கூடங்குளத்தில் ஒப்பந்த வெளிமாநில ஊழியர் போராட்டத்தில் காயமடைந்த காவல்துறையினருக்கு முதல்வர் இழப்பீடு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் போராட்டம்
தாங்களை கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாகக் கூறி, வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களாக லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலக் கூலித்தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளோ உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளோ நிவர்த்தி செய்யாமல் தங்களைக் கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக புகார் கூறி, தங்களுடைய தொழிலாளர் குடியிருப்பைக் கடந்து, கூடங்குளம் அணுமின் நிலையம் மெயின் கேட்டில் பெட்டி படுக்கையுடன் வந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவர்களை அணுமின் நிலைய அதிகாரிகள் வெளியில் செல்லவிடாமல் தடுத்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இராதாபுரம் தாசில்தார் இந்த சமரச பேச்சில் ஈடுபட்டனர்
கூலித் தொழிலாளர்களை அதிகாரிகள் தொடர்ந்து அடிமைகளாக நடத்தி வேலை வாங்குவதாகக் கூறினர். எனினும் தங்களது அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் புறக்கணிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.அரசு அனுமதி பெற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்தி சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற நிலையில் அந்த தனியார் நிறுவனம் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து வந்ததாக வும் இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் திரண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் ஆன்ட்ரனி ஜெகதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அப்பகுதியிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதை காவல்துறை தடுத்தனர். அப்போது தொழிலாளர்கள், இன்ஸ்பெக்டர் ஆண்றனி ஜெகதா, தலைமைக்காவலர் சக்திவேல் மீது கல்வீசியும், கம்பாலும் தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடன் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று விசாரித்தனர்.
பின் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, இன்பதுரை எம்.எல்.ஏ. மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், சொந்த ஊருக்கு செல்வதற்காக பதிவு செய்துள்ள 3,344 வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் விரைவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்காக அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஒப்பந்த நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். அவர்களது சம்பளப் பணத்தை உடனடியாக ஒப்பந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.தற்போது மாநில முதல்வர் காயமடைந்த காவல்துறையினருக்கு இழப்பீடு வழங்கி உத்தரவு.
கருத்துகள்