''முன்னேற்ற பாதையிலே மனச வைத்து....
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து....
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ ...
வழங்கும் குணம் உடையோன் விவசாயி'' ......ஆம் விவசாயிகள் வாழ்வாதரம் காவிரிக் கடலேரமாவட்டங்கள் தமிழக நெற்களஞ்சியமாக விளங்கும் பகுதி இங்குள்ள விவசாயிகள் சார்பில்
மார்ச் மாதம் ஏழாம் தேதி திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளனர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி பாயும் கடலோரப் பகுதி அறிவித்ததால் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா.
விவசாயிகள் சங்கம் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். அதேபோல் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் பாராட்டு விழா. இதில் பங்கேற்பதை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் உறுதி செய்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு மார்ச் மாதம் ஏழாம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்காக அப்போதய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதேபோல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விவசாயி மகனுக்கு விவசாயிகள் நடத்தும் பாராட்டுவிழாவாகும் .
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்