முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நலச் சங்கம் சார்பில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை.

மதுரையில் இயங்கும்  
தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நலச் சங்கம் சார்பில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கோரிக்கை.
மத்திய, மாநில அரசு மற்றும் விமான துறை அமைச்சகத்திற்கு 
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது,
விமானங்கள் இயக்கப்படாததால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விமான நிறுவனங்கள் தங்களுடைய முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்த பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.
இதனால் விமான பயணிகள் தங்களுடைய ரத்து செய்த தொகையை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் தற்பொழுது புதிதாக ஒரு கொள்கையை ஏற்படுத்தி இருப்பது பயணிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரெடிட் ஷெல் ஆஃப்ஷன்  எனும் புதிய கொள்கையின் படி கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் முன்பதிவு செய்த பணம் திரும்ப தரப்பட மாட்டாது.
யார் பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்ய பட்டதோ அவர் அந்த தடத்தில் அவர் மட்டுமே ஒரு வருடத்திற்குள் பயணம் செய்ய முடியும் 28.02.2021 க்குள்.
குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் செய்ய முடியாது.
தேதி மாற்றத்தின் போது Re-Schedule ஏற்படும் அன்றைய நிலவரப்படி ஏற்படும் வித்தியாச தொகையைச் செலுத்த வேண்டும். என்பது தான் நிபந்தனையாக இருக்க 
இதற்கான தீர்வாக வைக்கும் கோரிக்கை 
உடனடியாக எவ்வித காரணமும் இன்றி முன்பதிவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும்.
இல்லை எனில் அதற்குரிய ரத்து செய்த தொகையை எளிதாக பயன்படுத்தும் வகையில் PROMO CODE (OR) COUPAN ஆக வழங்கி  அதே தொகையின் மதிப்பில் வேறு பயனாருக்கு   திரும்ப பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் இதற்கு எவ்வித கால நிர்ணயமும் செய்ய கூடாது.
PROMO CODE OR COUPAN மூலமாக போட கூடிய டிக்கெட்களுக்கு வேறு விலை நிர்ணயம் செய்யக் கூடாது.
பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட Ctedit Shell Option முறையை உடனே நிறுத்த வேண்டும்.
இந்த புதிய கொள்கையை ரத்து செய்ய மத்திய அரசும் மற்றும் விமான அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தருவது இடிக்கெட் ஏஜெண்ட்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக ஆகிவிடும். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
இந்தப் புதிய கொள்கையின் படி உதாரணமாக டெல்லியில் இருந்து பத்து பேர் கொண்ட குடும்பம் திருப்பதிக்கு விமான டிக்கெட் எடுத்துள்ளது என்று வைத்து கொள்வோம் இந்த டிக்கெட்டை ஒரு வருடத்திற்குள் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று விமான நிறுவனம் சொல்கிறது நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது உதாரணமாக அந்த குடும்பத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அவரவர் மதத்தின் அடிப்படையில் மலை கோவில்களுக்கோ அல்லது கோவில்களுக்கே ஒரு வருடத்திற்கு செல்ல கூடாது என்பது விதி. 
அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த விமான கட்டணம் யாருக்கு லாபம். பொது மக்களுக்கா இல்லை விமான நிறுவனத்திற்கா என்ற வினா உண்டு.
விமான நிறுவனங்கள் தங்களுடைய நஷ்டத்தை தங்களுடைய நிதி மற்றும் லாபத்தில் இருந்து ஈடுகட்டணுமே தவிர பொதுமக்களின் தலையில் கை வைக்க கூடாது. 
தயவு செய்து இந்த கொள்கையை உடனே ரத்து செய்து விட்டு பயணியருக்கான தொகையை திரும்ப கொடுக்க மத்திய அரசு மற்றும் விமான அமைச்சகம் ஆவண செய்ய வேண்டுமென
தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நல சங்கம் இதனை வலியுறுத்துகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...