கத்துக்குட்டி பட விளம்பரம் ஒரு கத்துக்குட்டித்தனமான பேச்சு
நடிகை ஜேதிகா பேச்சு பல விவாதமானது மும்பையின் நந்திதா மொராஜி (எ) நர்மதா சாதனாவாகவோ இல்லாமல் நக்மா என்ற பெயரில் அறிமுக மாகி தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாக 1993 -1997 க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்பட முக்கிய கதாநாயகியாக இருந்தவர் இவரது தங்கை ஜோதிகாவும் நடிகை இருவரின் தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவர்களா வார்கள். இதில் நக்மா காங்கிரஸ் கட்சியில் ஒரு பலம் வாய்ந்த நபர் ஆதரவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல முன்னணியில் இருந்த நபர்களை பின் தள்ளிய கதை அரசியலில் பெரிது அந்தக் கதை தொடர்ச்சியாக கொங்குப் பகுதியில் கொடுமுடியைச் சேர்ந்த நடிகர் சிவக்குமார் வீட்டிலும் தன் தங்கையை செல்வாக்கு காரணமாக நடிகர் சூரியாவுக்கும் ஒருவழியாகத் திருமணம் செய்தது பழைய செய்தி அதில் பலர் அறிந்த அறியாத நிகழ்வுகள் உண்டு என்பது பலரது கருத்தாகும்.இந்த நிலையில் தஞ்சாவூரின் கதை சார்ந்து வெளிவர உள்ள ஒரு படவிழாவில் நடிகை ஜோதிகா பேசியது சமூக வைரலாகி பின் விவாதங்கள் வளரும் நிலை. அப்படி என்ன பேசினார் என்பதைப் பார்த்தால், ''தஞ்சாவூரில் அரசு மருத்துவ மனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.அந்த மருத்துவமனையை மிக மேசமாகப் பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது.
எல்லோரும் கோயில் உண்டியல்ல காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவ மனயைப் பராமரிக்கவும் உதவுங்க'' எனத் தனியார் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அது பல விவாதங்களைக் கிளபியிருக் கிறது. படத்தின் இயக்குநர் சரவணனும், பேசிய ஜோதிகா வுக்கு ஆதரவாக விளக்கம் கொடுத்துள்ளார்.இதன் பின்பு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார்.''கொரானா பிரச்னைக்கே மருத்துவமனை வராத ஆட்சியர் இப்போது வந்து ஆய்வு செய்கிறார் அது ஜோதிகா பேசியதன் விளைவுதான் எனச் ஆதரவாகச் சிலரும் இதுஜோதிகா தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்தை மனதில் வைத்து இப்படிப் பேசியதாக எதிர்ப்பாகச் சிலரும் பேசக் காரணம். ஜோதிகாவும் சூரியாவும் திருமணத்திற்குப் பின் இந்துவாக வா அல்லது இஸ்லாமியராகவா என்ற காரணமாகவே இது விவாதாமாக மாறியது. இவர்கள் நடத்திவரும் அகரம் அறக்கட்டளையின் மூலம் மருத்துவமோ, பொறியியலோ படித்து, வெற்றிகண்ட மாணவர் களை ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி கௌரவிக்கிறார். சமீபத்தில் இதுபோன்ற ஒரு மேடையில், தன்னால் படித்து முடித்த மாணவியின் பேச்சைக் கேட்டு, மேடையில் கண்கலங்கி நெகிழ்ந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடந்த அகரம் அறக்கட்டளையை நடத்த சூர்யாவுக்கு, தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தி, ஓய்வுபெற்ற சிவகங்கை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் மகன் ராஜசேகரன் உறுதுணையாக இருக்க,அறம் சார்ந்த நோக்கத்தில் அகரம் பவுண்டேஷன் இயங்க. தற்போது 2 டி எண்டெர்டெய்ன் மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல படங்களை சூர்யா தயாரித்து வருகிறார். குறிப்பாக 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் உள்ளிட்ட ஹீரோ யினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில், தனது மனைவி ஜோதிகாவை ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க வைத்திருக் கிறார். அதேபோல சமீபத்தில் சசிகுமார், ஜோதிகா மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் "கத்துக்குட்டி' இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கி
பத்திரிகையாளராக இருந்து இயக்குனரான இரா.சரவணன் தஞ்சாவூர்க்காரர். இந்தப் படமும் தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்துப் பேசுவதால், மருத்துவ மனைக்காக செட் எதுவும் அமைக்காமல், இயல்பாக இருக்கும்படி தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை யில் அனுமதி பெற்று படப்பிடிப்பு தொடங்கியது. இது அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அதை நம்பியிருக்கும் மக்கள் சந்திக்கும் கொடுமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஜோதிகாவுக்கு ஏற்படுத்திய தாகவும் இதைத் தான் JFW.விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ""நான் ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந் தேன். அப்போது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிர கதீஸ்வரர் கோவிலைப் பார்க்காமல் போகாதீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் அது என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே, அந்தக் கோவிலைப் பார்த்திருக் கிறேன். உதயப் பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல, அவ்வ ளவு அழகான கோவில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் இருந்தது. தஞ்சை கோவிலுக்கு நேரெதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டி ருந்தது. நான் பார்த்ததை எல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு. இதன்பிறகு, நான் அந்தக் கோவிலுக்கு செல்ல எனக்குத் தோன்றவில்லை.
இதை வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். கோவில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பராமரிக்கிறீர்கள். உண்டியலில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். தயவுசெய்து அதே பணத்தை பள்ளிக்கூடங்களுக்காகவும், மருத்துவ மனைகளுக்காகவும் கொடுத்து உதவுங்கள். கோவில்களைப் போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜோதிகாவின் இந்தப் பேச்சு வைரலாகிய நிலையில் ஜோதிகா இந்துக் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டார். அவரால் ஒரு தேவாலயத்தையோ, மசூதியையோ குறித்து இப்படியொரு கருத்தைச் சொல்ல முடியுமா எனக் கேள்வி வந்த பின்பு “கோவில்களைக் குறித்து எந்த இடத்திலும் நான் குறைத்துப் பேசவில்லை. கோவில்களுக் குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை மருத்துவமனை களுக்கும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்'' என்று ஜோதிகாவுக்காக இயக்குனர் சரவணன் பதில் தந்திருக்கிறார். இந்தநிலை மதம் சார்ந்த விமர்சனம் வரக் காரணம்
தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் சொத்துக்கள்
விவசாய நிலங்கள் - 4 ,78,462 ஏக்கர்,கட்டிடங்கள் - 22600
மனைகள் - 33627,மனைகளின் விஸ்தீரணம் 29 கோடி சதுர அடி .....
( அறநிலையத் துறையின் தகவல் படி ) சொத்துக்களின் சந்தை மதிப்பு 70000 கோடிகள்
இவற்றிலிருந்து அறநிலையத் துறைக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ?
வெறும் 64 கோடி .அதாவது ஆண்டிற்கு 7000 கோடிகள் வருமானம் மட்டுமே வரக் கூடிய சொத்துக்களிலிருந்து வெறும் 64 கோடி தான் வருகிறது ...
உண்டியலில் வரும் காசு ஒரு பக்கம் இருக்கட்டும் , நியாயமா கோவிலுக்கு வர வேண்டிய சந்தை மதிப்பு வரவுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒழுங்கா வந்தாலே தமிழகம் முழுவதும் எல்லா மதத்தினருக்கும் இலவச மருத்துவ சேவைக்கு அதை வழங்கிட முடியும் முடிந்தால் அபகரிக்கப்பட்டுள்ள , ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க முயற்சி தேவையானது. இதை பலரும் எதிர்பார்க்கும் நிலையில், நடிகை ஜோதிகா பேசியது விவாதமாகியது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்