தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் (6.41 Cr),74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்த ஆண் வாக்காளர்கள் -277,38,925 மற்றும் பெண் வாக்காளர்கள்-2,89,60,838 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் -7,617 இவை சேர்த்து மொத்தம்-5,67,07,380 ஆகும்.
3.23.02.2026 நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (ஆண்: 2,77,38,925; பெண்: 2,89,60,838; மூன்றாம் பாலினம்: 7,617;) ஆகும். இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம்.
4.பெண்கள் மேலும், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 6-ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75).
5.தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16-எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).சென்னை: தமிழகம் முழுவதும் அந்தந்த
மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி.எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது எஸ்ஐஆர் இறுதி நடைமுறைக்குப் பிறகு கூடுதலாக 23.30 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 11.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், இன்று பட்டியலை வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு: செங்கல்பட்டில் ஆண் வாக்காளர்கள் -11,04,511, பெண்கள் - 11,55,144, மூன்றாம் பாலினத்தவர்கள்-381, மொத்த வாக்காளர்கள் - 22,60,036.
கன்னியாகுமரியில் ஆண் வாக்காளர்கள் - 7,51,016, பெண்கள் - 7,59,390, மூன்றாம் பாலினத்தவர்கள்-144, மொத்த வாக்காளர்கள் - 15,10,550.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
கோயமுத்தூரில் ஆண் வாக்காளர்கள் -13,00,889, பெண்கள் - 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள் - 26,96,813.சிவகங்கை ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண்கள் - 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள் -11,10,599.
சேலம் ஆண் வாக்காளர்கள் - 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள் -27,55,830.
திருச்சிராப்பள்ளியில் ஆண் வாக்காளர்கள் -10,31,354, பெண்கள் - 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள் -21,26,303.
கடலூர் ஆண் வாக்காளர்கள் - 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள் -20,15,196.நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபைத் தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண்கள் 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மொத்தம் 13,76,624 வாக்காளர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக
முதல் கட்டமாக 50 கம்பெனி சி ஏ பி எஃப் படை வீரர்கள் ஒதுக்கீடு
இவர்கள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளனர்.




கருத்துகள்