முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேக் இன் இந்தியா சுயசார்புத் திட்டம் பிரபலமாக்க சொந்த நாட்டை தெரிவிக்க வேண்டும்


‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா’ திட்டங்களைப் பிரபலப்படுத்த ஜிஇஎம் தளத்தில் விற்பனையாளர்கள் சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகிறது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் சிறப்பு துணை அமைப்பான அரசு மின்னணு சந்தை இடம் (ஜிஇஎம்), அனைத்து புதிய உற்பத்தி பொருள்களை விற்பனை செய்பவர்கள் இதற்காக பதிவு செய்யும் போது, தங்களது நாட்டின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்களது பொருள்களைப் பதிவேற்றம் செய்தவர்களும், அவ்வப்போது தங்களது சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்றும், இதனைச் செய்யாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் ஜெம் எச்சரித்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா ‘இயக்கங்களைப் பிரபலப்படுத்துவதற்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருள்களில் உள்ளூர் பொருள்களின் பங்கு என்ன என்பதைக் குறிக்கும் வகையிலான பிரிவை ஜெம் (GeM) ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி, சந்தைஇடத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும், அதன் தயாரிப்பு நாடு, உள்ளூர்ப் பொருள்களின் சதவீத அளவு ஆகியவை இடம் பெற்றிருக்கும். மிகவும் முக்கியமாக, ‘மேக் இன் இந்தியா’ வடிகட்டிக்கான வசதி தளத்தில் இடம் பெற்றுள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீத உள்ளூர் உள்ளீடு இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து வாங்குபவர்கள் பொருள்களைத் தேர்வு செய்ய முடியும். ஏல முறைகளில், வாங்குபவர்கள் தரம் 1 உள்ளூர் விநியோகஸ்தர்களுக்காக ( உள்ளூர் உள்ளீடு 50 சதவீதத்திற்கும் மேல்) ஒதுக்கிக் கொள்ளலாம். இந்திய ரூபாய் மதிப்பில் 200 கோடிக்கு குறைவான ஏலங்களில், தரம்1, தரம் 2 உள்ளூர் விநியோகஸ்தர்கள் ( உள்ளூர் உள்ளீடு முறையே 50% க்கும் அதிகம், 20%க்கும் அதிகம்) மட்டும் தகுதி பெறுவர். இதில் தரம் 1 விநியோகஸ்தர் கொள்முதல் முன்னுரிமை பெறுவார். ஜெம் தளத்தின் உள்ளூர் உள்ளீட்டுக்கான அம்சங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெம்முறை செயல்பாட்டுக்கு வந்தது முதல், ‘மேக் இன் இந்தியா’ முயற்சியைப் பிரபலப்படுத்துவதில் அது தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ முறையை அமல்படுத்தும் அதேநேரத்தில், பொது கொள்முதலில் உள்ளூர் சிறிய விற்பனையாளர்கள் பதிவு செய்வதற்கான வசதி சந்தை இடத்தில் உள்ளது. அந்த வகையில், இந்திய அரசின் எம்எஸ்இ கொள்முதல் முன்னுரிமை கொள்கைகள் உண்மையான உணர்வுடன் இதில் வெளிப்படுகிறது. கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு, அரசு அமைப்புகளுக்கு, உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இத்தருணத்தில், ஜெம், விரைவான, திறன் மிக்க, வெளிப்படையான, செலவு குறைவான கொள்முதலுக்கு வகை செய்கிறது. அரசு பயனாளர்கள் ஜெம் மூலம் கொள்முதல் செய்வதற்கு அங்கீகரிக்கப்படுள்ளனர். இதற்காக மத்திய நிதி விதிமுறைகள் ,2017-இல் புதிய விதியான 149 சேர்க்கப்பட்டதன் மூலம், நிதி அமைச்சகம் இதனைக் கட்டாயமாக்கியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்