முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆடியோ வைரலானது

கொரானா உதவி  நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களைத் தள்ளி நிற்கச் சொன்னாரா சாத்தூர் கே.கே.ஏஸ். ஏஸ்.ஆர். இராமச்சந்திரன். வைரலாகும் ஆடியோ,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் முகக்கவசம் இல்லாத  இஸ்லாமியர்களை விலகி நிற்கல் கூறியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கும் ஆடியோ பேச்சு வைரலா கியது.கொரானா வைரஸ் பரவல் தடுக்கும் ஊரடங்கால் அத்தியாவ சியப் பொருட்கள் கூட இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு முகக் கவசம் மற்றும் அரிசி வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த வாரம் நடந்து. அதில் பங்கேற்ற திமுக தெற்கு மாவட்டச் செயலர் முன்னாள் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திருநங்கைகள் உள்பட பல மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக சார்ந்த இஸ்லாமிய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது முகக்கவசம் இல்லாமல் வந்திருந்த இஸ்லாமியர்கள் சிலரிடம், முகக்கவசம் அணியவேண்டியதன் கட்டாயம் குறித்து சாத்தூர் ராமசந்திரன் எம்.எல்.ஏ. கண்டித்து  பேசியது குறித்து ஒருவர் ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில், "அருப்புக்கோட்டையிலிருந்து பரக்கத் பேசுகிறேன். உழவர் சந்தையில் மாஸ்க் வழங்கும் விழாவில் பங்கேற்ற சாத்தூர் ராமச்சந்திரன் அங்கு சென்ற இஸ்லாமியர்களைப் பார்த்து கொரானாவே உங்களால்தான் பரவுகிறது. முதலில் வெளியே செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இத் தகவல் அனைத்து ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
இந்த ஆடியோ இஸ்லாமிய இயக்கத்தினர் உள்ளிட்ட பலருக்கும் சென்றடைய.  ஜமாத் நிர்வாகிகள், திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் சாத்தூர் இராமச்சந்திரனிடம் பேச தான் தவறாக பேசவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியத் தலைவர்கள் பலரை அவரே தொடர்புகொண்டு தான் யாரையும் புண்படுத்திப் பேசவில்லை எனத் தெரிவித்துள் ளார்.அதில் ஒருவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டச் செயலராக இருக்கும்  ஜிந்தாஷாவிடம்  சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய ஆடியோ வைரலாகியது அந்த ஆடியோவில், "வணக்கம் மாமா நான் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசுகிறேன். இப்போது இவர்கள் சொல்வது எல்லாம் பொய் மாமா. நான் திட்டியது வாஸ்தவம். மாஸ்க் போடாமல் வந்ததால் திட்டினேன். உங்கள் தெருவில்தானே பாதிப்பு வந்துள்ளது. நீங்கள் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்களே, இப்படி வந்தால் உங்கள் குடும்பம்தானே பாதிக்கும் என சப்தம் போட்டது வாஸ்தவம். நான் இல்லையெனக் கூறவில்லை. உங்கள் தெருவை பிளாக் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். விருதுநகரில் பல தெருக்களை கட்டை கட்டி மறித்து விட்டனர். நம்ம தெருவில்தான் நான் கட்டைபோட்டு கட்டவிட வில்லை. போலீஸாரும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் இங்கு கட்டை போட்டுகட்ட வேண்டும் என்றார்கள். ஒருவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரையும் நீங்கள் கண்டறிந்து விட்டீர்கள். இனிமேல் ஏன் கட்டை கட்டவேண்டும் என்று கூறி நான் நிறுத்திவிட்டேன். எல்லா ஊரிலும் ஜமாத்திற்கு சென்று வேறு ஆட்கள் வந்துள்ளார்களா என சோதனை செய்தார்கள். உங்கள் ஜமாத்துக்கு நாங்கள் ஆளே அனுப்பவில்லை. நம்ம ஊரில் மட்டும்தான் நான் நமது மக்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வைத்துள்ளேன். ஏனெனில் அந்த ஓட்டு முழுவதும் என் ஓட்டு என்று தெரியும்.
பாதிப்பு ஏற்பட்டால் 15 நாள் தனியாக வைத்துவிடுவார்கள். வீட்டு வாசலில்அறிவிப்பு பேப்பர் ஒட்டிவிடுவார்கள். இது அசிங்க மாக இருக்கும். பக்கத்து வீட்டுக் காரர்கள்கூட உங்களிடம் பேச மாட்டார்கள். நான் பேசியதை வேண்டுமென்றே தவறாகப் பரப்பிவிட்டார்கள். அங்கிருந்த 3 பேரும் எங்களது கட்சிக்காரர்கள். இவர்கள் மூவரும் தான் என்னைப் பார்ப்பார்கள். நான் அந்த மூவரைத்தான் திட்டுவேன்.
அருப்புக்கோட்டையில் போலீஸ் தொந்தரவோ, தாசில்தார் தொந்தரவோ, கலெக்டர் தொந்தரவோ இல்லாமல் நான் தான் பார்த்துக்கொண்டுள்ளேன். இல்லையெனில் உங்களை பாதி கிறுக்காக ஆக்கியிருப்பார்கள்.
கட்டையைக் கட்டவேண்டும் என்று மல்லுக்கட்டியிருப்பார்கள். அதனால் யார் சொன்னாலும் நீங்கள் நம்பவேண்டாம். திட்டியது உண்மை. நீ செயலாளர், நாளைக்கு நீ தேர்தலுக்கு வேண்டுமா வேண்டாமா எனத் திட்டினேன். நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்று தான் திட்டினேன். அதை தவறாக எடுத்துக்கொண்டால் எப்படி?
மாக்ஸ் போடாத எல்லோரையும் தான் திட்டுகிறேன். இந்துவாக இருந்தாலும் திட்டுகிறேன். கிறிஸ்தவராக இருந்தாலும் திட்டுகிறேன்.யாராக இருந்தாலும் தான் திட்டுகிறேன். உங்களை நான் எப்படி இழப்பேன். புதிய பேருந்து நிலையத்தில் கூட கடைபோடக்கூடாது என்றார்கள்.
கடைபோட நான்தான் அனுமதி யளித்தேன். சாமியான பந்தல் போடச் சொன்னதும் நான்தான். நல்லது எதுவும் வெளியில் வருவதில்லை. கெட்டது மட்டும் தானே வருகிறது." எனப் பதிவாகி யுள்ளது. ஆடியோ மூலமே உரிய விளக்கம் அளித்து வாட்ஸ் அப்பில் வெளியிடுமாறு ஜிந்தாஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் ஆதாயத்தோடு சாத்தூர் ராமச்சந்திரன் எம்ல்ஏ. பேசியதாக வெளியான ஆடியோ வாட்ஸ் அப்-பில் வைரலாகப் பரவியது. இது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்த சாத்தூர் ராமச்சந்திரன் 'இது முடிந்துபோன விவகாரம்' எனக் கூறி கருத்து கூற மறுத்துவிட்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் மாவட்டச் செயலர் ஜிந்தா ஷாவை பலர் தொடர்பு கொண்டும் அவர் போன் அழைப்பையே எடுக்க வில்லை. கோவிட் -19 ஊரடங்கில் இஸ்லாமிய ஆர்வலருடன் ஒரு மூத்த தலைவரின் ஆடியோவுக்குப் பிறகு திமுகவுக்கு பெரும் சங்கட மாகிறது. தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியான தி மு க ஒரு பெரிய சங்கடத்தில், கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனின் ஆடியோ, மாறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரனின் ஆதரவாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் அவரது அரசில் முக்கிய அமைச்சராகப் பதவி வகித்தார். மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் திமுகவுக்கு விசுவாசத்தை மாற்றினார். மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் அமைச்சரவை யில் அமைச்சராக இருந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...