முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிமக்களுக்குப் பயன்படும்படியான டிஜிட்டல் மாற்றம் அமைந்ததாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்திய குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது: ரவிசங்கர் பிரசாத் அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்தியக் குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் சட்டம், நீதித் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், இப்போதைய நோய்த் தாக்குதல் சூழ்நிலையில், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற மூன்று வசதிகள் காரணமாக, மக்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற முடிகிறது, மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது, தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினிகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க முடிகிறது, நோயாளிகள் தொலைவில் இருந்தே ஆலோசனை பெற முடிகிறது, இந்தியாவில் எளிதில் அணுக முடியாத தொலை தூரங்களில் இருக்கும் விவசாயிகளும் பிரதமரின்-கிசான் திட்டப் பயன்களை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெற முடிகிறது என்று கூறினார்.      டிஜிட்டல் பாரத் - தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் துறையின் அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே, சில மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், திரு. நந்தன் நில்கேணி, அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், அமைச்சகங்கள், தொழில்துறை மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் இருந்து இதில் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.      கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயணம், அதிகாரம் அளித்தல், உள்ளடங்கிய வளர்ச்சி, டிஜிட்டல் நிலைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முன்னேறி வந்துள்ளது. இந்தியக் குடிமக்களின் அடையாள மேலாண்மையில் ஆதார், நேரடி ஆதாயப் பரிமாற்றம், பொதுச் சேவை மையங்கள், டிஜிலாக்கர், செல்போன் அடிப்படையிலான உமாங் (UMANG) சேவைகள், MyGov, ஜீவன் பிரமான் முதல் UPI வரையிலான தளங்கள், ஆயுஷ்மான் பாரத், இ-ஹாஸ்பிடல், பிரதமரின்-கிசான், இணையவழி சந்தை (e-NAM), மண் வள அட்டைகள், ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய கல்வி உதவித் தொகை முனையம், இ-பாடசாலா மற்றும் பிற சேவைகள் மூலம் மக்களின் வாழ்வில் அனைத்து வகைகளிலும் ஆக்கபூர்வமான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. `தேசிய செயற்கை நுண்ணறிவு முனையம்'  மற்றும் `இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு தளங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. செயற்கைப் புலனறிதல் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்கிட இவை தொடங்கப்பட்டன. கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் ஆரோக்கிய சேது, இ-சஞ்சீவனி, MyGov மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தகவல்களை அளித்தல் மூலமாக டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.      2014இல் இ-சேவைகளின் எண்ணிக்கை 2,463 ஆக இருந்த நிலையில் 2020 மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 3,858 ஆக உயர்ந்திருப்பதாகவும், தினசரி பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 2014இல் 66 லட்சமாக இருந்த நிலையில், 2020இல் 16.3 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 125.7 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், 4,216 கோடி அத்தாட்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ``56 அமைச்சகங்களின் மூலம் 426 திட்டங்களுக்கான பணப்பயன்கள் ரூ.11.1 லட்சம் கோடி அளவுக்கு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் ரூ.1.7 லட்சம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 38.73 கோடி பயனாளிகள் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் பயன் பெற்றுள்ளனர். இத் திட்டத்தில் பயனாளிகளின் கணக்கில் ரூ.1.33 லட்சம் கோடி உள்ளது என்றார் அவர். கைபேசி மற்றும் இணைய வசதிகளை முறையே 117 கோடி மற்றும் 68.8 கோடி பயனாளர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். 2015 ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட டிஜிலாக்கர் சேவையில் 378 கோடி ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய-யுக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த கைபேசிச் செயலி (UMANG) மூலம் 860க்கும் மேற்பட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதில் 3 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்பு நிலையை அளிக்க வசதியாக MyGov தளம் தொடங்கப்பட்டது. அதில் 1.17 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு உதவியாக இது உள்ளது என்று அவர் கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...