முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதவள மேம்பாட்டு அமைச்சக 15 வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டம்

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் 15-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டம் திரு.என்.கே.சிங் தலைமையிலான நிதிக்குழு இன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் சூழலில், ஆன்லைன் வகுப்புகள், கல்வி கற்பிக்க இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புதிய கற்பிக்கும் முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிப்பதற்காக இக்கூட்டம் அழைக்கப்பட்டது. கல்வித்துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதிக்குழுவிடம் திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் அவசியம் பற்றி, நிதிக்குழு ஏற்கனவே, பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை ஆகியவற்றுடன் விரிவான விவாதம் நடத்தியுள்ளது.   குறிப்பாக கோவிட்-19 காலத்தில், கல்வி பற்றிய பரிந்துரைகளை 2020-21 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் அளிப்பது தொடர்பாக, விவாதிக்கும் நோக்கத்துடன்  நிதிக்குழு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக, பின்வரும் விஷயங்களில், நிதிக்குழுவுக்குத் தெளிவு தேவைப்படுகிறது; வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்புகள் பற்றிய அளவிடக் கூடிய முடிவுகள் மற்றும் தலையீடுகள், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான கால வரையறை. மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக குழு அளித்துள்ள 7 குறியீடுகளைக் கண்காணிப்பது.   எப்சி- 15 விருது காலத்துக்கான கல்வித் திறனைக் கண்பாணிப்பதற்கான தர அளவீடுகள்     வரிசை எண். பொருள் தரம் (%) 1 3-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண்- அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்   10 2 3-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 10 3 5-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 10 4 5-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 10 5 8-ஆம் வகுப்பில் சராசரி மொழி மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 10 6 8-ஆம் வகுப்பில் சராசரி கணக்கு மதிப்பெண் - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 10 7 உயர் தொடக்கம் முதல் இடைநிலைக் கல்வி வரை, ஆடவர் மற்றும் மகளிர் இடையிலான மாறுதல் வேறுபாடு 40   கல்வியின் இந்த 7 சுட்டுப்பொருள்கள் பற்றி மாநில வாரியாக இலக்குகளை அமைச்சகம் தயாரித்துள்ளது. 2021-22 முதல் மாநிலங்களுக்கு ஊக்குவிப்பு வழங்க அமைச்சகம் ஏதாவது முன்னேற்பாடு நடவடிக்கைகளை தயாரித்துள்ளதா? எனக்காணுதல். கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புக்கு எதிராகப் போராட அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 20 லட்சம் கோடி நிதிச் சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்வி தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை குழு கருத்தில் கொண்டுள்ளது;   கோவிட் காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் கல்வி முறைகள்   இணையதள வசதி இல்லாதவர்களுக்கு கல்வி சென்றடைய சுவயம் பிரபா டிடிஎச் சேனல்களின் ஆதரவு. பள்ளிக்கல்வித் துறைக்கென ஏற்கனவே 3 சேனல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 12 சேனல்கள் சேர்க்கப்படும். நிபுணர்கள் வீடுகளில் இருந்தவாறு ஸ்கைப் வழியாக. இந்தச் சேனல்களில் நேரடியாகக் கலந்துரையாடும் அமர்வுகளை ஒளிபரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கல்வி அலைவரிசைகள் அதிக அளவில் சென்று சேரும் வகையில், டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற தனியார் டிடிஎச் இயக்குபவர்களுடன் ஒப்பந்தம்.  கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை சுவயம் பிரபா சேனல்களில் ஒளிபரப்ப, இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒருங்கிணைப்பு ( தினசரி 4 மணி நேரம்) மார்ச் 24 முதல் இன்று வரை திக்‌ஷா தளத்தை 61 கோடி பேர் பார்த்துள்ளனர். இ-பாடசாலா தளத்தில் 200 புதிய பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.   கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பங்குடன் கல்வி பிஎம் இவித்யா- உடனடியாகத் தொடங்கப்படவுள்ள டிஜிடல்/ஆன்லைன் கல்விக்கான பன்முறை அணுக்க நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ள அம்சங்கள்; மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பள்ளிக்கல்விக்கான திக்‌ஷா; அனைத்து வகுப்புகளுக்கான இ-உள்ளடக்கம், கியூஆர் கோட் வலுப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் ( ஒரு நாடு, ஒரு டிஜிடல் தளம்) 1 முதல் 12 வகுப்புகளுக்கான தலா ஒரு டிவி சேனல் ஒதுக்கீடு ( ஒரு வகுப்பு, ஒரு சேனல்) வானொலி, சமுதாய வானொலிகளை அதிகமாகப் பயன்படுத்துதல் பார்வையற்றோர், செவித்திறன் அற்றவர்களுக்கான சிறப்பு இ-உள்ளடக்கம் 2020 மே 30-ம் தேதி வாக்கில், ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி மனோதர்பன்- மனோபலம், உணர்வு ரீதியில் நலம் பெறுவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்களுக்கு உள ரீதியான ஆதரவு வழங்குவதற்கான முன்முயற்சி உடனடியாக துவக்கம் 3. பள்ளி, சிறு குழந்தை பருவம்  மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய தேசியப் பாடத்திட்டம் மற்றும் கல்வி வரையறை தொடங்கப்படும்; உலகம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுத் திறன் தேவைகள் ஒருங்கிணைப்பு. 4. 2025-ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு குழந்தையும் கற்றுக்கொள்ளும் மட்டத்தை அடைவது மற்றும் 5 தரத்தில்  பெறுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கம் 2020 டிசம்பரில் தொடங்கப்படும். பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலர் திருமிகு. அனிதா கார்வால் அளித்த விளக்கப்படத்தில், கோவிட்-19 தொற்று முன்னெப்போதும் கண்டிராத சுகாதார நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.  பள்ளிக்கல்வியையும் அது பாதித்துள்ளது எடுத்துக்காட்டப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கற்றலைத் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் பின்வரும் முயற்சிகளை துறை மேற்கொண்டுள்ளது; பிஎம் இ-வித்யா- பள்ளிக்கல்வி சுவயம் பிரபா டிவி அலைவரிசைகள் மூலம் டிஜிடல் கற்றல் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் டிஜிடல் புத்தகங்கள் மற்றும் இ-உள்ளடக்கத்துக்கான இ-பாடசாலா சுவயம் தளம் ஆபரேசன் டிஜிடல் வாரியம் தேசிய திறந்த நிலைக் கல்வியியல் வளங்கள் கருவூலம் நீண்டகாலக் கற்றல் உத்தி பற்றிய கற்பனை மற்றும் வடிவ மின்ணணுக் கல்வி டிஜிட்டல் கல்வி சென்று சேராத அனைத்து உயர் தொடக்கப்பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில் ஐசிடி வசதிகளை அளித்தல் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்பு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள பிஜிஐ, திறமையை மதிப்பிடும் கருவியாகப் பயன்படுத்தப்படும். பிஜிஐ மதிப்பிடும் முடிவுகள், கற்றல் முடிவுகள் அளவீடு ( 6 குறியீடுகள்), இடைநிலைக் கல்விக்கு பெண்கள் மாறும் மட்டம் ( ஒரு குறியீடு) 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்