மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது 4 ஆவது தெருக்கள் சந்திக்குமிடத்தில் குடிசையும் காலி மனையும் உள்ள இடத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்தது குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவிக்க
அதைக் கைப்பற்ற எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில் உருண்டை வடிவிலான 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. அந்த நாட்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்து சென்றதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் வியாழக்கிழமை இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 ரவுடிகள் பிடிபட்டதாகவும், அவர்கள் அளித்த தகவலின்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின் உண்மைகள் தெரியும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்