திருச்செந்தூர் மற்றும் தில்லை வாழ் அந்தணர்கள் பக்தர்கள் மத்தியில் பணம் வாங்குவதால் அறநிலையத்துறையின் நடவடிக்கை
இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில் அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவும் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் குறிஞ்சி நிலமான மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் நெய்தல் நிலமான கடற்கரைக் கோயிலாக அமைந்திருப்பது தனிசிறப்பு, கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களாலும், பின்னர் சமஸ்தான ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும், ஆலயம், திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களில் காணும் குறிப்புகளில், பத்தாம் 11ஆம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" எனவும், ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பண...