முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்துறை அமைச்சர் கோவிட்-19 சமாளிப்பது குறித்து பிராந்திய மூத்த அதிகாரிகளுடன் ஆயத்தநிலை ஆய்வு

கோவிட்-19 சமாளிப்பதற்கான ஆயத்த நிலைகள் குறித்து தில்லி தலைநகரப் பிராந்திய மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வதில் தில்லி – தேசிய தலைநகர்ப் பகுதியில் (NCR) ஒருமித்த செயல்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா வலியுறுத்தினார். கோவிட்-19 சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலை குறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த திரு அமித் ஷா, என்.சி.ஆர். பிராந்தியத்தில் நெருக்கமான நகர்ப்புறக் கட்டமைப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த வைரஸ் பிரச்சினையை சமாளிக்க தில்லி மற்றும் என்.சி.ஆர். பிராந்திய அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், நோய்த் தாக்குதல் உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். லட்சிய இலக்குடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார். நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல் தலைமையிலான நிபுணர் குழு, கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.2,400 என நிர்ணயித்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இதுபோன்ற பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்தால், உள்ளார்ந்த ஆலோசனைகளுடன் அந்தக் கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். கோவிட்-19 படுக்கைகள் மற்றும் சிகிச்சைக்கான கட்டணங்களையும் இந்தக் குழு நிர்ணயித்துள்ளதாக கூட்டத்தில் திரு அமித்ஷா கூறினார். ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தக் கட்டணங்களை என்.சி.ஆர். பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பின்பற்றலாம் என்றார் அவர்.      புதிய ரேப்பிட் ஆன்டிஜென் நடைமுறையின்படி கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நடைமுறையில், பரிசோதனைத் திறன் அதிகரிக்கும் என்றும், நோய் அறிகுறியை விரைவாகக் கண்டறிந்து, ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.      கோவிட்-19 படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு  மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் குறித்த தகவல்களையும், ஆதார வளங்களை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் 2020 ஜூலை 15ஆம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல்களை அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகளை திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார். வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் தேசிய தலைநகரப் பிராந்தியத்திற்கு, பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க இது உதவியாக இருக்கும் என்றார் அவர்.      வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் என்.சி.ஆர். பிராந்திய நிர்வாகங்களுக்கு வேண்டிய அனைத்து சாத்தியமான உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என திரு அமித்ஷா உறுதியளித்தார். இந்த ஆய்வில் தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள், தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தில்லி -என்.சி.ஆர். மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...