முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாரணாசி வளர்ச்சிப் பணிகளின் ஆய்வுக்கூட்டம் பிரதமர் தலைமையில்


வாரணாசியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பிரதமர் தலைமையில் ஆய்வுக்கூட்டம். வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து, மாண்புமிகு பிரதமர் தலைமையில் இன்று காணொளிக்  காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆளில்லாத ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த வீடியோ மூலம் விளக்கப்பட்டது.  கொவிட் தொற்றுப் பராமரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உ.பி. அரசின் அமைச்சரும், வாரணாசி தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. நீலகந்த் திவாரி, மற்றொரு உத்திரப்பிரதேச அமைச்சரும், வாரணாசி வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. ரவீந்திர ஜெய்ஸ்வால்,  ரொஹ்னியா எம்எல்ஏ திரு.சுரேந்திர நாராயண் சிங், வாரணாசி கன்டோன்மென்ட் எம்எல்ஏ திரு. சவுரப் ஶ்ரீவஸ்தவா, செவப்புரி எம்.எல்.ஏ. திரு. நீல் ரத்தன் நீலு, திரு. அசோக் தவான் ,எம்.எல்.சி. திரு. லட்சுமன் ஆச்சார்யா எம்.எல்.சி. ஆகிய மக்கள் பிரதிநிதிகள் , வாரணாசிப் பிரிவு ஆணையர் திரு. தீபக் அகர்வால், வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் திரு. கவுசல் ராஜ் சர்மா, வாரணாசி மாநகராட்சி ஆணையர் திரு. கவுரங் ரதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் காணொளிக் காட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர். காசி விஸ்வநாதம் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், காசி விஸ்வநாத் பரிசார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இத்தகைய அனைத்து பழைய ஆலயங்களும் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். வரலாற்றுச் சிறப்பு மற்றும் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைப் பராமரிக்க நிபுணர்களின் உதவியைக் கோரவேண்டும். காசி விஸ்வநாத் கோவிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்களுக்கு அக்கோவிலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் காட்ட இத்தகைய கோவில்களின் காலம் என்ன என்பது குறித்துக் கண்டறிய வேண்டும். காசி விஸ்வநாத் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பயணப் பாதை வரைபடத்தை காசி விஸ்வநாத் அறக்கட்டளை தயாரிப்பதுடன், உரிய சுற்றுலா வழிகாட்டிகளை அமர்த்த வேண்டும்.   வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் விரிவான ஆய்வை மேற்கொண்டார். ரூ.8000 கோடி மதிப்பில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்கள் வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துக் கூறப்பட்டது. மருத்துவமனைக் கட்டடங்கள், தேசிய நீர்வழிகள், வட்டச்சாலைகள், புறவழிச்சாலைகள், இந்திய-ஜப்பான் கூட்டு முயற்சியில் கட்டப்படும் சர்வதேச மாநாட்டு மையம் ‘ருத்ராக்‌ஷ்' ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். குறிப்பிட்ட கால வரம்புக்குள் மேம்பாட்டுப் பணிகளை நிறைவு செய்ய, வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், உயர்தரத்தைப் பராமரிக்குமாறும் அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார். அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்க புதுப்பிக்கத்தக்க இயலாத எரிசக்தியை உரிய அளவுக்குப் பயன்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டார். வாரணாசி மாவட்டம் முழுவதும், வீடுகளுக்கும் , தெரு விளக்குகளுக்கும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும். காசியில் சுற்றுலா மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கப்பல் சுற்றுலா, ஒலி, ஒளிக்காட்சி, கித்கியா, தசாஸ்வமெத் மலைத்தொடர்களைப் பராமரித்தல்,  கங்கை ஆரத்திக் காட்சிகளை ஒலி, ஒளி வடிவில்  திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. காசி உலகப் பாரம்பரியத்தின் களஞ்சியங்களில் மிக முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தி , பிரச்சாரம் மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். புத்தமதம் பின்பற்றப்படும் ஜப்பான், தாய்லாந்து நாடுகளில் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது போல, வாரம் முழுவதும் நடைபெறும் விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் மக்களின் தீவிரப் பங்கேற்புடன் கூடிய கவுரவப் பாதையை உருவாக்கி, காசியின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றுவதற்கு உரிய கருப்பொருளுடன் கூடிய மாதிரிச் சாலையை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அவர்  உத்தரவிட்டார். காசியை சுகாதாரமான, தூய்மையான அனைத்து அம்சங்களும் கொண்ட சுற்றுலாத்தலமாக உருவாக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். முழு சுற்றுப்புறத்தையும் ஆக்கபூர்வமான, சுகாதாரமானதாக மாற்றும் குறிக்கோளை எட்ட, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்ற நிலையை ஏற்படுத்துதல், குப்பைகளைப் பெருக்குதல் மற்றும் தூய்மைப்பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்துதல், வீடு ,வீடாகச் சென்று 100 % கழிவுகளைச் சேகரித்தல் ஆகிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.  வாரணாசியில் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் இணைப்புநிலை உள்கட்டமைப்பு குறித்து விளக்கக் காட்சி எடுத்துரைத்தது. வாரணாசியை ஹால்டியாவுடன் இணைக்கும் தேசிய நீர்வழி மையமாக வாரணாசி மாற வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பு, சரக்குக் கப்பல் சேவை மற்றும் சரக்குப் போக்குவரத்து (முக்கியத் துறைமுக நகரங்களில் செய்யப்படுவது போல்) ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத் திட்டமிட வேண்டும். அதி நவீன ரயில், சாலை, நீர் மற்றும் வான் இணைப்பு நிலையை வழங்கும் முன்னணி மாநகரங்களில் ஒன்றாக காசி மாறும் விதத்தில், லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும் என்று  அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.  சுய-சார்பு இந்தியா அறிவிப்புகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பிரதமர், இந்தத் திட்டத்தின் பலன்கள் மக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தெரு வியாபாரிகளுக்கான பிரதமரின் சுவநிதித் (PM SVANidhi) திட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பணமில்லாப் பரிவர்த்தனைக்கு அனைத்து தெரு வணிகர்களும் மாற உதவும் வகையில், தேவையான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். பிரதமரின் சுவநிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிணையற்ற கடன்களின் அதிகபட்ச பலனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களின் வணிக மற்றும் கடன் விவரம் டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட வேண்டும்.  விவசாயிகளை அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் வருவாயை அதிகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கக் கூடிய வலிமை தேன் மெழுகுக்கு இருப்பதை சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் பொருள்களுக்கு சிறந்த விற்பனையை உறுதி செய்யவும், அவற்றை ஏற்றுமதிக்கான தயார் நிலையில்  வாரணாசியிலேயே உருவாக்கவும், பொதி (packaging) நிறுவனம் ஒன்றை வாரணாசியில் விரைந்து அமைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்துடன் (வணிக அமைச்சகம்) இணைந்து காய்கறிகள் மற்றும் மாம்பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.  குப்பையில் இருந்து மின்சாரம் எடுப்பதன் மூலமோ அல்லது குப்பையை உரமாக மாற்றுவதன் மூலமோ குப்பையிலிருந்து வருவாயை உண்டாக்கும் வகையில், அதை விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் பிரபலப்படுத்தவும், ஊக்குவிக்கவும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில், செலவில்லா வேளாண்மையின் (zero budget farming) கண்ணுக்குத் தெரிந்த மற்றும் புலப்படாத நன்மைகளை எடுத்துரைத்து, அதை விவசாயிகளின் மத்தியில் பரப்பி, பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  தற்போதைய கொவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தயார்நிலை குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பரிசோதனை, கண்டறிதல் மற்றும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை உறுதி செய்தலில் ஆரோக்கியசேது செயலியின் விரிவான மற்றும் சிறப்பான உபயோகத்தைப் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். உணவு, தங்குமிடம் மற்றும் தனிமைப்படுத்துதல் வசதிகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிகளும் பாராட்டப்பட்டன.  ஊர் திரும்பும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் குறித்த விவரங்களை சரியான முறையில் முன்னுரிமை அளித்து சேகரிக்குமாறு உத்தரவிட்ட அவர், அவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் லாபகரமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார். பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் நெருக்கடி காலத்தில் மாநில அரசின் தலைமையிலான கொவிட் நிவாரணத் திட்டங்களின் நேர்மறைத் தாக்கத்தைப் பற்றியும் பின்னூட்டம் பெறப்பட்டது. ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, சமூக நலம், விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் திறன் களங்கள் ஆகிய ஒன்பது முக்கியத் துறைகளில் வாரணாசி மாவட்டத்தை தன்னிறைவடையச் செய்யும் தனது லட்சியத்தைப் பிரதிபலிக்கும் நிதிஆயோக்கால் தயாரிக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.  அங்கன்வாடி மையங்களின் சமூக இயக்கமாக ஊட்டச்சத்தை ஊக்கப்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு உணவளிப்பதிலும் அவர்களின் ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் அளவை அதிகரிப்பதிலும் முடிந்த அளவு பெண்களையும், சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும் ஆகியவற்றை குறித்தும் அவர் வலியுறுத்தினார். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்துக் கொள்வது, ஆரோக்கியமான குழந்தைப் போட்டியை ஏற்பாடு செய்வது மற்றும் தாய்ப்பால் இல்லாத ஆரம்பகால உணவுகளில் பல்வேறு உணவு வகைகளை உருவாக்குவது ஆகியவற்றைக் குறித்தும் பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்.  வாரணாசி மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களின் வேகத்தை அதிகப்படுத்துதல் குறித்து பிரதமர் கவனம் செலுத்தினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்