மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது
மத்திய அரசின் உத்தரவுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன.
வங்காள மொழிக் கவிஞர் பங்ஹிம் சந்திர சட்டர்ஜி 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி எழுதிய ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல் உத்தரவுகளைக் கொண்டுவந்துள்ளதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப்பூர்வமான முழுப் பாடல் பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான்கு சரணங்கள் உட்பட பாடலின் முழு ஆறு சரணப் பதிப்பும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்பட வேண்டும். இந்தப் பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ச்ட்டத்தின் கீழ், தேசிய பாடலகளை சீர்குலைப்பவர்களுக்கோ அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் எனும் தேசியப் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பாடலின் சில வரிகள் தாயகத்தை தெய்வமாகச் சித்தரிப்பது, அவர்கள் சாரந்த இஸ்லாமிய நம்பிக்கையான 'ஓரிறை கொள்கைக்கு' முரணானது என அந்த அமைப்புகள் கூறியுள்ளன. இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன. தேசப்பற்றுக்கும் இஸ்லாமிய தெய்வ நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் வேறுபாடு உண்டு தேசிய தேசம் சார்ந்த யாரும் இதை ஏற்க வேண்டும் முன்னதாக, வந்தே மாதரம் பாடலில் மொத்தமுள்ள 6 சரணங்களில், இரண்டு சரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 4 சரணங்கள், இந்துக் கடவுள்களைப் போற்றும் வகையில் இருந்ததால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டும் எனக் கருதி அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வாழத் தகுதியோ, உரிமையோ இல்லை என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை குறை கூறியவர், சில அரசியல் கட்சிகள் இந்தியாவில் உண்டானதாகவும், ஆனால் வந்தே மாதரத்தை பாட மறுப்பதாகவும் விமர்சித்தார். மேலும் உத்தரப் பிரதேசம் கலவர பொருளாதாரத்திலிருந்து கோயில் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டதாகவும், யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
(வந்தே மாதரம்! சுஜலம், ஸுபலம், மலையஜ ஶீதலம், ஷஸ்யாஷ்யாமலம், மாதரம்!
வந்தே மாதரம்!
ஶுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதாயாமிநீம்,
புல்லகுஸுமிதா த்ருமடல ஶோபிநீம்,
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷிணீம்,
சுகதாம் வரதாம், மாதரம்!
வந்தே மாதரம், வந்தே மாதரம்!) ........ இதுவரை சமஸ்கிரதம் இனி தமிழில் படல் வரிகள் :-
"வந்தே மாதரம் வந்தே மாதரம்
சுஜலாமு சுவலாம் மலயஜ சேத்தலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
சுப்ர ஜோத்ஸ்னா குலகி தயாமினிம்
துல்ல குசுமித த்ருமதள சோவினிம்
சுஹாசினிம் சுமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
நளிர் மணி நீரும் நயம் படு கனிகளும்
குளிர் பூஞ் சென்றலும் கொழும் கொளிர்ப்பா சுமையும்
வாய்ந்து நன்கில குவை வாழிய அன்னை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
திரு நிறைந்தனை தன் நிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை
நீர்வளம் சார்ந்தனை மர்பு செய்கனில் நற்பயன் மல்குவை
பழனின் வந்ததோ மைநிறம் வாய்ந்தனை பெருகும் இன்பம் உடையை
குறு நகை பெற்றொளிந்தனை மல்பணி பூண்டனை
இருநிலத்து வந்தென் உயிர் காங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்"

















கருத்துகள்