முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கருத்துக்கேட்பு அழைப்பு மையம் துவக்கம்

கோவிட்-19 காலத்தில் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தைத் தொடங்கி வைத்து குடிமக்களுடன் நேரில் கலந்துரையாடினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங். பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தை மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மூலம், குறைகள் தீர்க்கப்பட்ட குடிமக்களுடன் மத்திய அமைச்சர் நேரில் கலந்துரையாடினார். இதுவரை கோவிட்-19 தொடர்பான பொதுமக்களின் ஒரு லட்சம் குறைகளுக்கு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தீர்வு கண்டுள்ளதற்கு டாக்டர்.ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். “சாதாரண மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அதிக அளவிலான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பிரதமர் மோடியின் தலைமை ஊக்குவித்து வருகிறது,” என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். கோவிட்-19 பரவல் காலத்தில் குறைகளைத் தெரிவித்த குடிமக்களுடன் மூத்த அமைச்சர் ஒருவர் உரையாடுவது இதுவே முதல் முறையாகும். இது பொது மக்களின் குறைகளை சிறப்பான முறையில் தீர்ப்பதுடன், மக்களிடம் கருத்துக்களைப் பெறும் வழிமுறையையும் செயல்படுத்த மற்ற மத்திய அமைச்சர்களுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக பிஎஸ்என்எல்-லுடன் இணைந்து அழைப்பு மையங்களை புவனேஷ்வர், குவஹாத்தி, ஜாம்ஷெத்பூர், வதோதரா, அகமதாபாத், லக்னோ, அஜ்மீர், குண்டூர், கோயம்புத்தூர், குண்டாகல் ஆகிய பகுதிகளில் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்படுத்துகிறது. இதில், 1,406 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த மையங்கள் மூலம், மார்ச் 30, 2020 முதல் மே 30, 2020 வரையான காலத்தில் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொடர்பான 1.28 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும். இந்த மையங்களில் பணியாற்றுவோர் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த தேவையான பயிற்சிகள், ஜூன் 9-10, 2020-இல் நிறைவடைந்தது. இந்த மையங்கள், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, கன்னடம், கொங்கனி, மலையாளம், தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காளி, அசாமி மற்றும் ராஜஸ்தானி மொழிகளில் செயல்படும். இந்த நிகழ்ச்சியில், கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையத்தில் மூன்று நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்பட்ட 4 பேருடன் டாக்டர். ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். டாக்டர். ஜிதேந்திர சிங்குடன் கலந்துரையாடியவர்களில் முதலாவதாக, கர்நாடகாவின் பிஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.ரேணுகா வி.பரசப்பாகோல், கனரா வங்கியிலிருந்து பணம் திரும்ப வரவேண்டும் என்று கோரியிருந்தார். இந்தக் குறையை நிதிச்சேவைகள் துறை தீர்த்து வைத்தது. இரண்டாவதாக, முதிர்ச்சியடைந்த மாதாந்திர வருவாய் திட்ட முதலீட்டுத் தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதிவாசி திரு.கோர்தன்பாய் ஜெதாபாய் விடுத்த கோரிக்கையை அஞ்சல்துறை தீர்த்து வைத்தது. மூன்றாவதாக, தனது மகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த திரு.லட்சுமிநாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை எய்ம்ஸ் மருத்துவமனை தீர்த்து வைத்தது. நான்காவதாக, சென்னையைச் சேர்ந்த திரு.மிரிதின் ஜெயன், சேமிப்புகளை மாதாந்திர தவணைகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனுவில் கொடுத்திருந்த கோரிக்கையை அஞ்சல்துறை ஏற்றுக் கொண்டது. பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையம் குறித்து அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்டதாகவும், குறைகளை உரிய நேரத்தில் தீர்த்து வைத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டாக்டர்.ஜிதேந்திர சிங்கிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பெருமளவில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆளுமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இந்தியாவில் குறைகளைத் தீர்ப்பதில் விரிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக அளவில் குறை தீர் மனுக்களைப் பெறும் 20 அமைச்சகங்கள்/துறைகளில் குறைகளைத் தீர்ப்பதற்கான கடைசி கட்ட அதிகாரிகளை நியமித்தது, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையத்துடன் மாநில/யூனியன் பிரதேசங்களின் குறை தீர் வலைதளங்களை ஒருங்கிணைத்தது மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையங்கள் அமைத்தது உள்ளிட்ட மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய குடிமக்களை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலக வாய்ப்புகளை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை வரும் நாட்களிலும் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் குறைகளை வெற்றிகரமாக தீர்வு கண்டது குறித்த விவரங்களை தொகுத்து வெளியிட வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை டாக்டர்.ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். இதனை வெளியிடுவதன் மூலம், தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு ஆர்வமுடன் உள்ளது என்ற நம்பிக்கையை குடிமக்கள் மத்தியில் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்