நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி பயிற்சி உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி கோரிய மனுவின் மீது பதிலளிக்க உத்தரவு
நிலத் தகராறுகளைக் கையாளும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு முறையான சட்டக் கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
நம் நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த சிவில் வழக்குகளில் 66 சதவீதம் அலுவலர்கள் நடத்திய ஊழல் காரணமான நிலத் தகராறுகள் தொடர்பானவை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைச் சட்டக் கல்வி பயிலாத வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரிப்பது முறையாக இருக்காது.
'எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முறையான சட்டப் பயிற்சி வழங்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்' எனக்கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா முன்வைத்த வாதத்தில் பட்டாக்கள் , வாரிசுரிமை, மற்றும் சொத்துரிமை மற்றும் நில ஆக்கிரமிப்பு குறித்த வழக்குகளை சுதந்திரம் அடைந்த காலம் முதல் தாசில்தார் எனும் வருவாய் வட்டாட்சியர்கள், மற்றும் மணடல வருவாய்க் கோடட ஆட்சியர்கள், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அல்லது ஏ எஸ் ஓ எனப்படும் வருவாய் நில நிர்வாக அளவைத் துறை உதவி செட்டில்மெண்ட் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான சட்டக் கல்வியோ அல்லது நீதித்துறை பயிற்சியோ இல்லை. நிலங்களை குறித்த பழமையான அனுபவம் கொண்ட அறிவுகள் மற்றும் அனுபவம் இல்லை, இவர்களுக்கு
சட்டப் பின்புலம் இல்லாததால், இந்த அலுவலர்கள் வழங்கும் தீர்ப்புகள் முன்னுக்குப்பின் முரணாகவும், அதனால் ஊழலாகவும், தீர்வுகள் பிழையுடனும் இருக்கின்றன.
இது போன்ற தன்னிச்சையான முடிவுகள், இந்திய அரசியலமைப்பின் 14-வது மற்றும் 21-வது பிரிவுகளை மீறுவதாக உள்ளது.எனவே, நிலத் தகராறுகளை விசாரிக்க தனியாக ஒரு நீதித்துறையின் சேவையை உருவாக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் அலுவலர்களுக்கு குறைந்தபட்ச சட்டக் கல்வி தகுதியையும், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் கூடிய பயிற்சியையும் கட்டாயமாக்க வேண்டும்.
நிலத் தகராறுகள் தொடர்பான தீர்ப்புகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்".
என அவர் வாதிட்டார்.
மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, 'மனுவில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது' எனக்கூறி, இது தொடர்பாக மத்திய அரசு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டு நோட்டீஸ் வழங்கி உத்தரவிடடார்.
விரைவில் நிலமோசடிகள். மற்றும் வருவாய்துறை பட்டா மாறுதல் விஷயங்கள் முடிவுக்கு வரும் மத்திய அரசு தனியார் ரயத்துவாரி நிலங்களுக்கு அதன் உரிமையாளர்கள் யூனிக்ஃயூ வழங்க வழிபிறக்கும் திமுக அரசின் நத்தம் என்ற வார்தை ஊழல் மறைய உச்சநீமன்றத் தீர்ப்பு வழி காணும்.



கருத்துகள்