முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குனியமுத்தூரில் ஏழை மக்கள் பசிக்குச் சோறிடும் ஆட்டோ

குனியமுத்தூரில் ஐந்து பேரோடு வறுமையில் பிறந்த சிறுவனின் அப்பா குடிகாரர். அம்மாதான் கூலி வேலை  ஐந்து குழந்தைகள் பல நாள் உணவு  இல்லாமல் பச்சைத் தண்ணீர் குடித்துக் குழந்தைகள் படுத்தார்கள். அதில்  ஒருவனாக வளர்ந்த அந்த ராஜா சேது முரளி பசியின் கொடுமையை நன்றா கவே அறிந்தவர்  அனுபவித்தவர். 
`பசியாற சோறு!’ இப்படி ஒரு பெயரை தனது செயலுக்கு சூட்டிக்கொண்டார் ராஜா சேது முரளி.ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழல ஆரம்பித்த இந்த கோயமுத்தூர் ஆட்டோ(தானி)க் காரர்  முதலில் கல்யாண வீடுகளி லும், விசேஷ வீடுகளிலும் மீதமாகும் உணவை வீணாக விடாமல் சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு வெளியூரி லிருந்து வந்து சிகிச்சைக்குத் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு வழங்க ஆரம்பித்தார். 
'பசியாற சோறு’ என்கிற பெயரில் விநியோகித்து வந்த ராஜாசேது முரளியின் சேவை கோவை மக்களுக்குப் பிடித்துப்போய்விட, அவரிடம் வீணாகும் உணவுகளை மட்டுமல்லாமல் பணமாகவும், பொருளாகவும் கொடுத்து ஏழைகளுக்கு உதவச் சொல்ல ஆரம்பித்தார்கள். யார் யார்.. எவ்வளவு கொடுத்தார்கள்? அதில் என்ன பொருள் வாங்கப்பட்டுள் ளது, அவை யாருக்குக் கொடுக்கப் படுகிறது என்கிற விவரங்களை யெல்லாம் தானே பேசி வீடியோ வாக எடுத்துச் சம்பந்தப்பட்டவர் களுக்கு அனுப்பிவிட்டு சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது  வெளியிடுகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவது, வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது, ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது என ராஜா சேதுமுரளி யின் சேவை விரிவடைந்து கொண்டே இருக்கிறது.  
நடுவில் திருமணம் நடந்தது. குடும்பத்தைக் கவனிக்காமல் சமூக சேவை செய்யும் கணவரிடம் கருத்துவேறுபாடு தோன்றவே திடீர் என மனைவி இவரை விட்டுப் பிரிந்து போய்விட்டார். கூடப் பிறந்தவர்களும் தனித்தனியாக வாழ்க்கைப் பாதையில் போக, வீட்டில் இவரும் அம்மாவும் தனித்து விடப்பட 
"மிச்ச வாழ்க்கையைப் பிறருக்குப் பயனுள்ளதா மாத்தணும்னு நினைச்சேன். கோவை அரசு மருத்துவமனையில் சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுவங்க ளைப் பார்க்கும் போது மனசு உருக கல்யாண வீடுகள்லயும், விசேஷ வீடுகள்லயும் எவ்வளவோ உணவு மிச்சமாகுது அதை வீண் பண்ணா ம இவங்களுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கும் லன்னு தோணுச்சு. என்கிட்ட ஆட்டோவும் இருக்கிறதால அது ரொம்ப சுலபமாக இருந்துச்சு. நான் போய்கேட்டா யாரும் இல்லை’ன்னு சொல்லாம மீதமாகுற உணவுகளைக் கொடுத்தாங்க... அதுல ஆரம்பிச்ச பயணம்தான் இந்தப் பசியாற சோறு. ஏழைகளின் வயிறு நிறைஞ்சா.என் மனசு நிறையும்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜா சேது முரளி.
'நான் கடவுள்' உட்பட பத்து திரைப்படங்களிலும் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ள இவர்
இப்போதய ஊரடங்கு நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறா ரென இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச பேசும் போது கூட பல ஏழைக் குடும்பங் களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறார். 25 கிலோ 10 மூட்டை அரிசியை ஆட்டோவில் ஏற்றி வந்து பிரித்துப் பல வறிய மக்களுக்கு கொடுத்துக் கொண்டி ருந்தவர் இதைவிட முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டிருக் கிறேன் என்ற தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நடிப்பில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர் ஆதலால் இப்போது கொரானா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கோவை மாநகரில் கிராமம் கிராமமாகச் சென்று வேடம் தரித்து ஊரடங்கின் அவசியத்தையும் சமூக விலகலை யும் வலியுறுத்துவதோடு தேவை யற்று யாரும் ஊர் சுற்றாதீர்கள் என்பதை பிரச்சாரம்  செய்கிறார்.
சமூகத்தில் இப்படித்தான் சிலபேர். தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். நாம் கவனிக்க மறந்தாலும் காலம் இவர்களைக் கவனித்து ஆவணப்படுத்தத் தவறுவதில்லை.ஆம். 'நம்ம ஊரு கோவை' என்ற அமைப்பு "கோவையின் கெத்து" என 12 பேரை பெருமைப்படுத்தியது. அவர்களில் ஒருவர் நம்ம ராஜா சேது முரளி. இவரோடு நீங்களும் பேசி உதவ: 93809 05800 நாம் தரும் செய்தி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த