மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை
இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான் இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும் நிதிநிலை அறிக்கை.
எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய் 53.5 லட்சம் கோடியாக, நிகர வரி வருவாய் ரூபாய் 28.7 லட்சம் கோடியாக இருப்பினும், நிதிப்பற்றாக்குறை 4.3 விழுக்காடாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு துறைக்கு ரூபாய் 7.85 லட்சம், போக்குவரத்து துறைக்கு ரூபாய். 5.98 லட்சம் கோடி, கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூபாய் 2.73 லட்சம் கோடி, உள்துறைக்கு ரூபாய் 2.55 லட்சம் கோடி, விவசாய துறைக்கு 1.83 லட்சம் கோடி, கல்வித்துறைக்கு 1.39 லட்சம் கோடி, ஆற்றல் துறைக்கு 1.09 லட்சம் கோடி, சுகாதாரத்துறைக்கு 1.05 லட்சம் கோடி, நகர வளர்ச்சி துறைக்கு ரூபாய்.85,522 கோடி என நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் ஆகிய பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை.
தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் கவனிக்க வேண்டிய விபரம்
அரியவகை பூமி கனிமங்களை அகழ்ந்தெடுத்து, ஆராய்ந்து, செயல்படுத்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும் என்பது தமிழ்நாடு வளர்ச்சிக்கு பேருதவி . இதனால் பாதுகாப்புத் தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணு பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகும். இதன் மூலம் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி பெருகும்.
மின்னணு பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூபாய். 40,000 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு பாகங்கள் தயாரிப்பில் முதலிடம் தமிழ்நாடு தான் என்பதோடு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களில் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்ற நிலையில் இந்த திட்டம் பெரும் பயன் தரும்.
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பறவைகள் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் எனும் அறிக்கை வரவேற்கத்தக்கது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம்.
ஐந்து மண்டல மருத்துவ சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு, இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்றழைக்கப்படுகிற சென்னையின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதை உறுதியாகப் பெற வேண்டும்.
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறை களம் மேம்படுத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 2 அடுக்கு நகரங்கள், 3 அடுக்கு மற்றும் கோவில் நகரங்கள் நகர பொருளாதார மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு மையங்களுக்கும் முறையே ரூபாய். 5000 கோடி ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழ்நாட்டில் நகரங்களான திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற நகர மேம்பாட்டுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.கடலோர மாநிலங்களில் சரக்கு இயக்கத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக நகரங்களுக்கு புத்துயிரளிக்கும்.
ஏழு விரைவு ரயில் பாதைத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
ரூபாய் பத்தாயிரம் கோடி ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் வலிமையான உயிரி மருந்து மையங்கள் (BIOPHARMA SAKTHI) உருவாக்கப்பட்டு, இந்தியாவை சர்வதேச உயிரி மருந்து உற்பத்தி மையமாக்கும் என்ற இன்றைய நிதிநிலை அறிவிப்பு, உயிரி மருந்து உற்பத்தியில் சாதனை படைக்கும் தமிழகத்தை மேலும் வலுவாக்கும்.
சிறு குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூபாய் பத்தாயிரம் கோடி (SME Growth Fund) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட தமிழகத்தின் எதிர்கால இளம் தலைமுறைக்கு இது பெரும் பயனை தரும்.
அர்ப்பணிக்கப்பட்ட இராசயன பூங்காக்கள் திட்டத்தில் தமிழத்தின் இரசாயன தொழில் துறை சென்னை அல்லது கடலூரில் அமைய வாய்ப்பு.
மேலும் விவசாயத் துறையில் ஏற்கனவே உள்ள பல்வேறு விவசாய, விவசாயிகள் நலத்திட்டங்களோடு, தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் 'தேங்காய்' விளைச்சல் திட்டம் என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் அதிக தேங்காய்களை விளைவிக்கும் தமிழ்நாடு தென்னை விவசாயிகளுக்கு பெரும் உற்சாகத்தை வரவழைக்கும்.
நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டின் உற்பத்தி, சுய சார்பு, அரியவகை கனிமங்கள், கட்டமைப்பு, சுற்றுலா துறை,மின்னணு, வாகன தோழில், சுகாதார துறை, போக்குவரத்து, பாதுகாப்பு, துறைமுகங்கள், ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு பொருளாதார உதவியை பெற்றுத்தருவதோடு, தமிழ்நாட்டின் தொழில்துறையை வலிமைப்படுத்தி, நீண்ட கால வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளப்படுத்த வழிவகை செய்துள்ளது.
மேலும், நிதி ஆணைய பரிந்துரையின் படி மாநிலங்களுக்கான ரூபாய் 1.4 லட்சம் கோடியில்(41%) உள்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் மீள்திறன் ஆகியவற்றிற்கான அதிகார பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பங்கை மத்திய அரசு வழங்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைவருக்கும் வீடு, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு, விவசாயிகள் கௌரவ நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம், நடைபாதை வியாபாரிகளுக்கான நிதி உதவி, சிறுகுறு தொழிலாளர்களுக்கான முத்ரா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடரும்.
நிலை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டது, நிதியளிக்க மறுக்கிறது என்றெல்லாம் கதை அளந்து விடுகின்றன எதிர்க்கட்சிகள். பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டமைப்பை பெருக்கி, தொழில் முன்னேற்றத்தை அதிகப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி, தனிமனித வருவாயை உயர்த்தும் நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி என ஆதரவுக் கட்சிகளும். தோல்வி என எதிர்கட்சிகளும் கூறுவது அரசியல் நடவடிக்கை தான்., மத்திய அரசின் பட்ஜெட் என்பது நாட்டின் இயக்க முறைமைக்கான வருடாந்திர புதுப்பிப்பாகும்.
கடந்த 12 ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டங்களின் கருப்பொருள் மையத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். கொள்கை முன்னுரிமைகளில் தெளிவான, கட்டமைப்பு முன்னேற்றத்தை தரவு வெளிப்படுத்துகிறது.
கட்டம் 1: அடிப்படைகளின் செறிவு (2014–2019)
ஆரம்ப ஆண்டுகள் "டெலிவரி பைப்லைனை" சரிசெய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
2014-15:ஸ்வச் பாரத் (சுகாதார உள்கட்டமைப்பு).
2015-16: JAM டிரினிட்டி(100% குடும்பங்களுக்கான நிதிச் சேர்க்கை).
2018-19: ஆயுஷ்மான் பாரத் (சுகாதார உத்தரவாதம்).
மூலோபாய தர்க்கம்: விலக்கின் அடித்தளத்தில் நீங்கள் ஒரு வல்லரசை உருவாக்க முடியாது. பிரமிட்டின் அடிப்பகுதியை முதலில் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியது.
கட்டம் 2: உள்கட்டமைப்பு பிவோட் (2020–2023)
கோவிட்க்குப் பிறகு, உத்தி "நலம்" என்பதிலிருந்து "சொத்து உருவாக்கம்"க்கு மாறியது.
2020-21:தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் (NIP).
2022-23: PM கதிசக்தி மற்றும் மூலதனச் செலவில் 35% பெருமளவு உயர்வு.
மூலோபாய தர்க்கம்: மீட்சியை இயக்க பொது கேபெக்ஸைப் பயன்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தின் கட்டமைப்பு தளவாடச் செலவைக் குறைத்தல்.
கட்டம் 3:மனித மூலதனம் மற்றும் நுகர்வு அழுத்தம் (2024–2026)
வன்பொருள் இடத்தில், கவனம் "மென்பொருள்", பணியாளர்கள் மற்றும் பணப்பையை நகர்த்தியது.
2024-25: 4.1 கோடி இளைஞர்களுக்கான 5-திட்ட தொகுப்பு மூலம் வேலையின்மை மீதான நேரடித் தாக்குதல்.
2025-26: வரிச் சலுகை மூலம் நடுத்தர வகுப்பினரை வலுப்படுத்துதல் (புதிய ஆட்சி மாற்றங்களின் கீழ் ஆண்டுக்கு ₹12 லட்சம் வரை வரி இல்லை).
மூலோபாய தர்க்கம்: நுகர்வு ஓட்டுவதற்கு மக்கள்தொகை ஈவுத்தொகையை மேம்படுத்துதல்.
இந்திய வரவு செலவுத் திட்டங்கள் கடந்த காலத்தை சரிசெய்வதில் இருந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நகர்ந்துள்ளன என்பதை ஒரு நீளமான பார்வை காட்டுகிறது.
கழிப்பறைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் ஆரம்பித்தது செமிகண்டக்டர்கள் மற்றும் AI வரை பட்டம் பெற்றுள்ளது.
இன்று 2026-27 சாலை வரைபடத்திற்காக காத்திருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுடன் இணைந்த நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று பாதை அறிவுறுத்துகிறது
.ஐபிஎஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை மையம் திருத்துகிறது, 2011 பேட்ச் முதல் மையத்தில் ஐஜி மட்டத்தில் பணியமர்த்துவதற்கு எஸ்பி/டிஐஜி அளவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்தியப் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குகிறது. மையத்தில் எஸ்பி மற்றும் டிஐஜி பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட நகர்வு.
"சிக்கலான வரி நடைமுறைகளை" ஒழித்து, டிஜிட்டல் முறையிலான வெளிப்படையான தீர்வுகளை வழங்கியுள்ளது.வருமான வரி செலுத்தும் முறையை எளிதாக்க புதிய படிவங்கள் மற்றும் விதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சாமானிய மக்களும் வரி விதிகளை எளிதாகப் புரிந்து கொண்டு, தாமாகவே முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளைத் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சிறிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

































கருத்துகள்