மதுரையில் இரவு 1 மணிக்கு மேல் மட்டும் பைக்கை திருடும் சிறுவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை அனுப்பானடி தமிழன் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ், சிம்மக்கல்லில் மக்கள் மருந்தகம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மருந்தகத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்துள்ளது. இரவு 12 மணியளவில் தனது புல்லட்டில் வீட்டிற்கு வந்துள்ளார் காரல் மார்க்ஸ்.
வழக்கம் போல வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டில் மொபைல்ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த போது இரவு 2:15 மணிக்கு மருந்த டைல்ஸ் பணி நிறைவடைந்ததாக அந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது வெளியே வந்த காரல் மார்க்ஸ் தனது பைக் மாயமானது கண்டு அதிர்ந்துள்ளார்.
உடனே தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது சரியாக 1 மணிக்கு காரல் மார்க்ஸ் வீட்டிற்கு வந்த மூன்று பேர் லாவகமாக பைக்கை திருடி செல்லும் காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காரல் மார்க்ஸ். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு கைதாகி ‘வாய்தா’விற்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள லிங்கபிரவு, ஆதீஸ்வரன் என்ற சிறார் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
மதுரை வண்டியூரில் தனி வீட்டில் வசித்து வந்த இந்த இரு சிறார்களும் அனைவரும் உறங்கியபின் இரவு 1 மணியை தேர்வு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பல திருட்டில் போலீசார் மடக்கியதை தொடர்ந்து நகர் பகுதி வேண்டாம் எனக்கூறி, புறநகரான மேலூரில் வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இருந்தும் அது தொடர்பான வழக்குகளில் ஆஜர் ஆகாததால் ‘வாய்தா’ சிறார் என போலீசாரால் அழைக்கப்படும் இவர்களின் பார்வை தற்போது மீண்டும் மதுரை நகருக்குள் வந்திருப்பது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் விபரம் போலீசாருக்கு நன்கு தெரியும் என்பதால் பைக்கை எடுத்து செல்ல வேறொரு சிறுவனை உடன் அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுவன் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி சென்ட்டிமெண்ட், சிறார் குற்றவாளிகள், பைக் அபேஸ் என புதிய தலைவலியை தரும் இந்த சிறார்களின் விபரம் தெரிந்தும், அவர்கள் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்