முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னையில் மூன்று பத்திரிகையாளர்கள் கொரானாவால் மருத்துவமனையில்

சென்னையில் தினசரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வரும் 24 வயது நிருபருக்கு கொரானா தொற்று இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் (மேன்சனில்) தங்கியிருந்தார். அவருக்கு கடந்த 17-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தங்கி இருந்த விடுதி மற்றும் தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவருடன் விடுதியில் இருந்த 7 பத்திரிகையாளர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அடுத்து சென்னை செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் (வயது 25) உள்ளவருக்கும் கொரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. ராயபுரம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவராவார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளனர். அடுத்து செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் மூன்று பத்திரிகையாளர்கள்       பாதிப்பில் .கொரானா பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் முன்னின்று செயல்படும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து,சென்னையில் இரண்டு  பத்திரிகையாளருக்கு கொரானாவால் பாதிப்பு. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜன் 
''வெட்டியானுக்கு சுடுகாட்டிற்கு பிணம் வந்தால் தான் பணம்
நிமிடத்துக்கு நிமிடம் பரப்பு செய்தி வந்தால் தான் ஊடக முதலாளிகளுக்குப் பணம்.
எவன் வீட்டில் பிணம் விழுந்தால் என்ன. எனக்குத் தேவை பணம் இது தான் வெட்டியானுக்கும்.ஊடக முதலாளிக்கும்  உள்ள ஒற்றுமை
மழை,வெள்ளம், புயல் காலம் போல நிமிடத்துக்கு நிமிடம் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தும் போக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்
கும்பல் கும்பலாக செய்தியாளர்களையும் ஒளிப்பதிவாளர்களையும் நிற்க வைத்து பேட்டி கொடுப்பவர்களுக்கும் கொரானா தொற்றும் என எடுத்துரைத்தோம்.
எவ்வித பணி உத்தரவாதம் இல்லாத வாழ்வாதாரமற்ற செய்தியாளர்களை வீதிக்கு வீதி அழைத்துச் செல்லாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தோம்
தலைமைச்செயலக செய்தியாளார் அறை உட்பட மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, காவல்துறை அலுவலகம்,மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறைகளை நிலைமை சீராகும் வரை பூட்டச் சொன்னோம்,
அரசு தரப்பு மற்றும் கட்சி செய்திகளை,செய்திப் படங்களை,வீடியோக்களை மெயில் மூலமாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்புங்கள் என்று சொன்னோம்
எவரும் செவி மடுக்கவில்லைகூரைப்பள்ளிகளை தடை செய்ய கும்பகோணத்தில் பள்ளி சிறார்கள் தீயில் கருக வேண்டும்
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சேலையூர் சிறுமி பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து பெற்றோர் முன் கொடூரமாக சாக வேண்டும் சாலைகளில் கட்டவுட் கட்டுவதை தடை செய்ய பள்ளிக்கரணையில் ஒரு சுபஸ்ரீ சாக வேண்டும்
அதேபோல் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பத்திரிகையாளர் எவராவது ஒருவர் செத்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்கும்
அப்படி சாகப்போவது நானாகவும் இருக்கலாம்..நீங்களாகவும் இருக்கலாம்.
நமக்கு நாம் தான் பாதுகாப்பு
விழிப்போடு இருப்போம்
விலகியே இருப்போம்
வீட்டிலேயே இருப்போம்
வேலையாவது.ஹைகோர்ட்டாவது அதை பிழைத்துக் கொண்டால் அப்போது பார்ப்போம்''. என பதிவு செய்கிறார்.நிலைமை அப்படி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...