தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அரசு உத்தரவு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்த உத்தரவில்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயலாளரான சஜன்சிங் ஆர் சவான், லேக்பவனில் ஆளுநரின் செயலாளராக மாற்றம்.
சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேயர் கல்வித்துறையின் அரசு சிறப்பு செயலாளராக நியமனம் .
அறிவியல் நகரத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர் ஹர் சகாய் மீனா, நிலபுனரமைப்பு முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக நியமனம் .
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் பல் வளத்துறையின் ஆணையராக மாற்றம் . இவர் ஆவின் நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.
தமிழ்நாடு வேர்ஹவுசிங் காப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையின் இயக்குநராக செயல்படுவார். தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குநராக இருந்த குமாரவேல் பாண்டியன், மாநில திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பு செயலாளராகச் செயல்படுவார்.
திருநெல்வேலி ஆட்சியராக இருந்த சுகுமார், ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் பிரிவின் இயக்குநராக மாற்றப்பட்டார்.
திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராக (பணிகள்) மாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மைச் செயலாளரான ஹர்மீத் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுவாதி ஸ்ரீ, திருச்சிராப்பள்ளி ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
எல்காட் நிறுவன செயல் இயக்குநர் தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதோடு சென்னை 11 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேவக்கோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.





கருத்துகள்