முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேக் இன் இந்தியா சுயசார்புத் திட்டம் பிரபலமாக்க சொந்த நாட்டை தெரிவிக்க வேண்டும்


‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா’ திட்டங்களைப் பிரபலப்படுத்த ஜிஇஎம் தளத்தில் விற்பனையாளர்கள் சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகிறது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் சிறப்பு துணை அமைப்பான அரசு மின்னணு சந்தை இடம் (ஜிஇஎம்), அனைத்து புதிய உற்பத்தி பொருள்களை விற்பனை செய்பவர்கள் இதற்காக பதிவு செய்யும் போது, தங்களது நாட்டின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்களது பொருள்களைப் பதிவேற்றம் செய்தவர்களும், அவ்வப்போது தங்களது சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்றும், இதனைச் செய்யாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் ஜெம் எச்சரித்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா ‘இயக்கங்களைப் பிரபலப்படுத்துவதற்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருள்களில் உள்ளூர் பொருள்களின் பங்கு என்ன என்பதைக் குறிக்கும் வகையிலான பிரிவை ஜெம் (GeM) ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி, சந்தைஇடத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும், அதன் தயாரிப்பு நாடு, உள்ளூர்ப் பொருள்களின் சதவீத அளவு ஆகியவை இடம் பெற்றிருக்கும். மிகவும் முக்கியமாக, ‘மேக் இன் இந்தியா’ வடிகட்டிக்கான வசதி தளத்தில் இடம் பெற்றுள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீத உள்ளூர் உள்ளீடு இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து வாங்குபவர்கள் பொருள்களைத் தேர்வு செய்ய முடியும். ஏல முறைகளில், வாங்குபவர்கள் தரம் 1 உள்ளூர் விநியோகஸ்தர்களுக்காக ( உள்ளூர் உள்ளீடு 50 சதவீதத்திற்கும் மேல்) ஒதுக்கிக் கொள்ளலாம். இந்திய ரூபாய் மதிப்பில் 200 கோடிக்கு குறைவான ஏலங்களில், தரம்1, தரம் 2 உள்ளூர் விநியோகஸ்தர்கள் ( உள்ளூர் உள்ளீடு முறையே 50% க்கும் அதிகம், 20%க்கும் அதிகம்) மட்டும் தகுதி பெறுவர். இதில் தரம் 1 விநியோகஸ்தர் கொள்முதல் முன்னுரிமை பெறுவார். ஜெம் தளத்தின் உள்ளூர் உள்ளீட்டுக்கான அம்சங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெம்முறை செயல்பாட்டுக்கு வந்தது முதல், ‘மேக் இன் இந்தியா’ முயற்சியைப் பிரபலப்படுத்துவதில் அது தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ முறையை அமல்படுத்தும் அதேநேரத்தில், பொது கொள்முதலில் உள்ளூர் சிறிய விற்பனையாளர்கள் பதிவு செய்வதற்கான வசதி சந்தை இடத்தில் உள்ளது. அந்த வகையில், இந்திய அரசின் எம்எஸ்இ கொள்முதல் முன்னுரிமை கொள்கைகள் உண்மையான உணர்வுடன் இதில் வெளிப்படுகிறது. கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு, அரசு அமைப்புகளுக்கு, உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இத்தருணத்தில், ஜெம், விரைவான, திறன் மிக்க, வெளிப்படையான, செலவு குறைவான கொள்முதலுக்கு வகை செய்கிறது. அரசு பயனாளர்கள் ஜெம் மூலம் கொள்முதல் செய்வதற்கு அங்கீகரிக்கப்படுள்ளனர். இதற்காக மத்திய நிதி விதிமுறைகள் ,2017-இல் புதிய விதியான 149 சேர்க்கப்பட்டதன் மூலம், நிதி அமைச்சகம் இதனைக் கட்டாயமாக்கியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...