முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு FOGDA சார்பில் தகவல்.

அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு FOGDA சார்பில் தகவல்.
கொரோனா பெருந்தொற்றுக்கு  எதிரான  நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு எந்திரம் 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும்  அறிந்ததே. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் நமது சுகாதாரத்துறை முன்னணிப் படையாக களத்தில் நின்று பணியாற்றி வருகிறது. சுகாதாரத்துறையின் மூன்று இயக்குனரகங்களும் அதன் கீழே பணிபுரிகின்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து  மக்களைக்  காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சில கருத்துக்களை தங்களிடம் முன்வைக்க விரும்புகிறது.
 மருத்துவ சேவை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  பணியாளர்கள் கொரோனா பாசிட்டிவாக ஆவது  அதிகரிக்கின்றது .  இந் நிலை அச்சமூட்டுவதாக உள்ளது.  ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது எதைக் காட்டுகின்றது என்றால் , முறையான தேவையான அளவில் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதில்லை என்பதையே காட்டுகின்றது. அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா  தொற்று உடையவர்கள்  ஏராளமாக உள்ளனர்  என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் கொரோனா  வார்டு  அல்லாத மற்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள்,  செவிலியர்கள்,  ஊழியர்கள் முறையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல்தான் பணியாற்றி வருகிறார்கள்.  அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயம் உள்ளது.
எனவே தரம் வாய்ந்த கொரோனா பாதுகாப்பு கவசங்களை மருத்துவத் துறையினருக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி  PPE பாதுகாப்பு கவசங்கள் வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். GSM 70 க்கு குறைவில்லாத பாலிபுரோப்பைலினால் செய்யப்பட்ட பாதுகாப்பு கருவிகளை வழங்கிட வேண்டும்.
கோவிட் பணியில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணி நேரம் ஒதுக்க வேண்டும். கோவிட் பகுதி பணி முடிந்த பிறகு 14 நாட்கள் அவர்களை தனிமைப் படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.  தனிமைப் படுத்திக் கொள்ளுதல் காலத்தில் அவர்களுக்கு  தரமான உணவு தங்குமிடம் அளிக்க வேண்டும்.‌ மருத்துவமனை வளாகத்தில் அல்லது மருத்துவமனை விடுதிகளில் தங்க வைப்பது சரியல்ல. ஏனெனில் இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கோ அல்லது மற்றவர்களிடமிருந்து இவர்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே  தனிமைப் படுத்தும் பகுதியாக ஓட்டல்களாகவோ பிற கல்லூரி விடுதிகளாகவோ இருக்கலாம்.
சமூகப் பரவலை அறிந்து கொள்ள சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவத் துறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஆய்வு செய்ய வேண்டும். புறநோயாளிகள் பிரிவு, மற்றும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளும் பொது சுகாதார துறை மருத்துவ குழுவினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மகப்பேறு, அறுவை சிகிச்சை, அகநோக்கி சிகிச்சை குழுவினருக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும்.
சீமாங், அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவை பகுதிகளில்  கொரனா வார்டு தனி பகுதியில் இயங்க வேண்டும். 
மருத்துவ ஊழியர்கள், பொதுமக்களுக்கு கொரனா சமூக பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும் கொரனா சிகிச்சைக்கு என தனி மருத்துவமனைகள் ஏற்படுத்த பட வேண்டும். 
சுய பாதுகாப்பு கவசங்கள், உணவு, தங்குமிடம், ஆகியவை தொடர்ந்து அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய,
இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவர் தலைமையில் மாநில குறைதீர் குழு அமைக்க வேண்டும்.
இதற்கான நிதி ஆதாரங்களுக்கான அறிவிப்பை விரைவில் வழங்கி, கொரனா பணியில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு தங்குதடையின்றி உணவு, உறைவிடம், கிடைக்க நடவடிக்கைகள் வேண்டும்.  கொரனாவுக்கு எதிரான இந்த போரில் முன்னணியில் இருந்து சேவையாற்றும் சுகாதார துறை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் மத்திய அரசு அறிவித்துள்ள 50இலட்சத்துடன், மாநில அரசின் உதவியாக 50இலட்சம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழக அரசு ஏற்கனவே உறுதியளித்த படி, அரசு மருத்துவர்களின் பங்களிப்போடு கூடிய கார்பஸ் நிதி திட்டத்தினை உடனடியாக அறிவிக்க வேண்டும்.  அரசு மருத்துவரின் இழப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கார்பஸ் நிதி அளிக்க வேண்டும். 
மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், ஆய்வக நுட்பணர்கள், களப்பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்களில் முன்றில் ஒரு பகுதியினர் கொண்ட தொகுதியாக சுழற்சி முறையில் பணிபுரிய செய்ய வேண்டும்.  தீவிர கொரனா சிகிச்சை பிரிவு பணியில் இருந்து, பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.  கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், உள்ளிட்ட நோய் எதிர்ப்பு திறன் குறைவான பணியாளர்கள், மூத்தவர்கள்  ஆகியோருக்கு கொரனா பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 
பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மதிப்பூதியமாக வழங்க வேண்டும். 
நீலகிரி மலைப்பகுதி கிராமத்தில் பணியாற்றிய டாக்டர்.ஜெயமோகன்  டெங்கு, ஸ்கிரப் டைபஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் இழப்பிற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.  
கொரனா காரணமாக இறந்த மருத்துவரின் உடலை தகனம் செய்வதில் சமூக விரோதிகள் குழப்பம் விளைவிக்கின்றனர்.  இது குறித்து பொதுமக்களின் பயத்தினை போக்கிடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொரனா பணியில் உயிர் தியாகம் செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு மாநில அரசின் மரியாதை கிடைக்க செய்ய வேண்டும்.      அரசு மருத்துவர்களின் மன உறுதியை கூட்டும் வகையில் 135 அரசு மருத்துவர்களுக்கு கடந்த 2019 அக்டோர், நவம்பரில் வழங்கபட்ட இட மாறுதல், 17ஆ குறிப்பாணைகளை இரத்து செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரையும், மாண்புமிகு சுகாதார அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றவும் கேட்டுக் கொள்கிறோம். 
 கடந்த ஆண்டு பட்டமேற்படிப்பு முடித்து நேரடி நியமனம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்கள், அரசாணை4D2 மூலமாக பணிஇட மாறுதல் பெற்ற மருத்துவர்கள் என சுமார் ஐநூறு மருத்துவர்கள் இந்த ஊரடங்கின் போது பணியிடங்களுக்கு சென்று வருவதில், உணவு கிடைப்பதில் சிரமங்கள் அனுபவித்து வருகிறார்கள். தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் பணி மாறுதல் வழங்கினால், இவர்கள் மேலும் நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் இந்த போர்க்காலத்தில் பணி புரிவர் என
.FOGDA  தகவல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...