முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பு குறியீடுகளில் மேம்பாடு

பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பு - பொருளாதாரக் குறியீடுகளில் மேம்பாடு. 'உயிரோடு இருந்தால் உலகம் உங்கள் வசம்' என்னும் உயிர்களைக் காப்பாற்றும் அவசரத் தேவையால் வழிநடத்தப்பட்டு, நாட்டில் கொவிட்-19 பரவலை ஆரம்ப கட்டங்களிலேயே தடுப்பதற்காக 24 மார்ச், 2020 அன்று முதல் 21 நாட்களுக்கு கடுமையான பொதுமுடக்கத்தை இந்தியா அமல்படுத்தியது. நாட்டின் சுகாதார மற்றும் பரிசோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பொதுமுடக்கக் காலம் வாய்ப்பளித்தது. தடமறிதல், சிகிச்சை மற்றும் தகவல் தெரிவித்தல் ஆகியவை தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுவதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் ஆகும்.   அதே சமயம், கடுமையான பொதுமுடக்கமும், சமூக விலகல் நடவடிக்கைகளும் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. உயிர்களுடன் சேர்த்து வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கான உத்தியை நோக்கி படிப்படியாக முன்னேறியதின் மூலம், ஜூன் 1 முதல் 'அன்லாக் இந்தியா' என்னும் தளர்வுகளை அமல்படுத்தும் திட்டம் தொடங்கி சேவைகளும், தொழில்களும் நாட்டில் மீண்டும் தொடங்கின. குறைந்தபட்ச பாதிப்புடன் பொருளாதாரத்துக்கு கூடிய விரைவில் புத்துயிர் அளிக்க, குறுகிய கால மற்றும் நீண்ட காலத்துக்கு தேவையான சரியான கொள்கை நடவடிக்கைகளை அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் படிப்படியாக எடுத்தன.   இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக வேளாண் துறை இருப்பதாலும், பருவமழை இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும், நாட்டின் பொருளாதாரம் சீரவடைதற்கு அது ஆதரவளிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அந்தத் துறையின் பங்களிப்பு மிகவும் பெரிதாக இல்லாத பட்சத்திலும் (தொழில் மற்றும் சேவைத் துறைகளோடு ஒப்பிடும் போது), வேளாண்மையை நம்பியிருக்கும் அதிக அளவிலான மக்களிடத்தின் அதன் வளர்ச்சி நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், செயல்திறன் மிகுந்த மதிப்பு சங்கிலிகளைக் கட்டமைப்பதிலும், விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்வதிலும், வேளாண் துறைக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மிக்க சீர்திருத்தங்கள் பெரிதும் பங்காற்றும்.   தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கத் தொடங்கிய இரண்டே மாதங்களில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்ததில் இருந்து இந்திய உற்பத்தித் துறையின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு, மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து, மற்றும் சில்லறை நிதிப் பரிவர்த்தனைகள் ஆகிய உண்மையான செயல் குறீயீடுகள் வளர்ச்சியை சந்தித்ததன் மூலம், பொருளதாரப் புத்தாக்கத்தின் ஆரம்பப் பசுமை அறிகுறிகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் தெரியத் தொடங்கின.   பொருளாதார குறியீடுகளில் மேம்பாடு வேளாண்மை  * விவசாயிகளிடம் இருந்து அரசு முகமைகள் கோதுமையை வாங்குவதில் 2012-13-இல் செய்யப்பட்ட முந்தைய சாதனையான 381.48 லட்சம் மெட்ரிக் டன்களை முறியடித்து, 16 ஜூன், 2020 அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 382 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கொவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலங்களில் சமூக விலகல் கட்டுப்பாடுகளின் கீழ் இந்த சாதனை செய்யப்பட்டது. 42 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ 73,500 கோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.   * சிறு வன உற்பத்தி பொருள்களுக்கான (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ், 16 மாநிலங்களில் சிறு வன உற்பத்தி பொருள்களின் கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு ரூ 79.42 கோடியைத் தொட்டது. கொவிட்-19 பெருந்தொற்று பழங்குடிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள துன்பமான காலகட்டத்தில் மிகவும் தேவையான மருந்தாக இது அமைந்தது.   * கரீப் பயிர்களை 13.13 மில்லியன் ஹெக்டேர்களில் 19 ஜூன் நிலவரப்படி விவசாயிகள் விதைத்துள்ளனர். எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி ஆகியவற்றின் பரப்பளவில் கடந்த ஆண்டின் இதே பருவத்தோடு ஒப்பிடும் போது இது 39 சதவீதம் அதிகமாகும்.   * வலிமையான வேளாண் துறையைக் குறிக்கும் வகையில், மே 2020-இன் படி உரங்களின் விற்பனை ஒரு வருடத்தில் 98 சதவீதம் உயர்ந்துள்ளது (40.02 லட்சம் டன்கள்).   உற்பத்தி   * ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் மேலாளர் குறியீடு (PMI) மே மாதத்தில் முறையே 30.8 மற்றும் 12.6 (ஏப்ரலில் முறையே 27.4 மற்றும் 5.4) என்ற அளவில் இருந்தன.   * ஏப்ரலில் (-) 24 சதவீதமாக இருந்த மின்சார நுகர்வின் சுருங்கிய வளர்ச்சி விகிதம், மே மாதத்தில் (-) 15.2 சதவீதமாகவும், ஜூனில் (ஜூன் 21 வரை) (-) 12.5 சதவீதமாகவும் இருந்தன. மின்சார நுகர்வு ஜூன் மாதத்தில் தொடர்ந்து மேம்பட்டு முதல் வாரத்தில் (-) 19.8 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் (-) 11.2 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் (-) 6.2 சதவீதமாகவும் இருந்தது.   * கடந்த வருடம் மற்றும் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது குறைவெனும் போதிலும், மின்-வழி ரசீதுகளின் மொத்த மதிப்பீட்டு மதிப்பு ஏப்ரல், 2020-த்துடன் (ரூ 3.9 லட்சம் கோடி) ஒப்பிடும் போது மே, 2020-இல் 130 சதவீதம்  (ரூ 8.98 லட்சம் கோடி) உயர்ந்திருந்தது. மாதம் முடிவதற்கு 11 நாட்கள் இருந்த நிலையில், ஜூன் 1 முதல் 19 வரையிலான மின்-வழி ரசீதுகளின் மதிப்பு ரூ 7.7 லட்சம் கோடியாக இருந்தது.   * நாட்டின் நுகர்வு மற்றும் உற்பத்திச் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் முக்கியக் குறியீடான பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு, ஏப்ரலின் 99,37,000 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடும் போது 47 சதவீதம் உயர்ந்து 1,46,46,000 மெட்ரிக் டன்களாக மே மாதத்தில் இருந்தது. தொடர்ந்து, பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு வளர்ச்சியின் குறைவு வருடாந்திர அளவில் ஏப்ரலின் (-) 45.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் மிகவும் குறைவாக (-) 23.2 ஆக இருந்தது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்லாக் 1.0-வின் ஒரு மாதத்துக்கு பிறகு, பெட்ரோலிய பொருள்களின் நுகர்வு ஜூன் மாதத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்