இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு. இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென்னையில் உள்ள மணலியில் இருந்து தான் வேதிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் Coldbest - PC Syrup என்ற இருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த 17ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தன. 17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு Coldbest - PC மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், ‘டைதிலீன் கிளைகோல்' ( ‘diethylene glycol')என்ற வேதிப்பொருள் இருந்ததும், இதனால் விஷத்தன்மை மருந்தில் கூடியிருப்பதும் தெரியவந்தது என்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் உதவி மருந்துகள் கட்டுப்பாட்டாளர் சுரிந்தர் மோகன் தெரிவித்தார்.
இதையடுத்து Coldbest - PC இருமல் மருந்தின் தொகுதிகள் அனுப்பப்பட்ட எட்டு மாநிலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர், அந்த மருந்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி இமாச்சலப் பிரதேசம் (உற்பத்தியாளர் அமைந்துள்ள இடம்), ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரிகள் இந்த அறிவிப்பை அனுப்பி உள்ளார்கள்.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்