குனியமுத்தூரில் ஐந்து பேரோடு வறுமையில் பிறந்த சிறுவனின் அப்பா குடிகாரர். அம்மாதான் கூலி வேலை ஐந்து குழந்தைகள் பல நாள் உணவு இல்லாமல் பச்சைத் தண்ணீர் குடித்துக் குழந்தைகள் படுத்தார்கள். அதில் ஒருவனாக வளர்ந்த அந்த ராஜா சேது முரளி பசியின் கொடுமையை நன்றா கவே அறிந்தவர் அனுபவித்தவர்.
`பசியாற சோறு!’ இப்படி ஒரு பெயரை தனது செயலுக்கு சூட்டிக்கொண்டார் ராஜா சேது முரளி.ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழல ஆரம்பித்த இந்த கோயமுத்தூர் ஆட்டோ(தானி)க் காரர் முதலில் கல்யாண வீடுகளி லும், விசேஷ வீடுகளிலும் மீதமாகும் உணவை வீணாக விடாமல் சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு வெளியூரி லிருந்து வந்து சிகிச்சைக்குத் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு வழங்க ஆரம்பித்தார்.
'பசியாற சோறு’ என்கிற பெயரில் விநியோகித்து வந்த ராஜாசேது முரளியின் சேவை கோவை மக்களுக்குப் பிடித்துப்போய்விட, அவரிடம் வீணாகும் உணவுகளை மட்டுமல்லாமல் பணமாகவும், பொருளாகவும் கொடுத்து ஏழைகளுக்கு உதவச் சொல்ல ஆரம்பித்தார்கள். யார் யார்.. எவ்வளவு கொடுத்தார்கள்? அதில் என்ன பொருள் வாங்கப்பட்டுள் ளது, அவை யாருக்குக் கொடுக்கப் படுகிறது என்கிற விவரங்களை யெல்லாம் தானே பேசி வீடியோ வாக எடுத்துச் சம்பந்தப்பட்டவர் களுக்கு அனுப்பிவிட்டு சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது வெளியிடுகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவது, வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது, ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது என ராஜா சேதுமுரளி யின் சேவை விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
நடுவில் திருமணம் நடந்தது. குடும்பத்தைக் கவனிக்காமல் சமூக சேவை செய்யும் கணவரிடம் கருத்துவேறுபாடு தோன்றவே திடீர் என மனைவி இவரை விட்டுப் பிரிந்து போய்விட்டார். கூடப் பிறந்தவர்களும் தனித்தனியாக வாழ்க்கைப் பாதையில் போக, வீட்டில் இவரும் அம்மாவும் தனித்து விடப்பட
"மிச்ச வாழ்க்கையைப் பிறருக்குப் பயனுள்ளதா மாத்தணும்னு நினைச்சேன். கோவை அரசு மருத்துவமனையில் சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுவங்க ளைப் பார்க்கும் போது மனசு உருக கல்யாண வீடுகள்லயும், விசேஷ வீடுகள்லயும் எவ்வளவோ உணவு மிச்சமாகுது அதை வீண் பண்ணா ம இவங்களுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கும் லன்னு தோணுச்சு. என்கிட்ட ஆட்டோவும் இருக்கிறதால அது ரொம்ப சுலபமாக இருந்துச்சு. நான் போய்கேட்டா யாரும் இல்லை’ன்னு சொல்லாம மீதமாகுற உணவுகளைக் கொடுத்தாங்க... அதுல ஆரம்பிச்ச பயணம்தான் இந்தப் பசியாற சோறு. ஏழைகளின் வயிறு நிறைஞ்சா.என் மனசு நிறையும்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜா சேது முரளி.
'நான் கடவுள்' உட்பட பத்து திரைப்படங்களிலும் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ள இவர்
இப்போதய ஊரடங்கு நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறா ரென இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச பேசும் போது கூட பல ஏழைக் குடும்பங் களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறார். 25 கிலோ 10 மூட்டை அரிசியை ஆட்டோவில் ஏற்றி வந்து பிரித்துப் பல வறிய மக்களுக்கு கொடுத்துக் கொண்டி ருந்தவர் இதைவிட முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டிருக் கிறேன் என்ற தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நடிப்பில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர் ஆதலால் இப்போது கொரானா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கோவை மாநகரில் கிராமம் கிராமமாகச் சென்று வேடம் தரித்து ஊரடங்கின் அவசியத்தையும் சமூக விலகலை யும் வலியுறுத்துவதோடு தேவை யற்று யாரும் ஊர் சுற்றாதீர்கள் என்பதை பிரச்சாரம் செய்கிறார்.
சமூகத்தில் இப்படித்தான் சிலபேர். தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். நாம் கவனிக்க மறந்தாலும் காலம் இவர்களைக் கவனித்து ஆவணப்படுத்தத் தவறுவதில்லை.ஆம். 'நம்ம ஊரு கோவை' என்ற அமைப்பு "கோவையின் கெத்து" என 12 பேரை பெருமைப்படுத்தியது. அவர்களில் ஒருவர் நம்ம ராஜா சேது முரளி. இவரோடு நீங்களும் பேசி உதவ: 93809 05800 நாம் தரும் செய்தி.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்