முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறந்தாங்கி ஏழு வயதுச் சிறுமியைக் கொன்ற கொடூரக் கொலைகாரனைக் கண்டுபிடித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஏழு வயது சிறுமி கொலையில் ஒருவன் கைது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏழு வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஒருவனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கி அருகேவுள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பை சேர்ந்த நாகூரானின் மகளான 7 வயதுச் சிறுமி நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடியபோது, அங்குள்ள கண்மாயில் நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்ட உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததையடுத்து, கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், கொலையாளி யார், எப்படி கொலை செய்யப்பட்டாள் என்பது தெரியாததால் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தினர். சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த 3 பேரில் ஒருவனான மாரிமுத்துவின் மகன் ராஜாவை கைது செய்த காவல்துறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும், 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றினால்தான் சிறுமியின் சடலத்தை வாங்குவோம் என கூறி, பெற்றோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட அவர்களுடன் எம்எல்ஏ ரத்தின சபாபதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதை ஆணைய உறுப்பினரான டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரும் வெளியிட்டார் இரங்கல் செய்தி.இது தொடர்பாக உடனே என்கவுண்டர் வேண்டும் என்ற குரல்கள் வழக்கம்போல் உணர்ச்சிவசப்பட்டு ஒலிக்க ஆரம்பித்துவிட என்கவுன்டர் நடந்தால் என்ன நடக்கும்? இந்தச் சூழலில் போலீசார் சிலர் மறுபடியும் ஹீரோவாவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் சட்டத்தின் அடி நாதத்தை குறைத்துக் கொண்டிருக்கும் மக்கள் இங்கே தேவைப்படுவதெல்லாம் பாதகம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதைவிட முக்கியமான விஷயம், வழக்கு விரைவாக நடத்தப்பட்டு உரிய காலத்திற்குள் நீதி வழங்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. குற்றப்பத்திரிகை தாக்கல்.. செஷன்ஸ் ஹைகோர்ட் சுப்ரீம் கோர்ட் ஜனாதிபதி கருணை மனு. இதுபோன்ற கட்டங்களை எவ்வளவு விரைவாக கடந்து தண்டனை குற்றவாளிகள் அடைகிறார்கள் என்பதுதான் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். நாட்டின் நீதி பரிபாலனம் மீது நம்பிக்கையையும் மரியாதையையும் சேர்க்கும். காவல்துறையும் நீதித்துறையும் இதை உரியவகையில் செய்தாலே போதும்.அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச்சட்ட சீர் உதவித்தொகையாக ரூ.8.25 லட்சம் வழங்கப்படும் - ஆட்சியர் உமாமகேஸ்வரி.அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது.சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் பழனிசாமி. அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.தகவல்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...