட்சம் கோடி, கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூபாய் 2.73 லட்சம் கோடி, உள்துறைக்கு ரூபாய் 2.55 லட்சம் கோடி, விவசாய துறைக்கு 1.83 லட்சம் கோடி, கல்வித்துறைக்கு 1.39 லட்சம் கோடி, ஆற்றல் துறைக்கு 1.09 லட்சம் கோடி, சுகாதாரத்துறைக்கு 1.05 லட்சம் கோடி, நகர வளர்ச்சி துறைக்கு ரூபாய்.85,522 கோடி என நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் ஆகிய பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை.

தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் கவனிக்க வேண்டிய விபரம்




அரியவகை பூமி கனிமங்களை அகழ்ந்தெடுத்து, ஆராய்ந்து, செயல்படுத்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும் என்பது தமிழ்நாடு வளர்ச்சிக்கு பேருதவி . இதனால் பாதுகாப்புத் தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணு பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகும். இதன் மூலம்  வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி பெருகும்.

மின்னணு பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூபாய். 40,000 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு பாகங்கள் தயாரிப்பில் முதலிடம் தமிழ்நாடு தான் என்பதோடு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களில் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்ற நிலையில் இந்த திட்டம் பெரும் பயன் தரும்.




தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பறவைகள் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் எனும் அறிக்கை வரவேற்கத்தக்கது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம்.

ஐந்து மண்டல மருத்துவ சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு, இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்றழைக்கப்படுகிற சென்னையின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதை உறுதியாகப் பெற வேண்டும்.

 தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறை களம் மேம்படுத்தப்படும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட 2 அடுக்கு நகரங்கள், 3 அடுக்கு மற்றும் கோவில் நகரங்கள் நகர பொருளாதார மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு மையங்களுக்கும் முறையே ரூபாய். 5000 கோடி ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழ்நாட்டில் நகரங்களான திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற நகர மேம்பாட்டுக்கு  பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

.கடலோர மாநிலங்களில் சரக்கு இயக்கத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக நகரங்களுக்கு புத்துயிரளிக்கும். 

ஏழு விரைவு ரயில் பாதைத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

ரூபாய் பத்தாயிரம் கோடி ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் வலிமையான உயிரி மருந்து  மையங்கள் (BIOPHARMA SAKTHI) உருவாக்கப்பட்டு, இந்தியாவை  சர்வதேச உயிரி மருந்து உற்பத்தி மையமாக்கும் என்ற இன்றைய நிதிநிலை அறிவிப்பு, உயிரி மருந்து உற்பத்தியில் சாதனை படைக்கும் தமிழகத்தை மேலும் வலுவாக்கும்.

சிறு குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூபாய் பத்தாயிரம் கோடி  (SME Growth Fund) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட தமிழகத்தின் எதிர்கால இளம் தலைமுறைக்கு இது பெரும் பயனை தரும்.

அர்ப்பணிக்கப்பட்ட இராசயன பூங்காக்கள் திட்டத்தில் தமிழத்தின் இரசாயன தொழில் துறை சென்னை அல்லது கடலூரில் அமைய வாய்ப்பு.

மேலும் விவசாயத் துறையில் ஏற்கனவே உள்ள பல்வேறு விவசாய, விவசாயிகள் நலத்திட்டங்களோடு, தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் 'தேங்காய்' விளைச்சல் திட்டம் என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் அதிக தேங்காய்களை விளைவிக்கும் தமிழ்நாடு தென்னை விவசாயிகளுக்கு பெரும் உற்சாகத்தை வரவழைக்கும். 

நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டின்  உற்பத்தி, சுய சார்பு, அரியவகை கனிமங்கள், கட்டமைப்பு, சுற்றுலா துறை,மின்னணு, வாகன தோழில், சுகாதார துறை, போக்குவரத்து, பாதுகாப்பு, துறைமுகங்கள், ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு  பொருளாதார உதவியை பெற்றுத்தருவதோடு, தமிழ்நாட்டின் தொழில்துறையை வலிமைப்படுத்தி, நீண்ட கால வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளப்படுத்த வழிவகை செய்துள்ளது.

மேலும், நிதி ஆணைய பரிந்துரையின் படி மாநிலங்களுக்கான ரூபாய் 1.4 லட்சம் கோடியில்(41%)  உள்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் மீள்திறன் ஆகியவற்றிற்கான அதிகார பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பங்கை மத்திய அரசு வழங்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைவருக்கும் வீடு, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு, விவசாயிகள் கௌரவ நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம், நடைபாதை வியாபாரிகளுக்கான நிதி உதவி, சிறுகுறு தொழிலாளர்களுக்கான முத்ரா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடரும்.


நிலை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டது, நிதியளிக்க மறுக்கிறது என்றெல்லாம் கதை அளந்து விடுகின்றன எதிர்க்கட்சிகள். பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டமைப்பை பெருக்கி, தொழில் முன்னேற்றத்தை அதிகப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி, தனிமனித வருவாயை உயர்த்தும் நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி என ஆதரவுக் கட்சிகளும். தோல்வி என எதிர்கட்சிகளும் கூறுவது அரசியல் நடவடிக்கை தான்., மத்திய அரசின் பட்ஜெட் என்பது நாட்டின் இயக்க முறைமைக்கான வருடாந்திர புதுப்பிப்பாகும். 

கடந்த 12 ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டங்களின் கருப்பொருள் மையத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். கொள்கை முன்னுரிமைகளில் தெளிவான, கட்டமைப்பு முன்னேற்றத்தை தரவு வெளிப்படுத்துகிறது.


கட்டம் 1: அடிப்படைகளின் செறிவு (2014–2019) 

ஆரம்ப ஆண்டுகள் "டெலிவரி பைப்லைனை" சரிசெய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

2014-15:ஸ்வச் பாரத் (சுகாதார உள்கட்டமைப்பு).

 2015-16: JAM டிரினிட்டி(100% குடும்பங்களுக்கான நிதிச் சேர்க்கை).

 2018-19: ஆயுஷ்மான் பாரத் (சுகாதார உத்தரவாதம்).

மூலோபாய தர்க்கம்: விலக்கின் அடித்தளத்தில் நீங்கள் ஒரு வல்லரசை உருவாக்க முடியாது. பிரமிட்டின் அடிப்பகுதியை முதலில் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியது.

கட்டம் 2: உள்கட்டமைப்பு பிவோட் (2020–2023) 

கோவிட்க்குப் பிறகு, உத்தி "நலம்" என்பதிலிருந்து "சொத்து உருவாக்கம்"க்கு மாறியது.

2020-21:தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் (NIP).

2022-23: PM கதிசக்தி மற்றும் மூலதனச் செலவில் 35% பெருமளவு உயர்வு.


மூலோபாய தர்க்கம்: மீட்சியை இயக்க பொது கேபெக்ஸைப் பயன்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தின் கட்டமைப்பு தளவாடச் செலவைக் குறைத்தல்.

கட்டம் 3:மனித மூலதனம் மற்றும் நுகர்வு அழுத்தம் (2024–2026) 

வன்பொருள் இடத்தில், கவனம் "மென்பொருள்", பணியாளர்கள் மற்றும் பணப்பையை நகர்த்தியது.

2024-25: 4.1 கோடி இளைஞர்களுக்கான 5-திட்ட தொகுப்பு மூலம் வேலையின்மை மீதான நேரடித் தாக்குதல்.


2025-26: வரிச் சலுகை மூலம் நடுத்தர வகுப்பினரை வலுப்படுத்துதல் (புதிய ஆட்சி மாற்றங்களின் கீழ் ஆண்டுக்கு ₹12 லட்சம் வரை வரி இல்லை).

மூலோபாய தர்க்கம்: நுகர்வு ஓட்டுவதற்கு மக்கள்தொகை ஈவுத்தொகையை மேம்படுத்துதல்.

இந்திய வரவு செலவுத் திட்டங்கள் கடந்த காலத்தை சரிசெய்வதில் இருந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நகர்ந்துள்ளன என்பதை ஒரு நீளமான பார்வை காட்டுகிறது.

கழிப்பறைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் ஆரம்பித்தது செமிகண்டக்டர்கள் மற்றும் AI வரை பட்டம் பெற்றுள்ளது.

இன்று 2026-27 சாலை வரைபடத்திற்காக காத்திருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுடன் இணைந்த நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று பாதை அறிவுறுத்துகிறது

.ஐபிஎஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை மையம் திருத்துகிறது, 2011 பேட்ச் முதல் மையத்தில் ஐஜி மட்டத்தில் பணியமர்த்துவதற்கு எஸ்பி/டிஐஜி அளவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்தியப் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குகிறது. மையத்தில் எஸ்பி மற்றும் டிஐஜி பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட நகர்வு.

புதிய வருமான வரிச் சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்" என்று உறுதியளித்த அவர், வரி செலுத்தும் முறையை எளிமையாக்குவதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று கூறியுள்ளார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்கள் மற்றும் சிறு வரிதாரர்களுக்குத் தலைவலியைத் தரும்





"சிக்கலான வரி நடைமுறைகளை" ஒழித்து, டிஜிட்டல் முறையிலான வெளிப்படையான தீர்வுகளை வழங்கியுள்ளது.வருமான வரி செலுத்தும் முறையை எளிதாக்க புதிய படிவங்கள் மற்றும் விதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சாமானிய மக்களும் வரி விதிகளை எளிதாகப் புரிந்து கொண்டு, தாமாகவே முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளைத் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சிறிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.





ஒரே நேரத்தில் இணையதளம் முடங்குவதைத் தவிர்க்க, வரி தாக்கல் செய்யப் வெவ்வேறு தேதிகள்ஒரே நேரத்தில் இணையதளம் முடங்குவதைத் தவிர்க்க, வரி தாக்கல் செய்யப் வெவ்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

ITR 1 மற்றும் ITR 2: ஜூலை 31 வரை.

வணிக நிறுவனங்கள் (Non-audit) மற்றும் அறக்கட்டளைகள்: ஆகஸ்ட் 31 வரை.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக்களை விற்கும் போது செலுத்த வேண்டிய வருமான வரி குறைக்கப்பட்டு உள்ளது.


மேலும் 
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047ம் ஆண்டு வரி வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பொருட்களை விற்க SHE MART கடைகள் அமைக்கப்படும்.


முந்திரி, தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் 2030க்குள் உலகத்தரம் வாய்ந்த புதிய பிராண்ட் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.வருமான வரி ஏய்ப்புக்கான தண்டனை விவரங்கள்:
அபராதம் (Penalty - Section 270A): தவறான தகவல்களை அளித்து வருமானத்தை மறைத்தாலோ அல்லது குறைத்துக் காட்டினாலோ, செலுத்த வேண்டிய வரியில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படும்.
போலி ஆவணங்கள் (Penalty - Section 271AAD): வாடகை ரசீதுகள், முதலீடுகள் போன்ற போலி ஆவணங்களைப் பயன்படுத்தினால், வரி ஏய்ப்பு செய்த தொகைக்கு நிகரான அபராதம் அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) விதிக்கப்படும்.
சிறைத்தண்டனை (Prosecution - Section 276C):
₹25 லட்சத்திற்கு மேல் வரி ஏய்ப்பு: 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

குறைவான தொகை: 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
வட்டி: வரி செலுத்தத் தவறினால் 24% வரை வருடாந்திர வட்டி விதிக்கப்படலாம். 
தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்:
வாடகை இல்லாமலே HRA விலக்கு கோருவது.
80C, 80D கீழ் இல்லாத முதலீடுகளைக் காட்டுவது.
வங்கி வட்டி வருமானத்தை மறைப்பது.
தவறான பான் (PAN) விவரங்களை அளிப்பது. 
சரியான வருமானத்தை அறிவித்து, உரிய ஆவணங்களுடன், சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்வதன் மூலம் இந்த அபராதங்களைத் தவிர்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...