அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு FOGDA சார்பில் தகவல்.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு எந்திரம் 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் நமது சுகாதாரத்துறை முன்னணிப் படையாக களத்தில் நின்று பணியாற்றி வருகிறது. சுகாதாரத்துறையின் மூன்று இயக்குனரகங்களும் அதன் கீழே பணிபுரிகின்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சில கருத்துக்களை தங்களிடம் முன்வைக்க விரும்புகிறது.
மருத்துவ சேவை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா பாசிட்டிவாக ஆவது அதிகரிக்கின்றது . இந் நிலை அச்சமூட்டுவதாக உள்ளது. ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது எதைக் காட்டுகின்றது என்றால் , முறையான தேவையான அளவில் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதில்லை என்பதையே காட்டுகின்றது. அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா தொற்று உடையவர்கள் ஏராளமாக உள்ளனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் கொரோனா வார்டு அல்லாத மற்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் முறையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல்தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயம் உள்ளது.
எனவே தரம் வாய்ந்த கொரோனா பாதுகாப்பு கவசங்களை மருத்துவத் துறையினருக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி PPE பாதுகாப்பு கவசங்கள் வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். GSM 70 க்கு குறைவில்லாத பாலிபுரோப்பைலினால் செய்யப்பட்ட பாதுகாப்பு கருவிகளை வழங்கிட வேண்டும்.
கோவிட் பணியில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பணி நேரம் ஒதுக்க வேண்டும். கோவிட் பகுதி பணி முடிந்த பிறகு 14 நாட்கள் அவர்களை தனிமைப் படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தனிமைப் படுத்திக் கொள்ளுதல் காலத்தில் அவர்களுக்கு தரமான உணவு தங்குமிடம் அளிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் அல்லது மருத்துவமனை விடுதிகளில் தங்க வைப்பது சரியல்ல. ஏனெனில் இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கோ அல்லது மற்றவர்களிடமிருந்து இவர்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தனிமைப் படுத்தும் பகுதியாக ஓட்டல்களாகவோ பிற கல்லூரி விடுதிகளாகவோ இருக்கலாம்.
சமூகப் பரவலை அறிந்து கொள்ள சோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவத் துறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஆய்வு செய்ய வேண்டும். புறநோயாளிகள் பிரிவு, மற்றும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளும் பொது சுகாதார துறை மருத்துவ குழுவினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மகப்பேறு, அறுவை சிகிச்சை, அகநோக்கி சிகிச்சை குழுவினருக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும்.
சீமாங், அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவை பகுதிகளில் கொரனா வார்டு தனி பகுதியில் இயங்க வேண்டும்.
மருத்துவ ஊழியர்கள், பொதுமக்களுக்கு கொரனா சமூக பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும் கொரனா சிகிச்சைக்கு என தனி மருத்துவமனைகள் ஏற்படுத்த பட வேண்டும்.
சுய பாதுகாப்பு கவசங்கள், உணவு, தங்குமிடம், ஆகியவை தொடர்ந்து அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய,
இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவர் தலைமையில் மாநில குறைதீர் குழு அமைக்க வேண்டும்.
இதற்கான நிதி ஆதாரங்களுக்கான அறிவிப்பை விரைவில் வழங்கி, கொரனா பணியில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு தங்குதடையின்றி உணவு, உறைவிடம், கிடைக்க நடவடிக்கைகள் வேண்டும். கொரனாவுக்கு எதிரான இந்த போரில் முன்னணியில் இருந்து சேவையாற்றும் சுகாதார துறை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் மத்திய அரசு அறிவித்துள்ள 50இலட்சத்துடன், மாநில அரசின் உதவியாக 50இலட்சம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழக அரசு ஏற்கனவே உறுதியளித்த படி, அரசு மருத்துவர்களின் பங்களிப்போடு கூடிய கார்பஸ் நிதி திட்டத்தினை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவரின் இழப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கார்பஸ் நிதி அளிக்க வேண்டும்.
மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், ஆய்வக நுட்பணர்கள், களப்பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்களில் முன்றில் ஒரு பகுதியினர் கொண்ட தொகுதியாக சுழற்சி முறையில் பணிபுரிய செய்ய வேண்டும். தீவிர கொரனா சிகிச்சை பிரிவு பணியில் இருந்து, பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், உள்ளிட்ட நோய் எதிர்ப்பு திறன் குறைவான பணியாளர்கள், மூத்தவர்கள் ஆகியோருக்கு கொரனா பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
நீலகிரி மலைப்பகுதி கிராமத்தில் பணியாற்றிய டாக்டர்.ஜெயமோகன் டெங்கு, ஸ்கிரப் டைபஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் இழப்பிற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
கொரனா காரணமாக இறந்த மருத்துவரின் உடலை தகனம் செய்வதில் சமூக விரோதிகள் குழப்பம் விளைவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்களின் பயத்தினை போக்கிடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொரனா பணியில் உயிர் தியாகம் செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு மாநில அரசின் மரியாதை கிடைக்க செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களின் மன உறுதியை கூட்டும் வகையில் 135 அரசு மருத்துவர்களுக்கு கடந்த 2019 அக்டோர், நவம்பரில் வழங்கபட்ட இட மாறுதல், 17ஆ குறிப்பாணைகளை இரத்து செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரையும், மாண்புமிகு சுகாதார அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றவும் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு பட்டமேற்படிப்பு முடித்து நேரடி நியமனம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்கள், அரசாணை4D2 மூலமாக பணிஇட மாறுதல் பெற்ற மருத்துவர்கள் என சுமார் ஐநூறு மருத்துவர்கள் இந்த ஊரடங்கின் போது பணியிடங்களுக்கு சென்று வருவதில், உணவு கிடைப்பதில் சிரமங்கள் அனுபவித்து வருகிறார்கள். தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் பணி மாறுதல் வழங்கினால், இவர்கள் மேலும் நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் இந்த போர்க்காலத்தில் பணி புரிவர் என
.FOGDA தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்